Wednesday, 6 April 2016

படிக்காத மனைவி - பாகம் 8 ஓ...! உன்ர விருந்தாளி வந்துட்டாரா...?

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).


திருமணம் என்றால், உலகிலுள்ள எல்லாப் பெண்களுக்கும் ஒரு இனம் புரியாத உன்னதமான உணர்வலை உடலை ஆட்கொள்ளும்.


ஓ...! உன்ர ‘விருந்தாளி’ வந்துட்டாரா...?


“I also wanted to talk with someone there... When you agree, I couldn't hold my feelings inside... (நானும் யாராவது அங்க ஒருவரோட கதைக்கவேணும் எண்டு இருந்தனான்... நீ ஓம் எண்டவுடனே என்னை நான் கட்டுப் படுத்தேலாமப் போச்சு...)” என்றாள் சொல்வி இப்போதும் தழுதழுக்கும் குரலுடன்...

சொல்விக்கு, அருளானந்தனின் தங்கையோடு கதைக்கப் போகிறோம்... அவள் தன்னை ஏற்றுக் கொள்ளவாளா... என்ற அச்சமும் அதே நேரம், ஆனந்தப் பரவசமுமே அவளுக்கு அழுகையைக் கொண்டு வந்தது.

சொல்வி, சோபாவிலேயே (Sofa) அருளானந்தனின் குளிர்ப் போர்வையால் போர்த்தபடி உறங்கிவிட்டாள். 
அருளானந்தன் அன்றே மாலை ஏழு மணியளவில் வீடு வந்ததும், சொல்வியைப் பார்த்தான். சொல்வி ஒரு குழந்தையைப் போல உறங்கிக் கொண்டிருந்தாள்.

‘இவளுக்கு என்ன நடந்தது, எனது போர்வை எனது சாரத்தை தனக்கு மேலே போர்த்திப் படுத்திருக்கிறாள்... ஏழு மணிக்கெல்லாம் இவ்வளவு நித்திரையா...’ என தனக்குள் கேட்டுக் கொண்ட அருளானந்தன், உடை மாற்றி இரு குவளைகள் நிரம்பிய கோப்பியோடு வந்து, சொல்விக்கருகில் அமர்ந்தான்.

அப்போது கண் விழித்த சொல்வி,

“எனக்கு இப்ப ஏலாது அருள்... கொஞ்ச நேரம் நித்திரை கொள்ள விடு...” என கொஞ்சும் குரலில் சொல்லிவிட்டு, கைகளை உயர்த்தி சோம்பல் முறித்த பின் அருளானந்தனின் போர்வையை இழுத்து நுகர்ந்து பார்த்து,

“Oh... your smell is sooo good, My sweet Asian Hercules...(ஓ... உனது வாசம் நல்லாயிருக்கு, என்ர ஆசிய ஹேர்க்குலீஸ்... )”  என நித்திரையில் சொல்லிக் கொண்டும், அவனது போர்வையால் உடலை இறுக்கமாகப் போர்த்திக் கொண்டும், அவனது தலையணையை மார்போடு அணைத்துக் கொண்டும், திரும்பிப் படுத்து நித்திரையிலாழ்ந்தாள் சொல்வி.

அவளது செய்கையைப் பார்த்து இரசித்து தனக்குள் சிரித்துக் கொண்டிருந்தான் அருளானந்தன்.

தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கி, சத்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த அருளானந்தன் இடையிடையே சொல்வியையும் பார்த்தான். அவள் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தாள்.

“ I am so sorry Sølvi...( என்னை மன்னிச்சுடு சொல்வி...) உன்னை நினைக்கவே நேரமில்லாமல்ப் போயிட்டுது... நீ பக்கத்தில இருந்தும் உன்னைப் பாக்கம இருந்துட்டன்...” 
என மிக தாழ்ந்த குரலில் சொல்லிய அருளானந்தன்
“ stupid... stupid... STUPID me... (முட்டாள்... முட்டாள்... நானொரு முட்டாள்...)” என சிறிது சத்தமாகவே சொன்னான்.

அப்போது,

“ம்... ம்... ம்... என்ன...” என சொல்வி தலையை அசைக்காமல், கண்களைத் திறக்காமல்க் கேட்டாள்.

“ஒண்டுமில்லை... நித்திரை கொள்... நாங்கள் நாளைக்குக் கதைப்பம்...” எனச் சொல்லிக் கொண்டு, அவளது போர்வையைக் கழுத்து வரை இழுத்துப் போர்த்தியவன், ஆசையோடு கன்னத்தில் ஒரு முத்தமிட எத்தனித்து, பாதியில் நிறுத்திக் கொண்டான் அருளானந்தன்.
‘அவளை இப்ப கொஞ்சி அவளின்ர நித்திரையைக் குழப்ப வேண்டாம்...’ என மனதுக்குள் எண்ணியவனாக, சற்று நேரம் சொல்வி நித்திரை செய்யும் அழகையே பார்த்த வண்ணம் இருந்தான் அருளானந்தான்.

‘ My  Sweet sweet angel...(என்ர இனிய அன்புத்தேவதை...)’ எனத் தனக்குள் சொல்லிக் கொண்டு எழுந்தான்.

‘பசிக்குது... ஏதாவது செய்து வச்சிருக்கிறாளா பாப்பம்...’ எனத் தனக்குள் தமிழில்ச் சொல்லிக் கொண்டே அடுக்களைக்கு வந்தான் அருளானந்தன்.

ஆனால்,

அங்கே எதுவித உணவும் சமைக்கதாதிருந்தது கண்டு திகைத்துப் போய்,

‘இவள் இண்டைக்கு சாப்பிடவே இல்லையா... ’ என தனக்குள் கேட்டுக் கொண்டு பாணை எடுத்து துண்டங்களாக வெட்டி, அதன் மேல் சதுரச் சீவல்களாக வெட்டிய பாலாடைக்கட்டிகளை (Sliced Cheese) வைத்து சூழையில் வைத்து அது சூடாகி பாலாடைக் கட்டிகள் பாண் துண்டங்கள் மேல் உருகும் வரை காத்திருந்தான் அருளானந்தன்.

அப்போது, 

நித்திரையிலிருந்து கண் விழித்த சொல்வி எதிர்க் கதிரையில் அருளானந்தனின் பயணப் பையும் கால்ச்சட்டை(trousers), உட்கால்ச்சட்டை(Boxer shorts), மேலங்கி (Shirt), குளிர் மேலங்கி(Sweater) எல்லாம் இரைந்து கிடந்ததைப் பார்த்தாள். 
அருளானந்தன் வீட்டில் இருக்கும்போது, சாரமும் ஒரு மேலங்கியும் அணிவான். நித்திரை செய்யும்போது, மேலங்கியும் அணிவதில்லை. முதல்நாள் சுவீடனில் அருளானந்தனை இந்தச் சாரத்தோடு பார்த்தபோது, சொல்வி சிரித்தாள்.

“என்ன சிரிக்கிறாய்... இதுதான் எங்கட வீட்டு உடுப்பு...” என்றான் அருளானந்தன்.

“இல்ல... இதுமாதிரி இங்க நாங்கள் கோடை காலத்தில உடுத்துவம்... இது பெண்களின்ர உடுப்பு, ஆனா... நீ கட்டியிருக்கிற மாதிரி உருளை வடிவா இருக்காது... ஒரு நீளத் துண்டை ஒரு தரம் சுத்தி இடுப்பில ஒரு ஊசி குத்துவம்... அதுபோல இருந்ததால சிரிச்சன்” என்றாள்.

“ஓ... நானும் கண்டிருக்கிறன்... அப்பிடியும் ஒரு உடுப்பு அங்க ஆம்பிளயள் உடுத்துறவயள்... அதுக்குப் பேர் ‘லுங்கி’; இதுக்குப் பேர் ‘சாரம்’ ” என விளக்கினான் அருளானந்தன்.

“இனி நான் கோடைகாலத்தில உன்ர ‘சறங்’ கட்டலாம்...” என்றாள் மிகுந்த ஆசையுடன் சொல்வி.

“அது ‘சறங்’ இல்லை... சரம். ச - ர - ம். ” எனச் சொல்வியைத்திருத்தினான்.

சொல்வியும் அப்படியே சொல்லிப்பார்த்தாள்
“ச - ர - ம்...” 
சொல்வி தமிழ் சொல்லும் அழகைப் பார்த்தவண்ணம் நின்றிருந்தான் அருளானந்தன்.

“ச - ர - ம்... சறம்” எனச் சொல்வி சொன்ன போது, அருளானந்தன் சிரித்தான். 
“என்ன அருள்... சரியாத்தானே சொல்றன் ” என சொலவி, குழந்தை போல சொன்னாள்.

“பறவாயில்லை... இப்போதைக்கு ஏற்றுக் கொள்ளலாம்” என்றவன் தொடர்ந்து,

“நீ... தாராளம கட்டு... நான் தேவையெண்டா இதை வெட்டி ஒரு நீளத் துணியா தைச்சுத் தாறன் இங்க பெம்பிளயள் கட்டுற மாதிரி...” என அருளாந்தன் சொல்ல இடை மறித்த சொல்வி,

“இல்ல... இல்ல... வேண்டாம்... வேண்டாம்...” என்றாள்

“ஏன்...” என சொல்வியைப் பார்த்தான் அருளானந்தன்.

“இல்ல... இங்க பெம்பிளயள் கட்டுறது காத்தடிச்சா... இடுப்பு வரையும் திறக்கும். இப்பிடியே இருந்தா நல்லது...” எனச் சொல்லி நாணத்துடன் அருளானந்தனைப் பார்த்தாள் சொல்வி.

“அதுதானே எங்களுக்கு வேணும்...” என்று சொல்லி சொல்வியைப் பார்த்துக் கண்ணடித்தான் அருளானந்தன்.

“ஹேய்... உன்னை... ” எனச் சொல்லிக் கொண்டு வந்த சொல்வி அருளானந்தனைக் கட்டிப்பிடித்து, முத்தமிட்டு,

“நீ... அப்பிடி ஒருத்தியையும் பாக்கக் கூடாது... இது என்ர ஆணை...” என்றாள் சொல்வி அருளானந்தனை இறுகக் கட்டிப் பிடித்தபடி.

“இது முடியாத விசயம்...” என அருளானந்தன் தொடரமுன்.

“ஏன்...” என ஆச்சரியத்துடன் அருளானந்தனைப் பார்த்தாள் சொல்வி.

“இப்ப... றோட்டில போகேக்க ஒருத்தியின்ர ‘லுங்கி’ காத்தில பறந்தா நான் என்ன கண்ணை மூடிக் கொள்ளட்டே...” எனக் கேட்டுச் செல்லமாக சொல்வியின் கன்னத்தில் கிள்ளினான் அருளானந்தன்.

“ஓ... அப்படிக் கண்ணை மூடவேணும்” என சிறு பிள்ளைக் குரலில் செல்லமாகச் சொன்னாள்.

“ஹேஹே...ய்...  நீ என்ன சொல்லுறாய்...” என சொல்வியைப் பார்த்தான் அருளானந்தன்.
சொல்வி சிரித்தாள்.

“உன்னை என்ன செய்யிறன் பார்...” எனச் சொல்லி, சொல்வியை இழுத்து இறுக அணைத்து ஆழமாக முத்தமிட்டான்.

சிந்தனையில் இருந்து மீண்ட சொல்வி,

‘ச்சீ... என்ன மடைத்தனம்... ஒரு நல்லவரைப் போய் அனாவசியமா சந்தேகப் பட்டுட்டன்... ’ எனத் தனுக்குள் சொல்லிக் கொண்டாள்.

‘ஹேய்... அருள் வந்திட்டான்’ எனத் தனக்குள் சொல்லிக் கொண்டே துள்ளியெழுந்து  படுக்கையறைக்கு ஓடினாள்... அங்கே பார்த்து ஏமாற்றத்துடன்,

‘எங்க இவன் ஒழிச்சிருக்கிறான்...’ எனச் சொல்லிக் கொண்டு, அடுக்களையை எட்டிப் பார்த்தாள் சொல்வி.
அங்கே அருளானந்தன் சூழையிலிருந்து பாண் துண்டுகளை எடுத்துக் கொண்டிருந்தான்.

ஓடிச்சென்று அருளானந்தனைப் பின்னாலிருந்து இறுகக் கட்டிப்பிடித்து, கழுத்தில் முத்தமிட்டாள்.

“ஹேய்... நீ எழும்பியிட்டியா...” எனச் சொல்லிக் கொண்டே திரும்பியவன், சொல்வியை அப்படியே கட்டியணைத்து ஆழமாக அவசரமாக முத்தமிட்டான்.

“Arul I love you... I love you... I love you sooo much...(அருள்... நான் உன்னை நேசிக்கிறன்... நான் உன்னை ஆழமா நேசிக்கிறன்...)” என்றாள்.

“ஹேய்... என்ன நடந்தது... I love you my sweet angel...” எனச் சொல்லி மீண்டும் ஒரு முத்தம் கொடுத்தவன்,

“ஹேய் யார் அந்த Asian Hercules... (ஏசியன் ஹேர்க்குலீஸ்...)? என அவளை அணைத்தபடி கேட்டான்.

“ஐயோ... ” என்றவள்,
“என்ன... யார்... எனக்கொண்டும் விளங்கேல்லை...” என அருளானந்தனின் அணைப்பில் இருந்தபடியே அருளானந்தனைப் பார்த்துக் கேட்டாள்.

“நித்திரேலதான் உண்மை வரும் எண்டு சொல்லுவாங்கள்...” என்றான்.
திரும்பவும் சொல்வி,

“ஐயோ...” என்றவாறே அருளானந்தனின் மார்பில் முகம் புதைத்தபடி,
“நான் சொல்லமாட்டன்...” என்றாள் செல்லமாக.

அருளானந்தன் அவளது முதுகைத் தடவியபடி,
“எனக்குக் கனவில வாறது யார் தெரியுமே... xena warrior princess...” என்றான்

அவனது மார்பிலிருந்து தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்த சொல்வி,
“என்னைக் கனவில காணுறேல்லையா...” என்றாள் மிகுந்த ஏக்கத்துடன்.

“ஹேய்... உன்னைத்தானே நேரில பாத்து கட்டிப் பிடிச்சு கொஞ்சுறன்... அவள் ‘ஒரு கற்பனை’... நீ நிஜம்...” என்றவன்.

“உன்ர ஏசியன் ஹேர்க்குலீஸ் யாரெண்டும் எனக்குத் தெரியும்...” என்றான்.
அப்போது, அவனது மார்பில் தலை சாய்த்து சுகம் கண்ட சொல்வி, தலையை நிமிர்த்தாமலே,
“யார்...” என்றாள்.

“ரகுதானே...” என்றவன் குறும்புடன் சிரித்தான். சொல்வியோ அவனைப் பார்க்காமல்,

“ம்...ம்...ம் அந்தக் கழுதையைத்தான் நான் கனவு காணுறன்... ” எனச் சொல்லும் போதே அவளது குரல் தழுதழுத்தது.

அருளானந்தன் அந்த நிலையை மாற்ற எண்ணி,

“ஏய்... எனக்குப் பசிக்குது வா... ரெண்டுபேரும் சாப்பிட்டுக் கொண்டே கதைப்பம்...” எனச் சொல்லிக் கொண்டே பாண்துண்டங்கள் அடுக்கிய கோப்பையோடு அவன் திரும்ப, சொல்வி ஒரே பாய்ச்சலில் அவன் மீது ஏறிக்கொண்டாள். அவனும் அவளை ‘உப்பு மூட்டை’ காவியபடி கூடத்துக்கு நடந்தான்.

“ ‘ஒஸ்லோ ட்ரிப்’ (Oslo trip) எப்பிடியிருந்துது... ” என ஆவலோடு சொல்வி.

பாண் துண்டைக் கடித்த அருளானந்தன் அதை மென்று விழுங்கும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சொல்வி. பின்னர்,

“நான் ஒஸ்லோவுக்குப் போகேல்ல... ” என்றான் அருளானந்தன்.

“அப்ப இந்த ரெண்டு நாளும் ஏன் வீட்டுக்கு வரேல்ல...” என அங்கலாய்ப்புடன் கேட்டாள் சொல்வி.

“இனியும் மறைக்கேலாது... உண்மையைச் சொல்றன்... நான் உனக்குத் தெரியாம இன்னொருத்திய வச்சிருக்கிறன். அவளும் ‘ஸ்டொக்கோம்’ (Stockholm) இலதான் இருக்கிறாள். அவளின்ர வீட்டில நிண்டனான்.” எனச் சொல்லி சொல்வியைப் பார்த்தான்.

“உண்மையாத்தான் சொல்றியா அருள்...” என்றவளின் குரல் தழுதழுத்தது. கண்களில் நீர் நிறைந்தது.

“ஹே...ய்... ஏன் அழுறாய்... உனக்குத் தெரியும்தானே நான் வீம்புக்கு கதைக்கிறது...” என அவளை இழுத்து அணைத்தான் அருளானந்தன்.

சொல்வியோ அவன் மார்பில் முகம் புதைத்தபடி குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினாள்.
அவளது அழுகையை நிறுத்த அரும் பாடுபட்டான் அருளானந்தன். ஒருவாறு அழுவதை நிறுத்திய சொல்வி அருளானந்தனைப் பார்த்தாள். அவன் அவளை அணைத்து முத்தங் கொடுத்து,

“முந்தி உப்பிடிச் சொன்னா... எனக்கு அடிச்சுப் போட்டு, சொல்லடா... பொய்தானே... சொல்லடா பொய்தானே எண்ணுவாய்... இண்டைக்கு ஏன் அழுறாய்..” என அவளை ஆதரவாக அவளது முதுகில் தடவிபடி அருளானந்தன் கேட்டான்.

“இண்டைக்கு அப்பிடிப் பகிடியள் என்னால தாங்கேலாது...” என்றவள் தொடர்ந்து,
“அப்ப, இந்த ரெண்டு நாளும் ஏன் இங்க வரேல்ல... நீ...” எனத் திரும்பவும் கேட்டாள்.

“என்ன ரெண்டு நாள், ரெண்டு நாள் எண்டு கொண்டிருக்கிறாய்... நான் இண்டைக்கு காலம போனனான் இரவு வந்திருக்கிறன்... பஸ்ஸுக்கு நாலு மணித்தியாலம் காத்திருக்க வேண்டியதாப் போச்சு... ” எனச் சொல்லி அவனது மார்பில் முகம் வைத்துப் படுத்திருந்த சொல்வியின் முகத்தை தன் இரு கைகளாலும் பிடித்துத் நிமிர்த்தி,

“ஹேய்... என்ன நடந்தது...” என்றான்.

“நீ புதன்கிழமை போனனி... இண்ண்டைக்கு வெள்ள்ள்ளிக்கிழமை...” என இழுத்தபடி அருளானந்தனைப் பார்த்தாள்.
“நீ ஏதோ கனவு கண்டு எழும்பியிருக்கிறாய் போல கிடக்கு...” எனச் சொல்லிக் கொண்டே, தொலையியக்கியால் (remote control) தொலைக்காட்சியை இயக்கி அதில் செய்திகள் அடங்கிய எழுத்துப் பக்கத்தை வருவித்தான்.
அதில் புதன்கிழமை மாலை எட்டு மணி என வலது மேல் மூலையில் எழுதப் பட்டிருந்தது.

அதைப் பார்த்த சொல்வி, 

“என்னை மன்னிச்சிடு அருள்... எனக்கெல்லாமே குழப்பமாயிருக்கு அருள்...” என கலங்கிய கண்களோடு அருளானந்தனைப் பார்த்தாள்.

“நிறைய நேரம் நித்திரை கொண்டுட்டு எழும்பினா... உப்பிடித்தான் குழப்பமாயிருக்கும்... இந்தா சாப்பிடு... பிறகு எல்லாம் கதைப்பம்” என பாண் துண்டை அவளது வாயில் வைத்து ஊட்டினான் அருளானந்தன்.

“அது சரி... ஏன் ஒஸ்லோவுக்கு நீ போகேல்ல...” எனக் கேட்டு அருளானந்தனைப்பார்த்தாள்.
அருளானந்தன் வாயுள் இருந்த பாண் துண்டை மென்று விழுங்கிய பின்,

“ ‘கார்’ வழுக்கி ‘றோட்’டை விட்டுப் போயிட்டுது... அதால, ரகு ‘ப்ளைட்’ (flight)ல ஒஸ்லோவுக்குப் போறான்... நான் திரும்பி வந்திட்டன்... ” என அமைதியாகச் சொன்னான்.

“ஐயய்யோ... அருள்... உனக்கொண்டும் நடக்கேல்லைத்தானே... உண்மையைச் சொல்லு... நாங்க ஒரு ‘டொக்டர’ட்ட -doctor- போவம் ‘செக்’ (check) பண்ணுவம்...” என அவனது முகத்தை இரு கைகளாலும் வருடியபடி அவசரமாகச் சொன்னாள்  சொல்வி.

“Relax... (பதட்டப்படாத...) எனக்கொண்டும் இல்லை ...” 

“ ‘கார்’ அடிபடேல்லே... வழுக்கி வெளியில போகேக்க கல்லொண்டில இடிச்சிருக்க வேணும் ‘றேடியேற்றர்’ (radiator) ஓட்டையாயிட்டுது... அதால கார் ஓடேலாது... அவன் ஒஸ்லோவுக்கு அவசரமா போக வேணும் பிறகு வந்து பாப்பம் எண்டுட்டு போறன். நான் என்ர sweet angelலட்ட ஓடி  வந்திட்டன்.” எனச் சொல்லி சொல்வி அணைத்து உச்சியில் முத்தங்கொடுத்தான்.

“ஹேய் வாறியா... படுக்கைக்கு... உன்னோட நிறைய கதைக்க இருக்கு...” என அருளானந்தன் கேட்டான்.

அருளானந்தன் அழைத்ததன் பொருள் சொல்விக்கு விளங்காமலில்லை. அவளுக்கும் அந்தக் காதல் இன்பம் வேண்டும் எனத் தவமிருக்கிறாளே வாரக்கணக்கில். ஆனால்,

“ஏன்... இங்க யாருமில்லையே... இங்கயே இருந்து கதைக்கலாம்... ” என்றவள் தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு,

“ஓ... அவையளா... அவையள இப்பிடி இந்த பட்டனை (button) அமுக்கினா... அவையள் போயிடுவினம்...” எனத் தொலைக்காட்சியில் செய்தி வாசித்த இருவரையும் பார்த்து சொன்ன சொல்வி, தொலையியக்கியால் (remote control) தொலைக்காட்சியை நூர்த்தாள்.

சொல்வி செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் அருளானந்தன். அப்போது, சொல்வி அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

“எனக்கே நடிக்கிறியாடி... எனக்கே நடிக்கிறியாடி...” எனத் தமிழில்ச் சொல்லிக் கொண்டு சொல்வியை இறுக அணைத்துக் குலுக்கினான். சொல்வியும் சிரித்துக் கொண்டு குழந்தைகள் போல,

“ம்... ம்... ம்...” என்றாள். அவளது ‘ம்’ காரம் நடுங்கிய குரலில் ஒலித்தது. சொல்வி நிமிர்ந்து அருளானந்தனைப் பார்த்தாள். அவனும் குனிந்து அவளது ரோஜா வர்ண உதடுகளில் மென்மையான ஒரு முத்தம் கொடுத்து மிக இரகசியமான குரலில்,

“எனக்கு ‘செக்ஸ்’ (sex) வேணும்...” என்றான் சொல்வியின் காதருகில்.

“அது இண்டைக்கு முடியாது...” எனச் சொல்லிச் சிரித்தாள் சொல்வி.

“Oh... has your guest arrived...? (ஓ... உன்ர விருந்தாளி வந்துட்டாரா...?)” எனச் சொல்லி சொல்வியை அணைத்து, அவளது பொன்னிறக் கேசங்கள் கலைந்தோடிக்கிடந்த அவளது தலையில் முத்தமிட்டான் அருளானந்தன்.

சொல்வி, அருளானந்தனை நிமிர்ந்து பார்த்தாள். அருளானந்தன் சொல்வியை இன்னும் இறுக அணைத்து, 

“ஹேய்... என்ன ஒரு மாதிரியாய் இருக்கிறாய்...” எனக் கேட்டான்.

“இல்ல... நீ ஏமாந்திட்டியோ எண்டு நினைக்கேக்க எனக்கு தாங்க முடியேல்ல...” எனச் சொல்லும்போதே அவளது குரல் தழுதழுத்தது.

“இது, வழமையா நடக்கிறதுதானே... நான் ஆசையா வந்து உன்னைக் கட்டிப் பிடிச்சா... நீ உடனே ‘STOP sign’ காட்டுறது...” எனச் சிரித்தபடி சொன்ன அருளானந்தன் தொடர்ந்து,

“என்னை மன்னிச்சுடு சொல்வி, இந்த ஒரு மாசமும் நான் ஏதோ பித்துப் பிடிச்சு அலைஞ்சு உன்னையும் கஷ்டப்படுத்தியிட்டன்...” எனச் சொல்லி, அவளது தலைக்குமேல் தனது கன்னத்தை வைத்து, அவளை தனது கைகளால் கட்டிப் பிடித்து, ஒரு குழந்தையைத் தாலாட்டுவது போல மென்மையாக இரு புறமும் அசைத்தான்.

மெல்ல சொல்வி அவனது கைகளை விடுவித்து, எழுந்து இருந்து கொண்டு,

“எனக்கும் தெரியும் அருள் ‘சிலோன்’ (Ceylon)ல என்ன நடக்குதெண்டு... ஆனா... உனக்கு எப்பிடி ஆறுதல் சொல்றதெண்டு தெரியாமல் இருந்தனான்...” என மிக ஆதரவாகச் சொல்லி சொல்வி அருளானந்தனைப் பார்த்தாள். அவனோ ஒளி இல்லாத தொலைக் காட்சிப் பெட்டியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மீண்டும் சொல்வி அருளானந்தனை  இரு கைகளாலும் வளைத்து இறுக அணைத்தபடி அவனது தோழில் தலை சாய்த்தாள். ஒரு சில நிமிடங்கள் அவர்களிருவரும் எதுவுமே கதைக்கவில்லை.

சொல்வி மெல்ல நிமிர்ந்து அருளானந்தனைப் பார்த்தாள். அவன் இன்னும் அந்தத் தொலைக் காட்சிப் பெட்டியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் மீண்டும் அவனது தோழில் தலை சாய, அவன் தனது கையால் அவளை அணைத்துப் பிடித்துக் கொண்டான்.

“அருள் என்னைக் கலியாணங் கட்டுறியா...” என மிக மென்மையாகக் கேட்டாள் சொல்வி.

ஏதேதோ சிந்தனையில் மூழ்கியிருந்த அருளானந்தனுக்கு சொல்வியின் குரல்; தொலைவில் ஒலிப்பது போல இருந்தது. திடுக்கிட்டு அவளைத் தூக்கி அவனுக்கு முன்னே நிமிர்த்தி அவளைப் பார்த்தான் அருளானந்தன்.
வண்டு வந்து அமர தலை சாயும் இள மலர் போல, சொல்வியும் அவன் முகம் பார்க்க முடியாமல் தலை குனிந்து, அவனது தொடையில் சாரத்தின் கோடுகளில் விரல் நகத்தால் கோடு கீறினாள்.

“சொல்வி, என்ன கேட்டனி... ” எனக் கேட்டு அவளது நாடியில் தனது வலது கையை ஆதரவாக வைத்து அவளது முகத்தை நிமிர்த்தி அவளது கண்களைப் பார்த்தான். அவனது பார்வையைச் சந்திக்க முடியாத அவள், விழிகளைத் தாழ்த்தி;

“உன்னைப் பிரிஞ்சு என்னால இருக்க ஏலாது அருள்” என்றாள்.

அவளை இழுத்து, அணைத்து, அவளது கழுத்தில் முத்தமிட்ட அருளானந்தன்;
“எனக்கு மட்டும் உன்னைப் பிரிஞ்சு போக வேணும் எண்டு ஆசையா சொல்வி... எனக்கு என்ன செய்யுறதெண்டே தெரியல்ல... சொல்வி...” எனச் சொல்லும் போதே அருளானந்தனின் குரல் தழுதழுத்தது.

இப்போது சொல்வி சிறிது மனந் தெளிந்தவளாக, எழுந்திருந்து அருளானந்தனைப் பார்த்து,

“எனக்குத் தெரியும் அருள்...” என்று சொல்லி சொல்வி அருளானந்தனைத் தீர்க்கமாகப் பார்த்தாள்.
“என்ன தெரியும்...” என்றான் அருளானந்தன்.
“உனக்கு ‘விசா’ (Visa) இன்னும் நாலோ ஐஞ்சோ மாதத்தில முடியுதெண்டு... நாங்க யோசிச்சிருந்தது போல, யாழ்ப்பாணத்துக்கும் போக ஏலாது... அதுதானே உன்ர யோசனை...” எனச் சொல்லி அருளானந்தனைப் பார்த்தாள்

“ம்...” என்றான், எதுவித உணர்ச்சியுமில்லாமல்.
“இதுக்கு ஒரு வழியிருக்கு... நான் சொல்றதைக் கேட்பியா அருள்...” என அவனது முகத்தை தனது இரு கைகளாலும் ஏந்திப் பிடித்தபடி கேட்டாள் சொல்வி.

அதற்கும் அருளானந்தன் 
“ம்...” என்றான். ஆனால் இப்போது சொல்வியின் விழிககளுக்குள் பார்த்தபடி.

“நானும் நீயும் இப்ப கலியாணம் கட்டினா; நீ நோர்வேயில இருக்கலாம்... ஒரு வேலை செய்யலாம்... இலங்கேல பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்த பிறகு நீ நினைச்ச மாதிரியே அங்க போய் ஒரு engineering firm (பொறியில் ஸ்தாபனம்) ஆரம்பிக்கலாம்... என்ன சொல்றாய்...” என அருளானந்தனை வாஞ்சையோடு பார்த்தாள் சொல்வி.

“உதத்தான் ரகுவும் கார்ல போகேக்க சொன்னவன்... ஆனா...” எனத் தொடருமுன் இடைமறித்த சொல்வி,
“என்ன அருள்... ஏன் என்னைக் கலியாணங் கட்ட மாட்டியா...” என ஏக்கத்தோடு பார்த்துக் கேட்டாள் சொல்வி.

“ஹேய்... உன்னைக் கலியாணங் கட்ட எனக்கு விருப்பமில்லையெண்டா உனக்கு மோதிரம் போட்டிருக்க மாட்டன்... நீ அதை ‘முட்டை இட்ட கோழி’ மாதிரி கொக்கரிச்சுக் கொண்டு உலகத்துக்கு காட்டவும் விட்டிருக்க மாட்டன்.” என விரக்தியோடு சொன்னான்.

மெல்லப் புன்னகைத்த சொல்வி மிக மென்மையாக,
“அப்ப என்ன யோசிக்கிறாய் அருள்” என்றாள்.

“சொல்வி... யார் என்ன சொன்னாலும், நான் உன்னைக் கலியாணங் கட்டூறதெண்டுதான் மோதிரம் போட்டனான்... ஆனா... இந்த நேரம் திடீரெண்டு ரெண்டு பேரும் கலியாணங் கட்டினா... எல்லாரும் சொல்லுவாங்கள் சந்தர்ப்பம் பாத்துச் செய்தது எண்டு...” என அருளானந்தன் தொடருமுன்,

“யார்...” என சொல்வி சொல்ல வந்ததைச் சொல்ல விடாமல் தடுத்த அருளானந்தன்

“இன்னும் ஒண்டு, உனக்கு நிறைய விருப்பங்கள் ஆசையள் எல்லாம் wedding ceremonyல (திருமண வைபவம்) இருக்கு... எவ்வளவோ plans(ஏற்பாடுகள்) எவ்வளவோ dreams (கனவுகள்) இருக்கு... இப்ப போய் திடுதிப்பெண்டு செய்யிறதெண்டா... நேரமும் காணாது... காசும் இல்லை... எனக்கு என்னால உன்ர dream wedding இல்லாம போறதத் தாங்கேலாது. சொல்வி... ” என மிக ஆற்றாமையுடன் சொல்லி முடித்தான் அருளானந்தன்

சொல்வி தனது இரு கைகளாலும் அருளானந்தனின் முகத்தை ஏந்திப் பிடித்து,
“ஹேய்... ஸில்லி போய்... றிலாக்ஸ்... (silly boy... relax... ஏய்... முட்டாள் பயலே... பதட்டப்படாத...” எனச் சொன்ன சொல்வி, தொடர்ந்தாள்.

“யார் என்ன சொன்னாலும் பறவாயில்லை!  நாங்க கலியாணங் கட்டுறதெண்டு எப்பவோ முடிவு செய்தனாங்கள்... எப்பவோ ஒரு நாள் நடக்கப்போற கலியாணம்; இப்ப நடந்தா என்ன... ஓ... சிலர் அப்பிடியும் கதைக்கத்தான் செய்வினம் கதைச்சா... கதைச்சுட்டுப் போகட்டும். ஆனா... அதால எங்களுக்கு எதுவும் நடக்கப் போறதில்லைத்தானே...” என்றவள் நிறுத்தி தன்னை ஆசுவாசப் படுத்தினாள்.

அருளானந்தன் அவளை வைத்த கண் வாங்காது பார்த்தபடி இருந்தான். சொல்வி தொடர்ந்தாள்.

“ஓ...! எனக்கு எங்கட கலியாணத்தில எவ்வளவோ dreams இருக்கு... அதெல்லாம் இல்லாமல் போகாது ஸில்லி (முட்டாள் silly)...” என அருளானந்தனின் மூக்கைப் பிடித்து ஆட்டிச் சிரித்தாள்.

“எப்பிடி...” என அங்கலாய்ப்புடன் கேட்டான் அருளானந்தன்.

“நாங்கதானே ரெண்டு கலியாணங் கட்டப் போறம்... தமிழ்க் கலியாணத்தை நீ அண்டைக்குச் சொன்னது போல, இங்கயும் ஏற்றுக் கொள்ள மாட்டாங்கள். நீயும் நானும் ‘சேர்ச்’ல (church) அல்லது ‘திங்ஹுிஸ்ஸில’ (Courthouse)தான் கலியாணம் செய்ய வேணும்...” என சொல்வி நிறுத்தியபோது, அருளானந்தன் இன்னும் ஒன்றும் பேசாமல், அவளையே பார்த்த வண்ணம் இருந்தான்.

சொல்வி தொடர்ந்தாள்,
“நீ இப்ப ‘ஓம்’ எண்டு சொன்னாப் போதும், நான் நாளைக்கு அம்மாவுக்குச் சொன்னா அடுத்த மாதமே எங்கட weddingஐ அம்மா, அப்பா, தம்பி எல்லாரும் எல்லாம் செய்வினம். 
எங்கட சொந்தக் காரரோட என்ர friends உன்ர  friends எல்லாரும் வருவினம்... நாங்கள் போய் ‘தாலி’ கட்டியிட்டு ரெண்டு நாள் நிண்டுட்டு வந்து படிப்பை முடிக்கலாம்.” எனச் சொல்லிச் சிரித்தாள் சொல்வி.

அதிசயத்தோடு அருளானந்தன்,

“என்ன சேர்ச்சில தாலி கட்டுறதா...” என கேட்டான்.

“Oh... My god... You are so gullible...(என்ர கடவுளே நீ நம்பியிட்டியா...) ” எனச் சொல்லிச் சிரித்தாள் சொல்வி.

“அப்ப... உன்ர dream wedding உதுதானா...” எனக் கேட்டான்.

“ஆ... இல்லை... பிறகு ஆறுதலா... தமிழ் weddding. நான் ‘சாறி’ கட்டி, நகை போட்டு, தலை நிறைய பூச் சூடி, ஒரு ‘ஆச்’ (arch) மாதிரி வைப்பாங்கள் அதில இருக்க நீ தாலி கட்டுவியாம்...” எனக் குழந்தை போல, சொல்வி சொல்ல அருளானந்தன் விழுந்து விழுந்து சிரித்தான்.

“என்ன நான் சொல்றதில பிழையிருக்கா...” என அங்கலாய்ப்புடன் கேட்டாள்.

“இல்லை... நீ குழந்தை போல கதைச்சதைப் பாத்து சிரிச்சன்... அது உனக்கு விருப்பமெண்டா; எனக்கும் சம்மதம்... ” என்று சொல்லி சொல்வியை அணைத்தான் அருளானந்தன்.

அருளானந்தனை இறுக அணைத்து அவனது முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தாள் சொல்வி. அருளானந்தனும் ஆசையோடு அவளின் முத்த மழையில் திளைத்தான்.
“அருள்... எனக்கு உடம்பெல்லாம் ஏதோ ஒரு மாதிரியிருக்கு... எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது... அருள்..” எனச் சொல்லி அவனது மார்பில் சாய்ந்து அவனை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

“ஹெய் பயப்பிடாத... நான் உன்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டன்... றிலாக்ஸ்...” எனச் சொல்லி அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.

“அருள்... நீ எனக்கு வேணும்... எனக்கு மட்டும் வேணும்...” எனச் சொன்ன சொல்வி அருளானந்தனின் உதடுகளில் தனது உதடுகளைப் பதித்தெடுத்தாள்.

“எனக்கும் நீ என்ர கையுக்குள்ளயே இருக்க வேணும் எண்டதுதான் விருப்பம்... ஆனா friends எல்லாரும் சொல்லுவாங்கள் முறையா சொல்வியை மடக்கி தன்ர காரியத்தைச் சாதிச்சுட்டான் எண்டு...” என அருளானந்தன் சொல்லி முடிக்க, 

“Hei, Arul... I don't care about your friends or what they say... I hope you also do so...(ஹெய் அருள்... உன்ர நண்பர்களைப் பற்றியோ அவையள் கதைக்கிறதைப் பற்றியோ எனக்கு அக்கறை இல்லை... நீயும் அப்படிச் செய்ய வேணும் எண்டு நான் விரும்புறன் )” என்றாள் சிறிது கடுகடுத்த தொனியில்.

சொல்விக்கும் அருளானந்தனின் சில நண்பர்களுக்கும் இடையில் மனக்கசப்பு. பல வேளைகளில் சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் சொல்வி அருளானந்தனிடம் சொல்லியிருக்கிறாள்.

அந்த சூழ்நிலையை, அந்த மனவோட்டத்தை மாற்ற எண்ணிய அருளானந்தன்,

“ஹேய்... பன்ரெண்டு மணியாச்சு வா போய் படுப்பம்... நாளைக்கு Universityக்குப் போக வேணும்” என்றான்.

”ம்... ம்... ம்... நாங்க நாளைக்கு Universityக்குப் போகப் போறதில்லை...”

“என்ன... நாங்களோ...?” எனக் கேட்டான் அருளானந்தன்.

அவன் மார்பில் இதமாக முகம் புதைத்துச் சுகமான சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்த சொல்வி,

“நாங்க எண்டா... நானும் அந்தக் கீழ் மாடியில இருக்கிறான் அந்த ஆபிரிக்கக்காரனும்...” என்ற சொல்வி, சிரித்தாள்.

“Heeeiii, my beautiful angel is back... (ஹே...ய்ய்ய்... என்ர அழகு தேவதை வந்திட்டாள்)” எனச் சொல்லி அவளை இன்னும் இறுக தன் மார்போடு அணைத்தான் அருளானந்தன்
அவளும் சிரித்தபடி அருளானந்தனின் மார்பில் தனது வலது கை சின்ன விரல் நகத்தால் கோலமிட்டாள்.

“ஹேய்... ரகு சொன்னான்... நீயும் அந்த ஆபிரிக்காரனும் ‘கிஸ்’ பண்றத பாத்ததெண்டு...” என அருளானந்தன் சொல்லி முடிக்குமுன் அவனது மார்பை விட்டு எழுந்த சொல்வி அவனது மார்பில் ‘தும்... தும்... தும்’ என ஒலி எழும்பும் வண்ணம் தனது இரு கைகளாலும் குத்தினாள்.

“வரட்டும் அந்த donkey Ragu... (கழுதை ரகு...) நான் அவன்ர பல்லு முப்பத்திரண்டையும் கழட்டுறன்..” என்று சொல்லி அருளானந்தனை ஆழமாகப் பார்த்தாள்.

“ஹேய்... என்ன அப்பிடிப் பாக்கிறாய்... நான் சும்மா உன்னை ‘ற்ரெஸ்ற் (test) பண்ணின்னான்... அவன் அப்பிடியெல்லாம் சொல்லேல்ல...” எனச் சொல்லி சொல்வியை அணைத்தான்.
சொல்வியும் அவனது மார்பில் சாய்ந்தபடி,

“உன்ர முட்டாள் ‘பிரெண்ட்ஸ்ஸை’ - friends- நம்பேலாது... என்னவும் ஏறுமாறாச் சொல்லுவாங்கள்...” என்றாள்.

“ம்... அது நோர்வேயில நடந்தது... நீயும் ஹன்னாவும் சுத்துறதைப் பாத்துட்டு நீயும் அவளைப் போல எண்டு சொன்னாங்கள்... ஆனா... ஆனா... நான் ஏதாவது உன்னட்டக் கேட்டனானே... இல்லையே... ஏனெண்டா... எனக்கு உன்னைப் பற்றி தெரியும்...” என மூச்சு விடாமல் சொல்லி முடித்த அருளானந்தன் அவளை தன் மார்பிலிருந்து நிமிர்த்தி, அவளது அழகான ரோஜா வர்ண உதடுகளில் முத்தமிட்டான்.

“அருள்... உன்ர ‘பிரெண்ட்ஸ்’ஸின்ர கதையைக் கேட்டுட்டு வந்து என்னோட சண்டை போட மாட்டியே...” என மிகவும் ஆதங்கத்துடன் கேட்டாள் சொல்வி.

“அடியேய்... எப்படி நான் அப்படிச் செய்தனான்...” என அருளானந்தன் சினந் தோய்ந்த குரலில், தமிழில்க் கேட்டான்.

“எப்பவுமே நீ அப்பிடி நடந்ததில்லை... ஆனா... இப்ப மாதிரியே நானும் இருக்க வேணும்... நீயும் இருக்கவேணும்...” எனச் சொல்லி, சொல்வி வாஞ்சையுடன் அருளானந்தனைப் பார்த்தாள்.

அருளானந்தனோ ஆச்சர்யத்துடன் சொல்வியைப் பார்த்து,
“ஹேய்... உனக்குத் தமிழ் விளங்குது... எப்பிடி?” எனக்கேட்டான்.
‘ஓ... பிடி கொடுத்து விட்டோமோ...’ என சிறிது யோசித்த சொல்வி,

“ஹேய்... உன்னோட எத்தின வருஷமா இருக்கிறன்... ஒரளவுக்காவது தமிழ் விளங்க வேணும்தானே...” எனச் சொன்னாள்.
அவளைக் கண்களுக்குள் பார்த்து, 

“சொல்வி... இண்டைக்கு மாதிரியே எப்பவும் நானிருப்பன்... போதுமே...” எனச் சொல்லி சொல்வியின் வலது கையை எடுத்து தனது வலது கையை வைத்து உறுதி கூறினான்.

“எனக்கது போதும் அருள்... எனக்கது போதும்..” எனச் சொல்லியபடியே அவனது மடியில் படுத்தாள் சொல்வி.
அவனும் பால் போல வெளுத்த அவளது கன்னத்தில் ஆதரவாக கையால் வருடியபடி,

“நாளைக்கு Universityக்கு போகா விட்டா என்ன செய்யப் போறம்...” எனக் கேட்டான்.

“நீயும் நானும் கட்ட்ட்டிப்ப்பிடிச்சுக் கொண்டு பத்து மணிவரையும் படுத்திருப்பமாம்...”

“அ...” அருளானந்தன் அவளையும் அவளது குழந்தைத் தனமான கதையும் கேட்டு இரசித்துக்- கொண்டிருந்தான்.

“பிறகு நான் அம்மாவோட நிறையக் கதைக்க வேணும் எங்கட கலியாணத்தைப் பற்றி...”

“பிறகு...”

“நாங்க ரெண்டு பேரும் ‘பாக்’ கில கொஞ்ச நேரம் சுத்தியிட்டு...” என நிறுத்தி அருளானந்தனைப் பார்த்தாள்.

‘என்ன...’ என்பது போல அருளானந்தன் கண்களால்ப் பார்த்தான் சொல்வியை.

“நீ ‘பிறகு’ எண்டு ஒவ்வொண்டுக்கும் சொல்லுவாய் ஏன் சொல்லேல்ல... நீ திரும்ப உன்ர பிரெண்ட்ஸ்ஸைப் பற்றி நினைக்கிறியா... அருள்...” என அங்கலாய்த்தவளாக சொல்வி கேட்டாள்.

“இல்லை... இல்லை..., ஓ.கே. ‘பாக்’கில சுத்தியிட்டு பிறகு என்ன செய்வமாம்” என அவனும் அவளைப் போலவே  கேட்டு விட்டு, சொல்வியின் பொன்னிறக் கேசங்களை அளைந்து விளையாடினான்.
திரும்ப சொல்வி தனது குழந்தைத் தனமான குரலில்,

“பிறகு, ஒரு ‘றெஸ்ற்ரோரண்ட்’டில (restaurent) சாப்பிட்டுட்டு, வந்து ஒரு ‘கூத்து’ அடிப்பமாம்” எனச் சொல்லி இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டாள் சொல்வி.
அப்போது, அருளானந்தன் விரல்களை மடித்து எண்ணினான். அதைப் பார்த்து சொல்வி சிரித்தாள்.

“உங்கட கணக்குகள் எல்லாம் வித்தியாசமா, வினோதமாயிருக்கு புரிஞ்சு கொள்ளவே முடியாமல்க் கிடக்கு...” எனச் சொல்லி அவனது மடியில்ப் படுத்திருந்த சொல்வியின் மூக்கைப் பிடித்து இலேசாக ஆட்டிச் சிரித்தான்.

சொல்வியும் சிரித்தபடி,

“அதெல்லாம் உங்களுக்குத் தெரியாமல் இருக்கிறதே நல்லது...” என்றாள்.



(தொடரும்)

Friday, 1 April 2016

தத்துவ வரிகள்






தவறு செய்ய துணிந்தவன் இரக்கம் காட்டுவதில்லை. 
ஆனால் வானம் போல குணத்தில் உயர்ந்தவர் தவறியும் ஒரு சிறு தவறும் செய்ய மாட்டார். 

அழகாக இரண்டே வரியில் சொல்லிருக்கிறார் கவியரசு கண்ணதாசன்

Thursday, 24 March 2016

Tuesday, 8 March 2016

Monday, 29 February 2016

படிக்காத மனைவி - பாகம் 7 'தனிமை' தொடர்ச்சி...

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).


உணர்ச்சிகள் உலகிலுள்ள அனைவருக்கும் பொது. அவரவர் தன்மைக்கேற்ப அவர்கள் தம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மை வேறுபடுகிறது.



தனிமை தொடர்ச்சி...


“Haiii Sweeetiii... What's up...” என்றாள் சொல்வி, கொஞ்சும் குரலில்.


Hello, could I speak to mr. Arul please...(ஹெலோ... நான் அருளோட கதைக்கலாமா... )?”  என்றது ஒரு இளம்பெண் மறுமுனையில்...

அந்தப் இளம்பெண்ணின் குரலையும், அவளது ஆங்கிலம் கதைத்த அழகையும் கேட்டபோது, சொல்வி அதிர்ந்துபோனாள். அருளானந்தனுக்கு இன்னொருத்தியும் இருக்கிறாளா... 
‘Oh... Jesus... Oh... Jesus இது உண்மையா இருக்கக் கூடாது... 
இது உண்மையா இருக்காது... அருளை எனக்குத் தெரியும்... 
அவன் அப்படிச் செய்யமாட்டான்... ’என மனதுக்குள் கடவுளை மன்றாடினாள்... தனக்குத் தானே சொல்லிக்கொண்டும் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டும்

“Hello..., Arul is not here at the moment...” (ஹெலோ... அருள் இப்ப இங்க இல்லை... ) என்றாள் சொல்வி.
சொல்வி சொல்லி முடிக்கு முன்னரே,
Oh... My... God... Oh... My... God ... please... please let me talk to him please I beg you...” (ஓ... என்ர கடவுளே... தயவு செய்து... தயவு செய்து அவரோட என்னக் கதைக்க விடுங்க... நான் உங்கள மன்றாடிக் கேக்கிறன் தயவு செய்யுங்க...) என்றது அந்தப் பெண் குரல் சொல்வியிடம் மன்றாடியது. மன்றாடியது மட்டுமல்ல, அந்த இளம்பெண்ணின் குரல் தழுதழுத்தது. அழுது விடுவாளோ என்றிருந்தது சொல்விக்கு.

சொல்விக்கு என்ன சொல்வதென்றெ தெரியவில்லை... தனது கனவுகளெல்லாம் தவிடு பொடியாகிக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்தாள். ஆண்கள் எல்லோருமே இப்படித்தானா... அவளும் ஒரு பெண்தானே... அவள் எங்கே இருக்கிறாளோ... அவளுக்கும் இவனுக்கும் எப்படித் தொடர்பு வந்தது... ஏற்கனவே அருளானந்தனுக்கு இலங்கையில் திருமணம் நடந்து விட்டதா... அப்படியும் ஒரு கதை வாசித்தது சொல்வியின் ஞாபகத்துக்கு வந்து அவளை இன்னும் குழப்பியது.... என ஏதேதோ மனத்தில் நினைத்துக் குழம்பியவளாக,

“How do I explain to you... Arul is not at his home right now... he went to Oslo with a friend... Believe me... (நான் எப்பிடி உனக்கு விளங்கப் படுத்துவன்... அருள் அவற்ர வீட்டில இந்த நேரம் இல்லை... அவர் ஒஸ்லோவுக்கு ஒரு நண்பனோட போயிட்டார். என்ன நம்பு...) ” என்றவளை இடைமறித்து,

You don't understand our sitation, do you...? Please help... Please let me talk to him... ( எங்கட நிலை உனக்கு விளங்கேல்ல என்ன... தயவு செய்து... தயவு செய்து என்ன அவரோட கதைக்க விடு...)  ” என ஒரு கணம் அதிகாரமாகவும் மறுகணம் தயவாகவும் கெஞ்சியது அந்தப் பெண் குரல்.

“Believe me, if Arul is in this city, I promis I can bring to you and I have lot of questions also to him. Believe me Arul is not.... Hello... Hello.... (என்ன நம்பு அருள் இந்த நகரத்தில இருந்தா... சத்தியமா இங்க கூட்டியருவன்... எனக்கும் நிறைய அவரட்ட கேட்க இருக்கு... ஹலோ...  ஹலோ...)” சொல்வி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

சொல்விக்கு நடந்ததெல்லாம் கனவா இல்லை, நிஜம்தானா என உணர முடியாமலிருந்தது. தொலைக் காட்சியைப் பார்த்தபோது, தொலைக் காட்சிக்குத் தொடர்பில்லாததால், புள்ளிகள் விழுந்த படி ஒரே இரைச்சலோடு இருந்தது.
சொல்விக்கும் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியைப் போலவே தனது கனவுகளும் எண்ணங்களும் புள்ளி விழுந்து, ஒரே இரைச்சலாக இருப்பது போல உணர்ந்தாள். 

‘என்னென்னவோ கனவுகளோடு இருந்தேனே... அவ்வளவும் கலைந்து போய்விட்டதே... அருளானந்தனோடு இந்தியமுறைப்படி திருமணம் செய்ய வேண்டும்... நானும் சேலை கட்டி, பூவைத்து, பொட்டு வைத்து, நகைகள் எல்லாம் போட்டு...  எத்தனை கனவுகள். 
எங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் அழகு, நிறம், அறிவு எல்லாவற்றையும் சஞ்சிகைகளில் பார்த்துப் பார்த்து கத்தரித்த குழந்தைகள் படங்கள் எவ்வளவு... அத்தனையும் காற்றில் கட்டிய கோட்டைதானா...?’ எனத் தன்னைத் தானே  மீண்டும் கேட்டுக் கொண்டே புள்ளி விழுந்து இரைச்சலோடிருந்த தொலைக்காட்சியைப் பார்த்த வண்ணம் இருந்தாள் சொல்வி சிறிது நேரம். அவளுக்கு தன்னை ஒரு இருள் சூழ்ந்தது போல இருந்தது.

போர்வையை உதறி எறிந்தவள் எழுந்து தொலைக் காட்சியை நூர்த்து விட்டு, குளியலறைக்குச் சென்று கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் குளியலறைக் கண்ணடிக்கு முன்னால் நின்றால்; அவள் பின்னே வந்து அவளை இறுகக் கட்டியணைத்து கழுத்தில் முத்தமிடுவது அருளானந்தனின் வழமை.

அந்த நினைப்பில், திடீரென கண்ணாடியில் தன் பின்னால் பார்த்தாள் சொல்வி. அங்கே யாருமில்லை. நீண்டதொரு பெருமூச்சுடன் பல் துலக்கி முகம் கழுவிய பின்னர், குளியல்க் கூடத்தில் நீர் விசிறியைத் திறந்து தண்ணீர்த் திவலைகளில் கையைப் பிடித்து, நீரின் சூட்டைப் பார்த்துக்கொண்டிருந்தாள். 
அந்தக் குளியல்க் கூடத்தில் அருளானந்தன் இல்லாமல், அவனது குறும்புகள் இல்லாமல் குளித்த நாட்கள் குறைவு.
அவள் குளித்துக் கொண்டிருக்கும் போதே, ‘யாரந்தப் பெண்... அவளுக்கும் அருளுக்கும் என்ன உறவு... அதை எப்படி அறிவது...’ என சிந்தனை ஓடியது.

இதை, அவனது நண்பர்களுக்கோ தனது சிநேகிதியருக்கோ தெரியப் படுத்தக் கூடாது என திட்ட வட்டமாக நினைத்துக் கொண்டாள்.
‘ஆனால், அப்படியென்றால் அவள் யார்... அவளுக்கும் அருளுக்கும் என்ன தொடர்பு என எப்படி அறிவது... அருளானந்தன் வந்த பின் அவனையே கேட்போம்... அவனது பதில், அதன் பின் அவளுக்கு அருளானந்தனையே தொலைபேசியில்க் கதைக்க வைத்த பின்னர் என்ன செய்யலாம் என முடிவெடுக்கலாம்...’ என ஒரு முடிவுக்கு வந்தாள் சொல்வி.

“என்ர dreams எல்லாம் போச்சு... பறவாயில்லை... இந்தளவில தெரிஞ்சது...” என சத்தமாகவே தனக்கு தானே சொல்லிக் கொண்டு குளிருடைகளை அணிந்தாள் சொல்வி.  

அவளுக்கு யாரிடமும் அந்த நேரம் செல்ல விருப்பமிருக்கவில்லை. காரணம் இதுதான், யாரிடமாவது சென்றால் அவளது தாங்க முடியாத யோசனையை அவளது முகத்தை வைத்தே கண்டு பிடித்து, அவளிடமிருந்து தகவல்களை அறிந்து விடுவார்கள். அது அவளுக்குத் தெரியும். 

அதனால், அங்கே அவர்களது தொடர்மாடிக்கு அருகே இருந்த ஒரு கோப்பிக் கடைக்குச் சென்று சிற்றுண்டியும் உண்டு, கோப்பியும் அருந்தி அன்றைய நாழிதழையும் படித்து விட்டு வரலாம் என நினைத்தாள்.

வாசல்க் கதவுடன் சுவரில் இருந்த நிலைக்கண்ணாடியில் முகம், தலை, தலைமயிர் இவற்றைச் சரி செய்து கொண்டு குளிருக்ககுக் கழுத்தில் சுற்றும் துணியால் கழுத்தை இருதரம் சுற்றி அதையும் கண்ணாடியில்ப் பார்த்து சரி செய்து கொண்டு கதவைத் திறக்கும் நேரம் தொலை பேசியின் ரீங்கார நாதம் ஒலித்தது.

கழுத்தில்ச் சுற்றிய துணியைக் கழற்றி கதிரையில் எறிந்து விட்டு, தொலை பேசியின் ஒலி வாங்கியை எடுத்து,

ஹலோ...என்ற சொல்வியின் கைகள் ஏனோ நடுங்கின, குரலும் இடறியது.

Hello, I don't have enough time or money to talk to you ... Please let me talk to Arul... Please...(ஹலோ, என்னிடம் போதுமானளவு காசோ அல்லது நேரமோ இல்லை உன்னோட கதைக்கிறதுக்கு... தயவு செய்து அருளோட என்னைக் கதைக்க விடு... தயவு செய்...)” என்றது மறு முனையில் அதே பெண்குரல்.

சொல்விக்கு கால்கள் நடுங்கின. நிற்க இயலாமல் கதிரையில் சாய்ந்தாள். நடுங்கும் கைகளால் தொலைபேசியை இறுகப் பிடித்த வண்ணம் குரலை சரி செய்து கொண்டு,

“OK... Give me your number, I call you...(ஓ. கே. உன்ர இலக்கத்தைத் தா... நான் அழைக்கிறன்) என்றாள் சொல்வி.

No. I can't... Please let me talk to Arul.( இல்லை. என்னால முடியாது. தயவு செய்து அருளோட என்னைக் கதைக்க விடு...)” என்றது அந்தப் பெண் குரல்.

“I feel this is long distance call, and may I know from where you are calling...? (இது தூர இடத்து அழைப்புப் போல இருக்கு, நீ எங்கே இருந்து அழைக்கிறாய்...?) என்றாள் சொல்வி அதே நடுங்கும் குரலில்.

Yes, I am calling from India, look, I don't have enough money or time to chat with you. Please let me talk to Arul...(ஓம், நான் இந்தியாவிலேயிருந்து அழைக்கிறன். இங்க பார், என்னட்ட போதுமானளவு காசும் இல்லை நேரமும் இல்லை உன்னோட அரட்டையடிக்கிறதுக்கு... தயவு செய்து அருளோட என்னைக் கதைக்க விடு...)” என்றது அந்தப் பெண் குரல்.

சொல்வி ‘இருதலைக் கொள்ளி எறும்பு’ போலத் துடித்தாள். அந்தப் பெண் இந்தியாவிலிருந்து அழைத்தால், அவர்களுக்குத் தொலைபேசிச் செலவு அதிகமாக வரும். ஆனால், இந்த முறையும் அவள் யார்... அவளுக்கும் அருளுக்கும் என்ன உறவு என அறியாமல் விட்டு விட்டால், சொல்வியின் மண்டையே வெடித்து விடும். ஆக, ஒரு துணிவுக்கு வந்தவளாக,

“Are you Arul's wife or lover trying to talk to him...? (நீ அருளடைய மனைவியா அல்லது காதலியா அவருடன் கதைக்க விரும்புகிறாய்...?)” என்று கேட்டாள் சொல்வி. ஆனால் அப்படி நினைக்கவே அவளால் முடியவில்லை. மறுமுனையில் இருக்கும் அந்தப் பெண்ணின் நிலையையும் வசதியையும் யோசித்தே அப்படித் திடீரெனக் கேட்டாள் சொல்வி.

“What...? No... no... I am his sister... Please, please let me talk to him... Please I beg you... Pritty pleeeeease... (என்ன...? இல்லை... இல்லை... நான் அவருடைய தங்கச்சி தயவு செய்து அவரோட கதைக்க விடு... நான் உன்னைக் கெஞ்சிக் கேக்கிறன்... தயவு செய்...)” என்றாள் அந்தப் பெண்.

இப்போது, சொல்வியின் தொண்டையில் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டது. கண்களிலிருந்து நீர் பொல பொலவென கன்னத்தில் விழுந்து உருண்டது. அவளால் எதுவுமே சொல்ல முடியாமல்த் தவித்தாள். அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. விம்மி, விம்மி அழத்தொடங்கினாள் சொல்வி...

சொல்வியின் அழுகை ஒலி மறுமுனையில்த் தெளிவாகக் கேட்டது.

Are You crying... Please don't cry... Why are you crying... What did I say... Please talk to me... Oh My God my brother is going to kill me... Please don't cry... (நீ அழுறியா... அழாத... ஏன் நீ அழுறாய்... நான் என்ன சொன்னன்... தயவு செய்து என்னோட கதை... என்ர கடவுளே அண்ணா வந்து என்னைக் கொலை செய்யப் போறான்...)”  என்றாள் அருளானந்தனின் தங்கை ஆதங்கத்துடன்.

அருளானந்தனின் தங்கையின் குழந்தைத் தனமான கதையையும் ‘என்ர அண்ணா வந்து என்னைக் கொலை செய்யப் போறான்’ என அவளது ஏக்கம் நிறைந்த குழந்தைத்தனமான கதையையும் கேட்டவுடன், அழுகையினூடே சிரிக்கவும் செய்தது சொல்வியை.

ஹலோ... ஹலோ...” என்றாள் அருளானந்தனின் தங்கை...

ஒருவாறாக, சொல்வி தன்னை சுதாகரித்துக் கொண்டு,

“Hello... ” என்றாள்.

Oh... My... God... Are You crying... What did I say... I am so sorry... I just wanted to talk to Arul. That's all. It is very important... Please... (என்ர... கடவுளே... நீ அழூறியா... நான் என்ன சொன்னனான்... என்னை மன்னிச்சுடு... நான் அருளோட கதைக்கவேணும் அவ்வளவுதான். அது மிக முக்கியம்... தயவு செய்...” என்றாள் அருளானந்தனின் தங்கை மறுமுனையிலிருந்து.

“Hello, You did not mention your name... Arul's sister... May I know your name... (ஹலோ... நீ உன்ர பேரைச் சொல்லேல்ல... அருளின்ர சகோதரி...)” என்றாள் சொல்வி. சொல்வியின் குரல் பனியில் நனைந்த மலரைப் போல சிறிது அழுது ஓய்ந்து, மகிழ்ச்சியில் தோய்ந்திருந்தது.

Thank God... now your voice is very sweet... (கடவுளே... இப்ப உன்ர குரல் நல்லாயிருக்குது...)” என்றாள் அருளானந்தனின் தங்கை...

“Oh... Thank you...” என்றாள் சொல்வி மிக மகிழ்ச்சியுடன்.

“My name is Mathimalar... Everyone call me Mathy... (என்ர பேர் மதிமலர்... எல்லாரும் மதி எண்டு கூப்பிடுவினம்...)” என்றாள் அருளானந்தனின் தங்கை.

“Hi, Mathi, I am Selvi...” எனச் சொல்வி சொல்லும்போதே இடைமறித்த அருளானந்தனின் தங்கை,

I know your name. Arul told me...(உன்ர பேர் எனக்குத் தெரியும். அருள் சொன்னவர்...)” என்றாள் அருளானந்தனின் தங்கை.

“Oh... Whatelse Arul told you...? (ஓ... வேறென்ன அருள் உனக்கு சொன்னார்...?)” என்ற சொல்வி உடனேயே
“Give me your telephone number... I want to talk with you more... (உன்ர தொலைபேசி இலக்கத்தைத் தா... நான் உன்னோட நிறையக் கதைக்க வேணும்...)” என்றாள்

Oh... No... I can't give you this number. This is my uncle's telephone. He doesn't like...(ஓ... நான் தரமாட்டன். மாமா அதை விரும்புறதில்லை...)” என்றாள் அருளானந்தனின் தங்கை மதிமலர்.

“I'm living next to Arul you know... Lately, He is thinking too much and..., so not normal... I want to know why... Please Mathy... I won't make nuisance calls. Believe me... I swear... pinky swear. (உனக்குத் தெரியும் நான் அருளுக்குப் பக்கத்தில இருக்கிறது... அவர் கடுமையா யோசிக்கிறார்... மற்றது...அவற்ர போக்கு இப்ப நல்லாயில்ல... அது ஏனெண்டு தெரியவேணும். தயவு செய் மதி... நான் அனாவசியமா தொலைபேசியில தொல்லை கொடுக்க மாட்டன். நான் சத்தியம் பண்ணுறன்... ‘பிங்கி ஸ்வயர்’ )” என்றாள். 
கடைசியில் சிறு குழந்தைகள் தங்களுக்குள் சத்தியம் செய்வது போலச் பிங்கி ஸ்வயர் எனச் சொன்னாள் சொல்வி.

மறுமுனையில் மதிமலர் சிரிப்பது துல்லியமாக சொல்விக்குக் கேட்டது.
சொல்வியும் சேர்ந்து சிரித்தாள்.

“Why are you laughing...? I'm so so scared when I look at him...(ஏன் நீ சிரிக்கிறாய்...? எனக்கு சரியான பயமா இருக்கு அவனைப் பாக்கேக்க...)”  என்றாள் சொல்வி மிகுந்த ஆதங்கத்துடன்.

“We used to make pinky swear in our childhood... That's what I laughed. Sorry... Yes..., I also wanted to talk with Arul... could you please help me. (நாங்கள் ‘பிங்கி ஸ்வயர்’ எண்டு சொல்றது சின்ன வயசில. அதாலதான் சிரிச்சிட்டன்... மன்னிச்சுக்கொள்ளு... நானம் அருளொட கதைக்கவேணும்... தயவு செய்து உதவி செய்...)” என்றாள் மதிமலர், அருளானந்தனின் தங்கை.

“Please... I want to talk with you so much about Arul. Please give me this telephone number... Please. (தயவு செய்... நான் உன்னோட நிறைய அருளைப் பற்றிக் கதைக்க வேணும். தயவு செய்து இந்தத் தொலைபேசி இலக்கத்தைத் தா...)” என்று இரந்து மதிமலரைக் கேட்கும்போது, சொல்விக்குக் குரல் தழுதழுத்தது. அழுகையே வந்துவிடும் போல இருந்தது.

“OK... OK... I also wanted to talk with someone there... But you should promise me, that you won't use this telephone number any other times (ஓகே... ஓகே... நானும் யாரேனும் ஒருத்தரோட அங்க கதைக்க வேணும்... ஆனா, நீ எனக்கு சத்தியம் பண்ண வேணும் வேறொருக்காலும் இந்தத் தொலைபேசிய பாவிக்க மாட்டனெண்டு...)” என்று வலியுறுத்தினாள் மதிமலர்.

உடனேயே

“I swear... I swear...” என்றாள் சொல்வி.

“Country Code is 91...” என சொல்லத் தொடங்க, சொல்வி நடுங்கும் கைகளோடு அதை எழுதிக் கொண்டாள்.
உடனேயே,

“Hei Mathi.. Malar..., stay there with telephone, I will call you right now... (ஹேய் மதி... மலர்... ரெலிபோனோடயே நில்லு, நான் உடனேயே கூப்பிடுறன்...)” என்றாள் சொல்வி அதே தழுதழுத்த குரலில்.

“ஓ.கே...” என மதிமலர் சொல்லும்போதே சொல்வி தொலைபேசியைத் துண்டித்துவிட்டு, நடுங்கும் கையில் இருந்த தொலைபேசியில் எண்களை அமுக்கினாள். கண்களில் நீர் திரையிட்டது. இலக்கங்கள் யாவும் இரண்டாகத் தெரிந்தது சொல்விக்கு, இருந்தும் கண்ணீரை துடைக்க நேரமில்லாமல் இமைகளை பலமுறை மூடித்திறந்து கொண்டே எண்களை அமுக்கினாள்.

தொலைபேசியைக் காதில் வைத்தபோது, இந்தியாவில் தொலைபேசி மணி அடிக்கும் அந்த இரட்டை ஒலிக்குறிச் சத்தம் சொல்விக்கு புதுமையாக இருந்தது. இனிமையாக இருந்தது. கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை மறு கையால்த் துடைத்தபடி குரலைச் சரி செய்யும்போதே,
மறுமுனையில் மதிமலர்,

ஹலோ...” என்றாள்.

“ஹலோ மதி மலர்...” என சொல்லும்போது, சொல்வி அழுதே விட்டாள்.

Selvi... Are you crying... (செல்வி... அழுறியா...)”  எனக் கேட்டாள் மதிமலர், மிகுந்த ஆதங்கத்துடனும் ஆச்சர்யத்துடனும்.

இனியும் தன்னால் தன்னிலையை மறைக்க முடியாது எனத் தெரிந்த சொல்வி,

“Yes... I am... crying... (ஒம்... நான்... அழுறன்...)” என்றவள் விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.

மறுமுனையில் அதைக் கேட்டுக் கொண்டிருந்த மதிமலர்,

“Why are you crying... so much... I am so sorry... (ஏன் இவ்வளவு அழுறாய்... என்னை மன்னிச்சுடு)” என மிகவும் ஆதராவகச் சொன்னாள் மதிமலர்.

ஒருவாறாகத் தன்னை அமைதிப்படுத்தி, கண்களைத் துடைத்துக் கொண்ட சொல்வி,

“I also wanted to talk with someone there... When you agree, I couldn't hold my feelings inside... (நானும் யாராவது அங்க ஒருவரோட கதைக்கவேணும் எண்டு இருந்தனான்... நீ ஓம் எண்டவுடனே என்னை நான் கட்டுப் படுத்தேலாமப் போச்சு...)” என்றாள் சொல்வி இப்போதும் தழுதழுக்கும் குரலுடன்...

சொல்விக்கு, அருளானந்தனின் தங்கையோடு கதைக்கப் போகிறோம்... அவள் தன்னை ஏற்றுக் கொள்ளவாளா... என்ற அச்சமும் அதே நேரம், ஆனந்தப் பரவசமுமே அவளுக்கு அழுகையைக் கொண்டு வந்தது.


(தொடரும்)

Monday, 12 October 2015