Saturday, 9 May 2015

பெண்மையின் தன்மை..


Tuesday, 5 May 2015

படிக்காத மனைவி. - பாகம் 3 - பிறந்த நாள்

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).


பிறந்த நாள்


அருளானந்தன், சொல்வி, ஹன்னா மூவரது பிறந்த நாட்களும் வந்து போனது இவர்கள் நோர்வேயில் இருந்தபோது. 
ஆனால் அவை ஹன்னாவின் வீட்டிலும் சொல்வியின் வீட்டிலும்தான் சில நண்பர்களோடு அருளானந்தனையும் அழைத்துக் கொண்டாடுவார்கள் மிக எளிதாக.
ஒவ்வொரு மாணவரது பிறந்த நாளும் வரும், ஆனால் ஒவ்வொருவரும் தத்தம் வசதிக்கேற்ப நண்பர்களை அழைத்துக் கொண்டாடுவார்கள்... 
அருளானந்தன் தனது அறையில் ஹன்னா, சொல்வியோடு சில நண்பர்களோடும் கொண்டாடுவான். சொல்வியே கேக் (cake) கொண்டு வருவாள். 

எந்தக் கொண்டாடமாக இருந்தாலும் எவ்வளவு எளிமையாக இருந்தாலும் மாணவர்கள் கூடும் கொண்டாட்டமாக இருந்தால்; அங்கே அதிர வைக்கும் இசையும் மது பானமும் முதலிடம் வகிக்கும்.

அருளானந்தன் தினம் தினம் மதுபானம் குடித்து, குடிபோதையில்த் திளைக்கும் குணம் இல்லாவிட்டாலும்; வைபவங்கள், கொண்டாட்டங்களில் மிதமாக மது அருந்தும் குணங் கொண்டவன். அதாவது, நிதானம் தவறாத அளவுக்குக் குடிப்பான். ஹன்னாவைப் போல வெள்ளிக்கிழமையானதும் போத்தலும் கையுமாக ஞாயிறு மாலைவரை திரிவதில்லை. சொல்வியும் ஹன்னாவோடு திரிந்தாலும் அளவோடு எதையும் செய்பவள்.

சுவீடன் வந்த பின்பு ஒரே ஒரு பிறந்த தினம் இருவரும் ஒருவருக்கும் சொல்லாமல், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் வாழ்த்துச் சொல்லிக் கொண்டார்கள்.

ஆனால், அருளனந்தனின் இந்தப் பிறந்த தினத்தை பெரிதாகக் கொண்டாட சொல்வி நினைத்தாள்.
அதற்கும் காரணங்கள் உண்டு.

சொல்வி தனது நிட்சயதார்த்தத்தை அறிவிக்க இது ஒரு சந்தர்ப்பம் என நினைத்தாள்...
அதை விட, இன்னொரு காரணமும் இருந்தது.

ஒரு நாள் தனது சுவீடன் நாட்டுச் சிநேகிதியிடம்; அருளானந்தன் அணிவித்த மோதிரத்தைக் காட்டினாள். அந்த சிநேகிதியின் தந்தை நகைக் கடை வைத்திருக்கிறார். ஆதாலால், அவளுக்கு நகைகளைப் பார்த்து அவற்றை மதிப்பிடத் தெரிந்திருந்தது. அவள்; அந்த சுவீடன் நாட்டுச் சிநேகிதி பார்த்தவுடனேயே அந்த மோதிரம் ஒரு ஐயாயிரம் குறோணருக்கு மேல் வரும். கடைக்கு வந்தால், சரியான மதிப்பீடு சொல்லலாம் என்றதும் சொல்வி ஆச்சர்யத்திலாழ்ந்தாள்.

அந்த மோதிரத்தை சொல்வி ஒரு ஆயிரம் குறோணர் அல்லது அதற்குள்ளேதான் வரும் என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால், என்றுமே அருளானந்தனைக் கேட்டதில்லை.

நகைக்கடையில், அவள் சிநேகிதியின் தந்தை, அந்த மோதிரம் எண்ணாயிரம் தொடக்கம் பத்தாயிரம் வரை விலை பெறும் என்றதும், சொல்வியால் தனது கண்களையும் காதுகளையும் நம்ப முடியாமலிருந்தது.

சர்வ சாதாரணமாக, லஸன்யாவுள் புதைத்து என்னிடம் தந்த அந்த மோதிரத்தின் விலை பத்தாயிரம் குறோணரா என வியந்து போனாள்.

தன்னிடத்தில் அருளானந்தன் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறான் என்பதை அந்த மோதிரம் மட்டுமல்ல, அவளது சிநேகிதியும் சொன்னாள்.

"ஹேய்... அவன் உன்னை உயிருக்குயிரா நேசிக்கிறான்... You are one of the luckiest girl on the earth... (நீ இந்த உலகத்திலிருக்கும் அதிர்ஷ்டக்காரிகளுள் ஒருத்தி...)" என்றாள்.

அருளானந்தனிடம் தனது எண்ணத்தை முதலிலேயே வெளிப்படுத்தினால், அவன் அதை மறுத்து விடக் கூடும்; என்பதால் இரகசிமாகவே எல்லாவற்றையும் செய்தாள் சொல்வி, அவளது சிநேகித, சிநேகிதியருடன்.

அருளானந்தனின் பிறந்த தினத்தன்று, சொல்வி காலையில் எழுந்து அருகே படுத்திருந்த அருளானந்தனை எழுப்பி, அவனது உதடுகளில் ஒரு முத்தம் கொடுத்து,

"Happy Birthday my dearest sweetie...(பிறந்தின வாழ்த்துக்கள் எனதன்பே...)" என்றாள்.
"Oh... Thank You... Thank You..." என்ற அருளானந்தன், அவளை இழுத்து திரும்ப ஒரு முத்தம் கொடுத்தான்.
சொல்வியின் முகத்தை தன் இரு கைகளாலும் ஏந்திப் பிடித்து,

"இண்டைக்கு யூனிவேசிற்றிக்குப் (university) போகம... எங்கயாவது ஊர் சுத்துவமா..." எனக்கேட்டான்.

உடனே, சொல்வி

"ஏன்... " என்றாள் ஒன்றும் தெரியாதவள் போல

"ஹேய்... இண்டைக்கு என்ர பேத்டே (Birthday)... எங்கயாவது போய் ஜாலியா இருந்திட்டு, றெஸ்ரோரன்ற்றில (Restaurant) சாப்பிட்டுட்டு, ஒரு மூவி (movie) பாத்தட்டு வருவம்" என செல்லமாகச் சொன்னான்...

"இண்டைக்கு யூனிவெசிற்றியில எனக்கு நிறைய வேலை இருக்கு. உன்னோட ஊர் சுத்த எனக்கு நேரமில்ல" என்றாள் எது வித சலனமுமில்லாமல் சொல்வி.

சொல்வியை இழுத்து தனக்கு மேல் படுக்க வைத்த அருளானந்தன், தனது இரு கைகளாலும் கால்களாலும் சொல்வியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு,

"நான் விடமாட்டன்... " என்று சொல்லி சொல்வியின் உதடுகளில் முத்தமிட்டான்.

சொல்வி, அருளானந்தனையே வைத்த கண் வாங்காமல் சில நொடிகள் பார்த்திருந்து விட்டு,
"சரி... பின்னேரம்... யூனிவேசிற்றிக்குப் போக வேணும்... நீயும் வர வேணும்... நிறைய றிசேச் (research) வேலை இருக்கு..." என்றாள் சொல்வி.

"OK... OK... பின்னேரம் போவம்... இப்ப இரண்டு பேரும் கொஞ்ச நேரம் இப்பிடியே படுத்திருப்பம்... பிறகு..." என அருளானந்தன் முடிப்பதற்குள்

"ஆ... நான் மாட்டன் அதுக்கு... அ...அ... இப்ப இல்லை..." எனப் பிடிவாதமாக மறுத்தாள் சொல்வி...

"ஹேய்... இண்டைக்கு என்ர பேத்டே... இண்டைக்குக்கூட ஒரு ஸ்பெஷல் (special)... இல்லையா..." எனக் கெஞ்சினான் அருளானந்தன்.

"ஸ்பெஷல்... எல்லாம் இரவுக்கு... இப்ப நல்ல பிள்ளை மாதிரி எழும்பிக் குளிச்சிட்டு வா... வெளியில போவம்..." எனச் செல்லமாகக் அவனது கன்னத்தில்க் கிள்ளி, ஒரு செல்லத் தட்டு தட்டி விட்டு, அருளானந்தனைப் பார்த்து கண் சிமிட்டினாள்.

"இப்பிடியே ஒரு பத்து நிமிஷம் படுத்திருப்பம் பிறகு... எழும்புவம்..." என்றான்.

"ஆ... ஹ... நீ பிறகு ஏதாவது குசும்பு செய்வாய்... நான் விட்டுத் தந்துடுவன்... முடியாது... என்ர செல்லமெல்லே... இரவுக்கு..." என அவனது உதடுகளில் இன்னொரு முத்தமிட்டுவிட்டு, அருளானந்தனின் கைகளை விலக்கி விட்டு எழுந்தாள் சொல்வி.

அருளானந்தன் போர்த்திருந்த போர்வையைப் பார்த்து விட்டு சிரித்தாள் சொல்வி.

"ஹேய்... இவ்வளவு அழகான தேவதை போல ஒரு பெண் பக்கத்தில படுத்திருந்தா, முனிவனா இருந்தாலுங்கூட, உடம்பெல்லாம் சூடேறியிடும்..." என்றான் அருளானந்தன் ஏக்கமாக சொல்வியைப் பார்த்தபடி

"சரி, முனிவரே... போய் நல்ல குளிர் தண்ணீல குளியுங்க... சூடு தணியட்டும்..." என்றாள், சொல்வி மிக நளினத்தோடு.

சொன்ன சொல்வி, குளியலறையை நோக்கி நடந்தாள்.

"நானும் வருவன் உன்னோட குளிக்க..." என்றபடி எழுந்து சொல்வியின் பின்னால் நடந்தான் அருளனாந்தன்.

"அங்க வந்து... தப்பு தண்டா... பண்ணூறேல்ல..." என்றபடி சொல்வி குளியலறைக்குள் நுளைய, அருளானந்தனும் அவளைப் பின் தொடர்ந்தான்.

சொல்வி பல் துலக்கியபடியே பின்னால் வந்த அருளானந்தனை முகம் பார்க்கும் கண்ணாடியில்ப் பார்த்து,

"இப்ப எங்கே போவம்...?" என்றாள்.

அவளது இடையை இரு கைகளாலும் கட்டிப்பிடித்து இறுக அணைத்த அருளானந்தன்,

"முதல்ல... போய் எங்கேயாவது... சாப்பிட்டுட்டு அதுக்குப்பிறகு யோசிப்பம்..." எனச் சொல்லி சொல்வியின் கழுத்தில் முத்தமிட்டான் அருளானந்தன்.

கூச்சலும் கும்மாளமுமாக ஒரு முக்கால் மணி நேரம் தண்ணீரில் குழந்தைகள் போல விளையாடிக் குளித்து முடித்த பின் சொல்வி உடலைத் துவட்டும்போது,

"நீ அப்பிடியே marshmallow (சீமைத்துத்தி) மாதிரி இருக்கிறாய்... உன்னை அப்பிடியே கடிச்சுச் சாப்பிட வேணும் போல கிடக்கு" என சொல்வியைப் பார்த்து அருளானந்தன் சொன்னான்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் அப்படி இருவரும் சேர்ந்து குளிப்பதில்லை, அப்படி இருவரும் சேர்ந்து குளித்தால்; ஒவ்வொரு தின் பண்டத்தின் பெயரைச் சொல்லி சொல்வியைக் கடிப்பதுபோல குறும்பு செய்வது அருளானந்தனின் வழமை.

இருந்தாலும், ஒவ்வொரு முறையும் சொல்வி அதை இரசித்து தனது உடலை அவனது பார்வையிலிருந்து மறைப்பாள். அந்தச் சின்னச் சின்ன சிலுமிசங்களை சொல்வி மிக இரசிப்பாள்.

"ஆ... ஹ... இப்ப என்னைச் சாப்பிட்டா... இரவுக்கு ருசிக்கிறதுக்கு என்ன பண்ணுவாய்...?" என தனது உடம்பை அந்தத் துவாயால் சுற்றிக் கொண்டு அறைக்கு வந்தாள்.

தன்பின்னால் தொடர்ந்து அருளானந்தனும் வருவானெனத் தெரியும்; இருந்தும் துவாயை கதிரையில் போட்டுவிட்டு, தனது மார்புக் கச்சையை (BRA) எடுத்து அணிய முற்படுகையில், அருளானந்தன் வந்து அவளை திருப்பி இறுகக் கட்டியணைத்து, அவளது இளஞ்சிவப்பு உதடுகளில் முத்தமிட்டான்.

இப்படியெல்லாம் தினமும் நடப்பதில்லை... ஏனெனில் அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்து, பல்கலைக் கழகம் செல்பவர்கள். இப்படிப் பட்ட சரச விளையாட்டுக்களுக்கெல்லாம் அன்றாடம் நேரம் கிடைப்பதில்லை.

மாலை வேளையென்றால், உடல் களைப்பால் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்திருந்து தொலைக்காட்சியைப் பார்த்து விட்டு அப்படியே நித்திரைக்குச் சென்று விடுவது வழமை.
உடற்கூறுகளின் ஆதிக்கம் மிகும்போது, அருளானந்தனே சரசத்தில் ஆரம்பிப்பான். ஆனால், சொல்வியால் அன்று இயலாதென்றால் விட்டுவிடுவான்.

சுவீடன் வந்த ஆரம்பத்தில் இருவரும் உடலுறவில் முயல்கள் மாதிரித்தான் இருந்தார்கள். ஆனால் நாள்ச் செல்ல, நாள்ச் செல்ல அது குறைந்து விட்டது.

அவர்கள் இருவரும் படிப்பில் முழுக்கவனமும் செலுத்த ஆரம்பித்த போது, உடலுறவு வாரத்தில் இரு முறை அல்லது மூன்று முறை எனக் குறைந்து போனது.

சனி ஞாயிறுகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை... ஒன்றில் அருளானந்தனின் நண்பர்கள் வெள்ளி மாலையிலிருந்து அட்டகாசம் போடுவார்கள் அல்லது சொல்வியின் சிநேகிதிகள் சொல்வியின் அறையில் அட்டகாசம் போடுவார்கள். ஆக, இவர்களுக்கு இப்படி நேரம் கிடைப்பது எப்போதாவதுதான்.

அனேகமாக, அருளனந்தனின் நணபர்கள் என்றால் தமிழர்தான் அவனது அறைக்கு வந்து கும்மாளமடிப்பார்கள், தமிழ்ப் படங்கள் பார்ப்பார்கள். அப்போதெல்லாம் சொல்வி தனித்துப்போவள் .

எப்போதுமே அருளனாந்தனின் தமிழ் நண்பர்கள் கதையில் தகாத வார்த்தைப் பிரயோகம் சரளமாக இருக்கும். முதலில் சொல்வி இருக்கிறாளென பயந்தார்கள். ஏதாவது தகாத வார்த்தை சொன்னால் நாக்கைக் கடித்துக் கொள்வார்கள். ஆனால் போகப் போக அவர்கள் எல்லா வார்த்தைகளையும் ஒரு கூச்சமும் இல்லாமல் அவள் முன்னிலையிலேயே கொட்டி முழக்குவார்கள். அருளானந்தன் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் சுவீடன் மொழியிலோ அல்லது நோர்வே மொழியிலோ கதைக்கமாட்டார்கள்.

சொல்விக்கு தனது அறையில் இருக்கப் பிடிக்காது. காரணம் இவர்களது அட்டகாசமான சிரிப்பொலியும் கதையும்  அவளை அருளானந்தனின் அறைக்கு வரச் செய்துவிடும்.

அருளானந்தன் இயன்றளவு கதைகளை, நகைச்சுவைத் துணுக்குகளை சொல்விக்கு மொழி பெயர்ப்பான். ஆனால் எல்லாவற்றையும் அல்ல. எல்லாவற்றையும் அவளுக்குச் சொல்ல முடியாமலும் இருக்கும்.

இது சொல்விக்கு பெரியதொரு ஏக்கத்தையும் அச்சத்தையும் உண்டாக்கியது. அதாவது அவள் இலங்கை சென்றால், யாழ்ப்பாணம் சென்றால் அங்கே எல்லோரும் ஆங்கிலம் கதைப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. அதை அருளானந்தனே சொல்லியிருக்கிறான். அவள் யாழ்ப்பாணம் சென்றால், அங்கே வருவோர் போவோர், சொந்த பந்தங்களுடன் உரையாட அவளால் முடியாமல்ப் போய்விடும். அருளானந்தனின் தம்பி - தங்கை, பெற்றோர் கூட அவளுடன் உரையாடக் கஷ்டப் படுவார்கள். இதனால் அவனுடைய உறவுகள் அவளை ஒதுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்தப் பயம் சொல்வியைக் குடைய ஆரம்பித்தது. அவள் அதற்கு என்ன வழி என யோசித்தாள். தமிழ் கற்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற முடிவுக்கு வந்தாள் சொல்வி.

அந்த நேரம் அவள் தமிழ் கற்பதற்கு பாடசாலைகளில் தமிழ்ப் பாடம் என்று ஒன்று இல்லை. இன்று தமிழ்க் கல்விக் கூடங்களே ஆங்காங்கு இயங்குகின்றன.
பல அரச பாடசாலைகளில் தமிழ்ப் பாடமும் ஒன்றாக புகுத்தியிருக்கிறார்கள் இன்று.

ஒரு நாள் பல்கலைக் கழகத்திலிருந்து சொல்வி வந்தபோது, எதிரே அருளானந்தனுக்குப் பழக்கமான அந்த இந்தியப் பெண்ணும் அவளுடைய மகளும் வந்தார்கள். இவர்களிடம் கேட்டால், அவர்களது பிள்ளைகள் தமிழ் கற்கச் செல்லுமிடத்திற்கு தானும் செல்லலாம் என நினைத்து சொல்வி அவர்களிடம் கதைத்தாள்.

அந்த இந்தியப் பெண்; தானேதான் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் தமிழ் கற்பிப்பதாகவும், தான் சொல்விக்கு உதவுவதாகவும் சொன்னாள்.
ஆபத்தில் திரெபதைக்கு உதவிய கண்ணன் போல; சொல்வி அந்த இந்தியத் தமிழ் பெண்ணை நினைத்தாள்.

சொல்வி தமிழ் கற்பதோடு மட்டுமல்லாமல், இந்திய உணவுவகைகளையும் சமைக்கக் கற்றுக் கொண்டிருந்தாள். ஆனால் இந்த விடயம் அருளானந்தனுக்குத் தெரியாது.

சொல்வி, அருளானந்தனை அழைத்துக் கொண்டு கலாசாலையின் ஒரு கூடத்திற்கு வந்தாள்.

"என்ன... ஏன்... இங்க போறாய்?" என்றான் மிகுந்த குழப்பத்துடன்.

"மொனிக்காவிட்ட கொஞ்ச றீடிங்ஸ் (Readings - Data - தரவுகள்) எடுக்க வெணும்... எல்லாம் இந்த றூம்ல (room) வைச்சிருக்கிறன் எண்டவள்... சும்மா கத்தாமல் வா..." எனச் சொல்லிக் கொண்டே, சொல்வி அந்தச் சிறிய மாணவர் சேர்ந்திருந்து படிக்கும் அறையைத் திறந்தாள்.

"ஐயோ... இருட்டாயிருக்கு..." என சொல்லிக் கொண்டு சொல்வி பின்னே வர;

"சுவிச் (swich) கதவுக்குப் பக்கத்திலதானே இருக்கு..." எனச் சொல்லியபடி அந்த அறையினுள் நுளைந்து, அந்த மின் விளக்குகள் ஆளியை அமுக்கினான் அருளானந்தன்.

வெளிச்சம் வரும் வரை காத்திருந்த அருளானந்தனதும் சொல்வியினதும் சிநேகித சிநேகிதியர் ஒரு சேர

"SURPISE!!" என கோஷமிட்டனர். பின்னர்...
"HAPPY BIRTH DAY TO YOU!!!" என கோஷித்தனர்.

அருளானந்தன் திகைத்துப் போய் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றாலும், சுதாகரித்துக் கொண்டு;

"THANK YOU... THANK YOU..." எனக் கூறிக் கொண்டு, மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் வலது கையை வைத்து தலை குனிந்து அவர்களது வாழ்த்துக்களை ஏற்றான்.

பின்னர், அவன் பின்னால் புன்னகையோடு நின்ற சொல்வியைத் திரும்பிப் பார்த்து;

"இதெல்லாத்துக்கும் காரணம் நீதானே... வா... உனக்கு இருக்கு... உனக்கு..." என சொல்வியைப் பார்த்து சொல்லும் போதே,

"Happy Birth Day To You Arul..." என்றபடி நண்பர்கள் வந்து பரிசுப் பொருள்களைக் கொடுக்க, பிறந்த நாள் கொண்டாட்டம் ஆரம்பமானது.

விருந்துண்ணும்போதே, ஒவ்வொருவராக நண்பர்கள் அருளானந்தனைப் பற்றியம் சொல்வியைப் பற்றியும் சிலேடையாகவும் நகைச்சுவையாகவும் பேசினர். பின்னர் வாழ்த்தினர்.

இடையில் சொல்வி எழுந்து,

"Happy Birthday to You Arul! (இனிய பிறந்ததின வாழ்த்துக்கள் அருள்!!) எனக்கு அருளானந்தனோடு கடந்த ஐந்து வருடங்களாக பழக்கம் இருந்து வருகிறது..." என சொல்வி தொடருமுன்...
"Come On... We know that... Tell us some juicy stuff... (இங்க... பார்... உதெல்லாம் எங்களுக்குத் தெரிஞ்சது... ஏதாவது கிளுகிளுப்பாய்ச் சொல்லு...)" என்றது ஒரு குரல் அப்போது ஒட்டு மொத்தமாக எல்லோரும்,
"Yeah... tell us something juicy... (ஒ,.. ஏதாவது கிளுகிளுப்பாய்ச்சொல்லு...)" என்றனர்.

சொல்வியின் முகம் நாணத்தால் சிவந்தது. இருந்தும் சளைக்காதவளாய்

"Come On... guys... It is our private... Isn't it... Come On...(இங்க பாருங்க... நண்பர்களே... அது எங்களோட அந்தரங்கம்... இல்லையா... )" என அருளானந்தனையும் பார்த்து ஏனையோரையும் பார்த்து நாணத்தோடும் சிவந்த முகத்துடனும் சொன்னாள் சொல்வி.

"We didn't ask anything on the bed... We ask something other than that... (நாங்கள் கட்டில்ல நடக்கிறதைக் கேட்கேல்ல... அதை விட வேறேதாவது...)" என்றது ஒரு பெண் குரல்.

"Come On... You girls always talk very intimate stuff... Come On... some outlines... Please Sølvi give us some cookies... (இங்க பாருங்க... நீங்க பெண்கள் எப்பவும் மிக அந்தரங்கமானவை கதைப்பீர்கள்... தயவு செய்து சொல்வி கொஞ்சம் கோடிட்டு காட்டு... ஏதாவது... சின்னச் சின்ன இனிப்புத்துண்டுகள்... தயவு காட்டு...)" என்றான் அவர்களில் ஒருவன்.

இப்போதும் சொல்வி ஏதாவது அவர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல வேண்டும் என எதிர்ப்பார்த்தார்கள்.

அருளானந்தன் சிரித்தபடி செந்திராட்சை இரசத்தை உருசித்துக் கொண்டு, 'மாட்டிக்கிட்டியா... நல்லது என்னட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா... இதுக்கெல்லாம் நான் உடன்பட்டிருக்கவே மாட்டன்...' என நினைத்துக் கொண்டான்.
சொல்வியோ விட்டுக் கொடுக்காமல்...
"நண்பர்களே... நீங்கள் எதுவேணும் எண்டாலும் அருளைக் கேளுங்கள்...  " என அருளானந்தனைப் பார்த்து ஒரு சிரிப்புடன் சொன்னாள் சொல்வி.

"No... No... இல்லை... இல்லை... அவன் எதுவும் எதைப் பற்றியும் எங்களுக்குச் சொல்லமாட்டான்... அவன் சொன்னான் "நான் சொல்விக்கு மதிப்பும் மரியாதையும் தருகிறேன். ஆதலால் நான் சொல்வி சம்பந்தப்பட்ட எதுவும் சொல்ல மாட்டேன்" என்று விட்டான்... please Sølvi..."
என்றான் ஒரு நண்பன்.

"Oh... so... sweeeet..." என்ற சொல்வி குனிந்து, அருளானந்தனின் கழுத்தைத் தன் வலது கையால் மிக ஆதரவாக அணைத்து அருளானந்தனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.  பின்னர் நிமிர்ந்து,

"அருளானந்தனிடம் எனக்குப் பிடித்ததது நிறைய இருக்கிறது. அவற்றில் இதுவும் ஒன்று... நான் உண்மையில்க் கொடுத்து வைத்தவள். " எனும் போது, அனைவரும்

"He is a great guy..." என்றார்கள். அருளானந்தன் சிரித்தபடி எழுந்து தலைதாழ்த்தினான்.

"OK... Sølvi... tell us something..." என்றது அதே பழைய குரல்.

"OK... OK... " என்று சொல்வி ஆரம்பித்தபோது, அனைவரும் அமைதியாயினர். சொல்வியின் வாயிலிருந்து முத்துக்கள் உதிரப் போகின்றன என்பது போல அனைவரும் அவளையே பார்த்தார்கள்.

"அருள் ஒரு நல்ல காதலர்...(Arul is a great lover...)" எனும் போது,
"படுக்கையிலா... அல்லது... பொதுவாகவா...?" என்றான் ஒருவன்
"படுக்கையிலும்... பொதுவாகவும்..." என்று சொல்வி சொல்லும் போதே சொல்வியின் முகம் செஞ்சாந்து பூசிக் கொண்டது. சொல்வி முகத்தை மூடிக் கொண்டாள்.
"Oh... Oh... Ha..." என அங்கேயிருந்த பெண் மாணவிகளெல்லாம் ஆச்சர்யப்பட்டு ஏக்கப் பெருமூச்செறிந்தனர்.

"வா...  தனிய... உன்னைக் குடைஞ்சு, எல்லா விஷயங்களையும் எடுக்கிறன்..." என்றாள் சொல்வியின் சிநேகிதி ஒருத்தி.
சொல்வி வெட்கத்தோடு அவளைப் பார்த்தாள். அனைவரும் சொல்வியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தன்னைச் சுதாகரித்தவளாக சொல்வி தொடர்ந்தாள்.


தொடரும்...

Friday, 1 May 2015

Friday, 24 April 2015

படிக்காத மனைவி. - பாகம் - 2 லஸன்யாவும் மோதிரமும்

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna). 

லஸன்யாவும் மோதிரமும் 



சுவீடனில் இரண்டாவது வருடத்திலிருந்து சொல்வியின் எண்ணங்கள் கதைகள் எல்லாமுமே திருமணம் திருமணத்தின் பின் என்பனவும் அருளானந்தனின் தம்பி தங்கை எப்படித் தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்பனவுமாக இருந்தது.

ஒரு நாள் அதையும் கேட்டாள் சொல்வி.

"ஹேய் அருள்... உன்ர அம்மா அப்பா, தம்பி தங்கையெல்லாம் எப்பிடி..." என்று மிகுந்த ஏக்கத்துடன் கேட்டபடி சமையலறைக்கு வந்தாள் சொல்வி.

அந்த சமையலறை, இவர்களுக்கு மட்டும் தனியானதல்ல... அது அந்த தளத்திலிருக்கும் அறுவருக்குப் பொது. இவர்களிருவரோடு இன்னும் மூன்று ஆண் மாணவர்களும் ஒரு பெண் மாணவியும் அந்தச் சமையலறையைப் பகிர்ந்து கொள்ள வேணடும்.
ஒவ்வொரு அறையுடனும் கழிகலன் (Commode) நீர் விசிறியுடனான குளியல்க் கூடம் (Shower with Cabinet) முகம் கழுவுவதற்கென ஒரு கழுவு தொட்டி (Washing sink) என்பவற்றுடன் ஒரு ஒருசேர் குளியலறை இருக்கும்.
மாணவர்கள் இருப்பது, படுப்பது, படிப்பது, கும்மாளமடிப்பது, உடலுறவு கொள்வது, தொலைக்காட்சி பார்ப்பது எல்லாமுமே சற்று விசாலமான ஒரே ஒரு அறையில்த்தான்.

அந்தச் சமையலறையில் அருளானந்தனோடு அந்த தளத்தில்க் குடியிருக்கும் சுவீடன் நாட்டு பெண் மாணவியும் பாண் துண்டங்களுக்கு மேல் பாலாடைக்கட்டிகளை (Cheese slices) வைத்து சூழை (Oven) அடுப்பில் வைத்துச் சூடாக்கிக் கொண்டிருந்தாள்.

சமையலறையில் சத்தமாகக் கேட்டுக் கொண்டே வந்த சொல்வியைப் பார்த்துப் புன்னகை செய்தாள் அந்த சுவீடன் நாட்டு மாணவி.

"என்ன செய்யுறது... ஒருத்தரைக் காதலிச்சா... அவருடைய சொந்த பந்தங்கள் எப்பிடி இருப்பினம் எண்டு கேட்டு தெரிஞ்சுட்டா நல்லதுதானே..." என அந்த சுவீடன் நாட்டு மாணவியைப் பார்த்து சொல்லிக் கொண்டு அருளானந்தனின் கழுத்தைக் கைகளால் வளைத்து கன்னத்தில் ஒரு முத்தமிட்டாள் சொல்வி.

அந்த சுவீடன் நாட்டு மாணவியோ கண் ஜாடையால்

"இவரா... உன்ர... காதலன்..." எனக் கேட்டாள்.

சொல்வியும் தலையையசைத்து வலது கண்ணை மூடித்திறந்து ஆமோதித்தாள்.

அந்த சுவீடன் நாட்டு மாணவி அவசர அவசரமாக பாண் துண்டுகளை சற்றே உருகிய பாலடைக் கட்டித் துண்டுகளுடன் (Cheese slices) சூழையிலிருந்து எடுத்துக் கொண்டு சமையலறையை விட்டு நகர்ந்தாள்.

அவள் செல்லும் போது,
அருளானந்தன் பாராத வண்ணம், சொல்வியைப் பார்த்து தனது இடது கையைத் தூக்கி பெருவிரலையும் சுட்டு விரலையும் சேர்த்து ஒரு வட்டம் போலாக்கி மற்றைய மூன்று விரல்களையும் அடுக்காகவும் நேராகவும் வைத்து சொல்விக்குக் காட்டி
"நல்ல தெரிவு (Good choice)" என சத்தம் வரதா வாறு வாயால் சொன்னாள்.
"Thank you..." என அதே போல சொன்ன சொல்வி...

மீண்டும் அருளானந்தனை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு
"My would-be..." என்றாள்.

"என்ன..." எனத் திரும்பினான் அருளானந்தன்.

அப்போ, சுவீடன் நாட்டு மாணவி அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

"இங்கிதம் தெரிந்தவள்..." என்ற அருளானந்தன்.

தொடர்ந்து...

"என்ன சொன்னாய்..." என சொல்வியைக் கேட்டான்.

"உன்ர பெற்றோர், தம்பி, தங்கை எப்பிடி இருப்பினம் எண்டு கேட்டன்..." என்றாள் சொல்வி.

"அவயளுக்கு ரெண்டு கால், ரெண்டு கை, ஒரு தலை, ஒரு உடம்பு இருக்கும்... அதில்ல; இப்ப என்ன சொன்னனி..." என இரு கைகளாலும் சொல்வியின் இடுப்பைச் சுற்றி தன்னோடு அணைத்தபடி கேட்டான்.

"அதுவா... மொனிக்கா, அந்த சுவீடன் girl, சொன்னாள் நல்ல தெரிவு எண்டு... அதான் அவளுக்குத் Thank you... எண்டு சொல்லி my would-be எண்டன் " என சொல்வி சொன்ன போது,

அருளானந்தன் சிரித்தான்...

"ஏன் பிழையா..." என அங்கலாய்ப்புடன் கேட்டாள் சொல்வி.

"ம்... பிழைதான்..." எனச் சாதாரணமாகச் சொல்லி விட்டு (lasagne) லஸன்யாவை துண்டங்களாக வெட்டி கோப்பைகளில் எடுத்தான்.

அதிர்ந்து போய், ஸ்தம்பித்துப் போய் பேச்சில்லாமல் நின்றாள் சொல்வி...
சொல்வியின் விழி மடல்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.

கோப்பைகளோடு லஸன்யாவை எடுத்துக் கொண்டு திரும்பிய அருளானந்தன் சொல்வியைப் பார்த்து அதிர்ந்து போனான்.

"ஹே....ய்... என்ன நடந்தது ஏன் அழுகிறாய்..." எனக் கேட்டுக் கொண்டே கோப்பைகளை அங்கே இருந்த மேசைமேல் வைத்துவிட்டு, சொல்வியை இரு கைகளாலும் அணைத்தபடி

"அழாத... என்ன நடந்தது... அவள் ஏதாவது சொன்னவளே... இரு வாறன் மொனிக்கா உன்னைத் துவைக்கிறன் பார்..." என அனாவசியமாக அந்த சுவீடன் நாட்டு மாணவிமேல் ஆத்திரப்பட்டான் அருளானந்தன்.

அப்போது, தனது அழுகையை ஒருவாறு அடக்கி விம்மியவாறே,

"நீ என்னைக் காதலிக்கிறாயா... " எனக் கேட்டாள் சொல்வி...

அருளானந்தன், சொல்வியின் இடையிலிருந்த தன் இரு கைகளாலும் சொல்வியின் முகத்தை ஆதரவோடு பிடித்து கொண்டு, அவளது கண்களைப் பார்த்து,

"இதில என்ன சந்தேகம்... I love You... I love You... I love You..." எனப் பல முறை சொல்லிவிட்டு,

"நாங்கதானே நாலு பிள்ளையள் பெறப்போறம்... அதெல்லாம் நான்... என்ன... அந்த சுவீடன் காறியோடயா  பெறப்போறன்... ஹ...?" என்றான் அருளானந்தன்.

இப்போது சொல்வி, வழிந்த கண்ணீரோடு சோகமாக சிரித்தாள்.
பின்னர்,
அருளானந்தனின் இரு தோழ்களையும் பிடித்து இழுத்து அவனது உதடுகளில் ஒரு ஈர முத்தம் கொடுத்தாள்.

"உன்ர முத்தம் உப்புக் கரிக்குது..." என்றான் குறும்புடன் அருளானந்தன்.
அருளானந்தனின் தோழ்களில் இருந்த கைகளை எடுத்து, இரண்டு கைகளாலும் 'தும், தும், தும்' என அவன் மார்பில் குத்திவிட்டு;

"Stupid... that is my tears... (முட்டாள்... அது என்ர கண்ணீர்...)" என்று ஒரு சோகச் சிரிப்புடனே சொன்னாள்...

அருளானந்தன் அவளது கண்ணீரைத் துடைத்து விட்டு;

"இப்ப எதுக்கு இதெல்லாம்... எதுக்காக அழுதனி..." என ஆச்சரியத்தோடு கேட்டான் அருளானந்தன்.

"இல்ல... நீ என்ர would-be எண்டு நான் சொல்லேக்க  நீ 'அது பிழை' எண்டாய் அதுதான் எனக்கு உடனே அழுகை வந்துட்டுது... இவ்வளவு நாளும் என்னென்னெல்லாமோ கதைச்சம்... எப்பியெல்லாமோ பழகினம்... எங்கெயெல்லாமோ சுத்தினம்... அதெல்லாம் வெறும் உடலுறவுக்குத்தானோ... எண்டு நினைச்சன் உடனே அழுகை வந்துட்டுது..." என்றாள் மிகுந்த சோகத்தோடு.

"Oh... my God... இப்ப... நாங்க... போய்... லஸன்யாவைச் சாப்பிட்டுட்டு... எல்லாம் விளக்கமாய்ச் சொல்றன் வா..." என ஆதரவோடு ஒரு கோப்பையை அவளிடம் தந்துவிட்டு வலது கையால் அவளை அணைத்தபடி இடது கையில் மற்றைய கோப்பையுடன் அறைக்கு அவளை கூட்டி வந்தான்.

"அது சரி... எங்கே அந்த would-be எண்ட சொல்லை கேட்டனி... அல்லது..." என அருளானந்தன் முடிக்கு முன், இடை மறித்த சொல்வி;

"ஒரு இந்தியன் லவ் ஸ்ரோறி (Love story) வாசிச்சன். லைபிறறில (Library) இருந்த ஒரு மகஸீன்ல (magazine)அதிலதான்... " சொலவி தொடர விடாமல்

"ஐயோ... ஐயோ... சிலர் சரியான அர்த்தம் தெரியாம எல்லாம் எழுதி வைப்பாங்க... வா... எல்லாம் விளக்கமா சொல்றன்..." என்றபடி அவளுடன் நடந்தான் அருளானந்தன்.

அறைக்கு வந்த இருவரும், இரட்டைக் கட்டிலாக்க கூடிய அந்த சோபா (Sofa) வில் அமர்ந்து கோப்பைகளை எதிரே இருந்த கூடத்து மேசை (Coffee Table) மேல் வைத்து முள்ளுக் கரண்டிகளை எடுத்தார்கள்.

ஆனால், சொல்வி முள்ளுக்கரண்டியை கையில் பிடித்த வண்ணம் அருளானந்தனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அருளானந்தன் தனது கோப்பையில் இருந்த லஸன்யாவில் ஒரு சிறிய துண்டு வெட்டி எடுத்த பின், சொல்வியைப் பார்த்தான்.

"ஹேய்... என்ன... சாப்பிடாம என்னைப் பாத்துக் கொண்டிருக்கிறாய்...?" என்றவன், தனது முள்ளுக்கரண்டியில் இருந்த லஸன்யாவை அவளுக்கு நீட்டி...

"இந்தா சாப்பிடு... பிறகு எல்லாம் சொல்றன்..." என்றான்.

சொல்வியும் வாயை திறந்து அவன் கொடுத்த லஸன்யாவை அப்படியே வாங்கி மென்றாள்...
அந்த லஸன்யாத் துண்டை அவள் வாயில் வைத்த அருளானந்தன் சொல்வியைப் பார்த்துக்கொண்டிருந்தான்...

அப்போது,

"எங்ங... ஏகோ..." என வாய் நிறைய லஸன்யாவோடு சொற்களை இடறினாள் சொல்வி. அருளானந்தன் புன்னகையோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சொல்வி அருளானந்தனை வியப்புடனும் விழிகளை அகல விரித்து அச்சத்துடனும் பார்த்து விட்டு, தனது வலது கையின் பெருவிரலையும் சுட்டு விரலையும் தனது வாயுள் வைத்து கம்பியாலான ஒரு வளையத்தை வாயிலிருந்து எடுத்தவள், மிகுதி லஸன்யாவை வாயிலிருந்து காகிதக் கைக்குட்டையில் உமிழ்ந்து விட்டு,

"அருள்... என்ன இது..." என லஸன்யாவால் மூடியிருந்த வளையத்தை இன்னொரு காகிதக் கைக்குட்டையால் துடைத்தபடி கேட்டாள்.

அப்போது அருளானந்தன்  தனது இடது முழங்காலைத் தரையில் வைத்து, வலது முழங்காலை மடித்து சோபா முன்னே தரையில் இருந்து கொண்டு,
லஸன்யாவை அந்த வளையத்திலிருந்து துடைத்துக் கொண்டிருந்த சொல்வியின் இரண்டு கைகளையும் அவளது மார்புக்கு நேராக பிடித்து கொண்ட போது, சொல்வி அருளானந்தனைப் பார்த்தாள்.

"சொல்வி... நான் உன்னை இதயபூர்வமாகக் காதலிக்கிறன்... நீ இல்லாம... நான் இனி சந்தோஷத்தை நினைச்சும் பார்க்க முடியாது... என்னை நீ திருமணம் செய்து கொள்வாயா..." எனக் கேட்டு முடிப்பதற்குள்...

சொல்வியின் கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றாக கன்னத்தில் வழிய,
"Yes...Yes... Yes... I will marry you..." (ஓம்... ஓம்... ஓம்... நான் உன்னை திருமணம் செய்கிறேன்...) என்றாள் கண்களில் கண்ணீர் வழிந்தோட விம்மியபடியே.

அப்படியே சொல்வி முன்னே வந்து, அருளானந்தனைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டாள்.

பின்னர், எழுந்து குளியலறைக்கு ஓடினாள்...

"ஹேய்... எங்க போறாய்..." என்றான் அருளானந்தன்.
"நான் மோதிரத்தைக் கழுவிப் பாக்கப் போறன்..." என்றாள் சொல்வி குளியலறைக்கு ஓடிக்கொண்டு...

சொல்வி அந்த வைர மோதிரத்தை கழுவி எடுக்கையில், அருளானந்தன் அவள் பின்னால் வந்து அவளது இடையில் இரு கைகளையும் வைத்துப் பிடித்து அவளை திருப்பினான்...

அந்த மோதிரத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த சொல்வியின் நெற்றியில் முத்தமிட்ட அருளானந்தன்; அந்த மோதிரத்தை அவளிடமிருந்து வாங்கி அவளது வலது கையின் மோதிர விரலில் அணிந்தான்.

"நல்ல அளவாயிருக்கு... எப்பிடி... " என்ற சொல்வி திரும்பி கண்ணாடியில் தனது வலது கையின் பின்புறத்தை அந்த வைர மோதிரத்தோடு பார்த்து...

"Beautiful... So, beautiful... I love it... Thank you..." (அழகாகயிருக்கு... நல்ல அழகாகயிருக்கு... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... நன்றி...) என்ற படி திரும்பி அருளானந்தனைக் இறுகக் கட்டியணைத்து ஆழமாக முத்தமிட்டாள்...

பின்னர் இருவரும் சோபாவை அடைந்தபோது,

"அருள் எனக்கு... உடம்பெல்லாம் என்னவோ செய்யுது... எனக்குப் பசிக்கேல்ல..." என்றபடி அருளானந்தனின் மார்பில் சாய்ந்தாள் சொல்வி.
"ஹே... ய்...  இன்ப அதிர்ச்சியைத் தாங்க இயலாம உடம்பு தள்ளாடுது போல..." என்ற அருளனாந்தன், சொல்வியை இறுக அணைத்தான்...

சொல்வி அருளானந்தனின் மார்பில் முகத்தைப் புதைத்தபடி

"ம்... ம்..." என்றாள்.

சொல்வியின் முதுகை ஆதரவாகத் தடவி சொல்வியை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த அருளானந்தன்;

"ஹேய்... வெளில கொஞ்ச நேரம் நடந்து போயிட்டு வருவம்... அப்ப உனக்கு ஆறுதலா இருக்கும்..." எனச் சொல்லி சொல்வியின் தலையில் முத்தமிட்டான் அருளானந்தன்.

அதற்கும் சொல்வி,

"ம்... ம்... " என்றாளே தவிர அசையவில்லை.

"எழும்பு போய் முகத்தைக் கழுவியிட்டு வா... எழும்பு..." என்றான் அருளானந்தன்.
அப்போது சொல்வி ஒருவாறாக தலை நிமிர்த்தி அருளானந்தனைப் பார்த்தாள்; பின்னர் தனது வலது கையை எடுத்த அவன் மார்பில் வைத்து அந்த மோதிரத்தைப் பார்த்து, பின்னர் அருளானந்தனைப் பார்க்க; அருளானந்தன் சொல்வியைப் பார்த்துச் சிரித்தான்.

"Thank You..." என்றவள், அருளானந்தனின் முத்தத்தை எதிர்பார்த்து சிறிது முகத்தை மேலே உயர்த்த, அதையுணர்ந்த அருளானந்தன் குனிந்த அவளை ஒரு குழந்தையை அணைப்பது போல அணைத்து, அவளது ரோஜாப் பூ நிற உதடுகளில் கனிவான ஒரு முத்தம் தந்தான்.

சொல்வியும் அருளானந்தனும் வெளியே அந்த விடுதிப் புல் வெளியில் இள மாலை நிலவொளியில் ஒருவரை ஒருவர் அணைத்தபடி நடந்தனர்.

அந்த நிலவொளியில் தனது வலது கையை உயர்த்தி அந்த மோதிரத்தைப் பார்த்து;

"Beauuuuutiful... I looooove it... (அழகாகாகாகா இருக்கு... எனக்கு ரொம்ம்ம்ப பிடிச்சிருக்கு...)" என்ற சொல்வி நடந்து கொண்டே அருளானந்தனை அணைத்து முத்தமிட்டாள்...

"ஹெய்... அருள்... Sri Lanka வில... எப்பிடி என்கேஜ்மென்ற் engagement (நிட்சயதார்த்தம்) செய்வீங்க..." எனக் கேட்டாள் சொல்வி.

"பொதுவா அப்பா அம்மா பார்க்கிறது நிட்சயம் செய்யிறதுதான் வழமை... ஆனா ரெண்டு பேர் காதலிச்சாலும்... முறையோட போய் நிட்சயம் பண்ணுவினம்... மோதிரம் போடுறது... றிஜிஸ்ரர் (பதிவு - Register) செய்யிற நேரம்... அதுக்குப் பிறகு கலியாணம் செய்யேக்க பொம்பிளைக்கு தாலியை மாப்பிள கட்டுவார்..."
என்ற அருளானந்தன் தொடர்ந்து,

"இப்ப நீ சொல்லலாம் நான் உன்ர would-be எண்டு என்கேஜ்மென்ருக்கு முதல் would-be எண்டு சொல்றேல்ல... ..."

"ஓ... அதாலதான் பிழையெண்டு சொன்னியா..." என்றவள் தொடர்ந்து

"நானும் தாலி கட்டலாமா..." என ஆசையுடன் அருளானந்தனைப் பார்த்துக் கேட்டாள் சொல்வி.

"கட்டாயமெண்டில்ல... உனக்கு விருப்மெண்டா நான் கட்டிவிடுறன்..." எனச் சிரித்தபடி சொன்னான்.

"எனக்குத் தமிழ் முறைப்படி கலியாணம் கட்ட விருப்பம் சாறி கட்டி, தலை நிறைய பூ வைச்சு, நிறைய நகையள் போட்டு..." என மிகுந்த ஆசையுடன் சொல்வி தொடர இடைமறித்த அருளானந்தன்...

"தமிழ்க்கலியாணம் எங்கே பாத்தனீ...?" என்றான் ஆச்சர்யத்துடன்.

"ஒரு இந்தியப் படத்தில... So... Beautiful wedding ceremony (நல்ல அழகான திருமண வைபவம்)" என்றாள் சொல்வி

"அப்ப உன்ர அப்பா அம்மா அத விரும்புவினமா..." என்றான் அருளானந்தன்.
"அதுதான் தெரியேல்ல... ஒரு மாதிரி கதைச்சுப்பாப்பம்..." என மிகுந்த ஆதங்கத்துடன் சொன்னாள்.

"ஹேய்... I have an idea (எனக்கொரு யோசனை வருது...) நாங்கள் Sri Lanka வில ரெண்டு கலியாணம் ரெண்டு நாள் செய்வம்... ஒண்டைச் சொல்லுவம் றிஜிஸ்ரர் மரீஜ் (register marriage) எண்டு... மற்றதைச் சொல்லுவம் சடங்கு கல்யாணமெண்டு... அதையே... உன்ர அப்பா அம்மாவுக்காக சேர்ச் (Church) இலயும்... உன்ர ஆசைக்கு ஒரு தமிழ்க் கல்யாணம் ஒரு ஹோல் இலயும் செய்தா என்ன... எப்பிடி என்ர ஐடியா..." என்றான் அருளானந்தன் மிகுந்த துள்ளலுடன்...

"Really... " என ஆச்சர்யபட்டாள் சொல்வி.

"ஏன் அது... அப்பிடி ரெண்டு கலியாணம்... எனக்கு விளங்கேல்ல...?" என ஆர்வத்துடன் கேட்டாள் சொல்வி.

"எங்கட கலாச்சார முறைப்படி ஒரு கலியாணம்தான். ஐயர் மந்திரம் சொல்லி... மணவறையில தாலி கட்டுறது. ஆனா, இங்லிஷ் (English) காரன் வந்திருக்கேக்க; கவண்மென்ரிலயும் பதிய வேணும் எண்டுட்டான். இங்லிஷ் காரன் எங்கட மரபுக் கல்யாணத்தை ஏற்றுக் கொள்ளேலாது எண்டுட்டான்... அது அப்பிடியே தொடர்ந்து வந்து... இப்ப அதுக்குப் பேர் றிஜிஸ்ரர் மரீஜ் (Register Marriage) எண்டு அதையும் எங்கட கல்யாணத்தில ஒரு அங்கமா சேத்திருக்கினம்..." என அருளானந்தன் தொடருமுன்.

"அது, இப்ப எனக்கு நல்ல வசதியாப் போச்சு..." என்றாள் சொல்வி

"ம்... உன்ர ஆசையை நல்ல வடிவா செய்து முடிக்கிறன் போதுமே...?" என்றபடி சொல்வியை இறுக அணைத்தபடி சொல்வியோடு நடந்தான் அருளானந்தன்.

"அப்ப உனக்கு எண்டு ஒரு ஆசை இல்லையா... கலியாணத்தில... இப்பிடிச் செய்ய வேணும்... இப்படி அலங்கரிக்க வேணும் எண்டெல்லாம்... ஆசை இல்லையா... " என அருளானந்தனைப் பார்த்துக் கேட்டாள் சொல்வி.

அருளானந்தன் சொல்வியை நிறுத்தி இறுக அணைத்து, அவளது கண்களைப் பார்த்து,

"என்ர ஆசையெல்லாம் நீ என்னோடையே இருக்க வேணும்... எண்டதுதான்... அது போதும்..." எனச் சொல்லி சொல்வியை ஆழமாக முத்தமிட்டான்.



தொடரும்...

இந்தக் கதையின் முதலாவது பாகத்தை வாசிப்பதற்கு இணைப்பு கீழே...

Wednesday, 15 April 2015

படிக்காத மனைவி. - பாகம் - 1 நட்பும் காதலும்

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

சம்பவம் என்னவோ முழுக்க முழுக்க உண்மை; ஆனால், பெயர்கள், வயதுகள், இடங்கள், சம்பவம் நடந்த காலகட்டம், உப பாத்திர சொருகல்கள் எல்லாம் எனது கற்பனை...
முதலில் அருளானந்தனின் ஆரம்பகால வாழ்க்கை; நோர்வேயிலும் சுவீடனிலும் எப்படி இருந்தது எனச் சொல்கிறேன்... அதைச் சொன்னால்த்தான் அருளானந்தனின் மன நிலை எப்படி இருந்தது என அறிந்து கொள்ளமுடியும்.



நட்பும் காதலும்.



அருளானந்தன் தனது இருபதாவது வயதில் நோர்வேயிற்கு மேற்படிப்புக்காக எழுபத்தெட்டாம் ஆண்டு வந்தவன்.

நான்கு வருட பல்கலைக்கழகப் படிப்பு முடித்த பின், சுவீடன் நாட்டு பல்கலைக் - கழகங்களில் ஒன்று அருளானந்தனை ஆராய்ச்சிப் படிப்பிற்காக அழைத்தது. இரண்டு வருடப் படிப்பு நான்கு வருடங்களானது. கலைமானிப் பட்டமும் பெற்றுக் கொண்டான்.

அவனது படிப்பில் முதலில் அவனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna). ஹன்னாவை அருளானந்தனுக்கு அவ்வளாகப் பிடிப்பதில்லை. காரணம் அவளது பொறுப்பின்மை, குடிப்பழக்கம், படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என காரணங்களுக்குக் குறைவில்லை.

அருளானந்தனுக்கு சொல்வியை பிடித்ததற்கு இன்னும் ஒரு காரணம்...
சொல்வி என்ற பெயர் ஓரளவிற்கு செல்வி என்ற தமிழ்ப் பெயருடன் ஒத்திருந்ததும்.

ஆக, ஒருநாள் அவளிடமே அவளது பெயருக்கு என்ன பொருள் எனக்- கேட்டுவிட்டான்.
"சொல்வி என்றால் காடு!! " என்றுவிட்டு அருளானந்தனைப் பார்த்தாள். 

"ஹா... " என வாயை விரித்து ஆச்சரியத்துடன் பார்த்தான்.

சொல்வியும் ஹன்னாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அருளானந்தனுக்கு ஏன் கேட்டோம் என்றாகி விட்டது...
பின்னர் சொல்வியே சொன்னாள்.

"காடும் ஒரு பொருள்... ஆனால் வெள்ளி என்பதும் ஒரு பொருள்..." என்று அவள் சொன்ன போது,

"ஓ... யா... சொல்வ் என்றால் வெள்ளி... " என வியந்தான் அருளானந்தன்.

"நான் கருவானது அம்மாவும் அப்பாவும் காட்டில் இருக்கும் எங்களது விடுமுறை குடிசைக்கு (cottage) சென்ற நேரம்... ஆக, அதுவும் எனக்குப் பொருந்தும்..." என்றாள்.

"தமிழில் செல்வி எனப் பெயருள்ளது... அதனால்த்தான் கேட்டேன்..." என்று அருளனாந்தன் சொன்ன போது;

அந்த இரு பெண்களுமே
"ஓ... அதனர்த்தம் என்ன" என ஆச்சர்யத்தோடு கேட்டார்கள்.

"செல்வி என்றால் பல அர்த்தங்களுண்டு. திருமணமாகத பெண்ணைச் சுட்டும் பெயர்... அதாவது உதாரணமாக செல்வி ஹன்னா என்பது போல... அடுத்து மகிழ்ச்சி, சந்தோஷம், வளமான, என்பவற்றோடு மகள் என்றும் பொருள்..." என்றான் அருளானந்தன்...

"அப்படியானால்... திருமணமான பின் பெயர் மாற்ற வேண்டுமா அது சிக்கலல்லவோ??" எனக் கேட்டாள் ஹன்னா.

"இல்லை... ஒரு பெண்ணின் பெயர் செல்வி என்றால்... அவள் திருமணமான பின் அவளது சுட்டுப் பெயர் திருமதி என மாறும்... இங்கே (f)ப்றோ(ø)க்கன் (frøken) என திருமணமாகாத பெண்ணையும் (f)ப்றுஎ (Frue) எனத் திருமணமான பெண்ணையும் சுட்டுப் பெயர்களால் அழைப்பதில்லையா... அது போல... ஆனல் செல்வி என்ற அவளது இடு பெயர் மாறாது..." என விளக்கினான் அருளானந்தன்.

பாரபட்சம் காட்டாமல்,

"ஹன்னா என்றால் என்ன பொருள்... " எனக் கேட்டான் அருளானந்தன்.

"ஹன்னா ஹீப்ரூ இலிருந்து வந்தது... கடவுள் கிருபை என்பததர்த்தம்..." என்றாள் ஹன்னா.

"அருளானந்தன் என்றால் என்ன அர்த்தம்? " சொல்வி கேட்டாள்
"அருள் என்றால்... Blessing of God கடவுளின் ஆசி... ஆனந்தன் என்றால்... மகிழ்ச்சியானவன்... ஆக, அருளானந்தன் என்றால் கடவுளின் ஆசியால் மகிழ்ச்சியாய் இருப்பவன் என்பதர்த்தம்" என்று அருளானந்தன் சொல்லி முடிக்கையில்...

"Of cours you are... (நிட்சயமாக அது போலவே இருக்கிறாய்...)" என்றாள் சொல்வி.

"Thank You..."என நன்றி தெரிவித்தான் அருளானந்தன்.


சொல்வி என்ற பெயர் செல்வி என்ற தமிழ்ப் பெயரை ஒத்ததாக இருந்தால், அருளானந்தனுக்கு அந்தப் பெயரும் வெகுவாகப் பிடித்திருந்தது.

ஹன்னாவினுடைய தந்தை தனது நிறுவனத்தில் மூவருக்கும் வேலை தருவதாச்சொன்னார். ஆனால் அருளானந்தன் கலைமானிப் பட்டப் படிப்பைத் தொடரத் தீர்மானித்து, ஹன்னா வின் தந்தையினது அழைப்பை நிராகரித்தான்.

அதேபோல, சொல்வியும் ஹன்னாவினுடைய தந்தையின் அழைப்பை ஏற்றுக் கொள்ளாது, பட்டப் படிப்பை அருளானந்தனோடு பயில விரும்பினாள். சுவீடன் நாட்டு அந்தப் பல்கலைக்கழகமும் இருவரையும் அனுமதி தந்து வரவேற்றது.

சொல்வி அருளானந்தனோடு கலைமானிப் பட்டப்படிப்பைத் தொடர அவனோடு சுவீடன் வந்தது; அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இருவரும் ஒரே மாடியில் ஒரே தளத்தில் பக்கம் பக்கமான அறைகளில் தங்கியிருந்து படித்தார்கள்.

இவர்கள் இருவருக்குள்ளும் மிக இறுக்கமான பிணைப்பு ஏற்பட்டது. ஏன் அப்படியெல்லாம் சுற்றி வளைக்க வேண்டும்... இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள்.

-- இங்கே காதல் அல்லது திருமணம் என்ற பந்தங்கள் இல்லாமலே பாலியல் உறவை ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வைத்துக் கொள்ளலாம். தவறே இல்லை.  இன்றைய இளைஞர் கட்சிப் பேச்சாளர்; கலவியியல்க் கல்வி நோர்வே நாட்டின் பாடத்திட்டத்தில் செய்முறைப் பயிற்சியோடு உள்ளடக்கப் பட வேண்டும் எனக் கூறியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆக, அருளானந்தனும் சொல்வியும் உடலுறவு கொள்வது, விடுமுறை காலங்களில் இடங்கள் சுற்றிப் பார்ப்பது என அவர்களது நான்கு வருட கலைமானிப் படிப்புக் காலமும் மிக இனிமையாகக் கழிந்தது. அவர்களிருவருக்கும் பொதுவான விடயங்கள் என்றால்; கல்வியிலிருந்து கலவி உட்பட எல்லாமுமே...

ஒரு நாள் சொல்வி அதையும் அருளானந்தனிடம் சொன்னாள்.
"ஹெய்... எனக்கு பிடிச்சதெல்லாம் உனக்கும் பிடிச்சிருக்கு... உனக்கு பிடிச்சதெல்லாம் எனக்கும் பிடிச்சிருக்கு... எங்கள் இரண்டு பேரையும் சொர்க்கத்திலயே சேர்த்து வைக்க முடிவு செய்திருக்கு போல...'match made in heaven'" என்று சொல்வி சொல்ல;

"எனக்கு கார உணவு பிடிக்கும்... உன்னால் அதை உண்ண முடியாதே..." என பதில் சொன்னான் அருளானந்தன்.

"எனக்கு பிடிக்காதெண்டு நான் சொல்லேல்லயே... நீ கொஞ்சம் உறைப்பை குறைச்சு கறி சமைச்சா நானும் 'enjoy' பண்ணுவன்..." எனக் கூறி அவன் மடியிலமர்ந்து செல்லமாக அவன் கன்னத்தில் கிள்ளி விட்டு உதடுகளில் முத்தமிட்டாள்.

ஹன்னாவின் குறுக்கீடு இல்லாமல் இருவரும் சுவீடன் வந்தபோதே அவர்களுக்குள் காதல் வளர ஆரம்பித்தது. நோர்வேயில் இருந்தபோது, இருவரிடமும் ஒரு ஈர்ப்பு இருந்தது, என்னவோ உண்மை.

சுவீடனில் இருவரும் தனித்தனி அறை விலாசங்கள் வைத்திருந்தாலும், சொல்வி, அருளானந்தனின் அறையில்த்தான் எல்லாமுமே.
உண்பது, உறங்குவது, உடலுறவு கொள்வது, தொலைக்காட்சி பார்ப்பது, படிப்பது எல்லாம்.

ஒரு நாள் குழந்தைகள் காப்பகங்களைப் பற்றிய ஒரு விவரணம் தொலைக்காட்சியில் காண்பித்தார்கள். அப்போது, ஒரு ஆபிரிக்க - சுவீடன் குழந்தையைக் காட்டினார்கள். அதைக் கண்டவுடன் சொல்வி,

"மிக அழகான குழந்தை என்ன..." என்று விட்டு உடனேயே

"எனக்கும் உனக்கும் குழந்தைகள் பிறந்தால் இப்படி அழகாகவும் அறிவுடையவர்களாகவும் இருப்பார்கள் இல்லையா..." என அருளானந்தனின் மார்பில் சாய்ந்திருந்து தொலைகாட்சி பார்த்த சொல்வி தலை நிமிர்த்தி அருளானந்தனைப் பார்த்துக் கேட்டாள்.

அருளானந்தன், சொல்வியின் முகத்தை இரு கைகளாலும் அள்ளியெடுத்து கனிவான ஒரு முத்தம் அவளது உதடுகளில் பதித்தான். பின்னர்

"நானும் அதைத்தான் யோசிச்சனான்..." என்ற அருளானந்தன்,

"அது சரி... குழந்தைகள் என்றால்... எத்தனை குழந்தைகள் பெறப் போகிறோம்?" என அருளானந்தான் சொல்வியை இழுத்து மடியில் படுக்க வைத்துக் கேட்டான்.

நிமிர்ந்து அருளானந்தனின் மடியில் படுத்திருந்த சொல்வி, அருளானந்தனை பார்த்து, வலது கையில் பெரு விரலை மடித்துக் கொண்டு மிகுதி நான்கு விரல்களையும் விரித்துக் காட்டி விட்டு நாணம் மேலிட, சொல்வியின் முகமும் குங்குமாகச் சிவக்க இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டாள்.

"ஹேய்... உன்ர உடம்பு தாங்காது... ரெண்டு போதும்..." எனச் சொல்லிய படியே அவளது இரு கைகளையும் எடுத்து அவற்றிற்கு முத்தங் கொடுத்தான் அருளானந்தன்.

"ஊகும்... அதெல்லாம் முடியாது... ரெண்டு ஆணும் ரெண்டு பெண்ணும்... " எனச் சொல்லி விட்டு, நாணம் இரத்தச் சிவப்பை சொல்வியின் முகத்தில் பூச, உடனேயே திரும்பி அருளானந்தனின் அடி வயிற்றில் முகத்தைப் புதைத்துக் கொணடாள் சொல்வி...

அருளானந்தன், சொல்வியின் தங்க நிறத் தலை மயிர்களை விரல்களால்க் கோதிவிட்ட படி,
"உனக்கு விருப்பமெண்டா... எனக்கும் விருப்பம்தான்... எனக்கென்ன விதைக்கிற மட்டுந்தானே... சுமக்கிறது... அறுவடை செய்யிறது... பிள்ளயளை நல்ல பிள்ளயளா வளர்க்கிறது... எல்லாம் உன் பொறுப்பு..." என்று சொல்லி சொல்வியின் சிவந்த கன்னத்தில் முத்தமிட்டான்.

உடனே சொல்வி எழுந்து, அருளானந்தனைப் பார்த்து;
"அப்பா ஸ்தானத்தில இருந்து என்ன செய்ய வேணுமோ அவ்வளவும் நீ தான் செய்ய வேணும்... இது Sri Lanka இல்ல..." என அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டு, அருளானந்தனைப் பார்த்தாள்.

"நீ என்னென்ன சொல்றியோ அதெல்லாம் நான் செய்யிறன்..." எனச் சொல்லிவிட்டு, சொல்வியை இறுக அணைத்து ஆழமாக முத்தமிட்டான் அருளானந்தன்.



தொடரும்...

Tuesday, 14 April 2015