Monday 12 October 2015

தத்துவ வரிகள்


Saturday 29 August 2015

படிக்காத மனைவி - பாகம் 6 'தனிமை'

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).

மனதுக்குப் பிடித்தவரை சில மணிநேரம் பார்க்காமல் இருந்தாலே அது யுகங்களாகத் தோன்றும். இது, பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொருந்தும்... 

தனிமை


அன்றைய தொலைபேசி அழைப்பின் பின், அருளானந்தன் அமைதியை இழந்து தவித்தான். எதையும் சொல்வி கேட்டால்; எரிந்து விழுந்தான். சொல்வியும் அவனது நிலையால் அவளும் குழம்பித் தவித்தாள்.

அருளானந்தனுக்கு எந்த வகையில் ஆறுதல் கூறலாம்... அல்லது எந்த வகையில் அவனுக்கு உதவலாம் என யோசித்துக் குழம்பிப் போயிருந்தாள் சொல்வி. எதையும் அருளானந்தனைக் கேட்டுத் தெரிந்து கொள்ள இயலாமல்த் தவித்தாள்.

காரணமில்லாமல் சிடுசிடுத்தான் அருளானந்தன். முன்னரெல்லாம், சொல்வியைச் சாப்பிட விடாமல் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான். அதற்காகவே அவன் வரும் வரை சாப்பிடாமல் காத்திருப்பாள் சொல்வி.

கணவர் உணவு உண்ணும் வரை காத்திருந்து, கணவர் உண்ட இலையில் உணவு உண்பது தமிழ்ப் பெண்கள் வழமை... - இன்று அதெல்லாம் அருகி வருகிறது. -

அதாவது, தமிழ்ப் பெண்கள் தமது கணவர் எவற்றையெல்லாம் இலையில் மீதம் வைத்திருக்கிறார் எனப் பார்ப்பதற்காகவே அவர்கள் கணவர் உணவு உண்டு எழுந்த பின் அதே இலையில் உணவு உண்பது வழக்கமாயிற்று.

இன்னும், ஒருவர் உணவு உண்ணும்போது, அவருக்கு அருகில் இருந்து இன்னொருவர் உணவு பரிமாற வேண்டும். இது கணவன் உண்ணும்போது மனைவியும், மனைவி உணவு உண்ணும் போது கணவனும் உணவு பரிமாறுவது வழமை.
நாம் உணவு உண்ணும்போது, விரல்களால் உண்போம். ஏதாவது மேலதிகமாகத் தேவையெனில் அதை அருகில் இருந்து உணவு பரிமாறுபவர் எடுத்துத் தருவார். இதனால் உணவு உண்ட கையினால் அகப்பை முதலியவற்றை பிடிப்பதும் தவிர்க்கப் படுகிறது.
இவற்றை விட,
கணவன் உண்ட மீதம் மனைவி உண்பதும், மனைவி உண்ட மீதம் கணவன் உண்பதும் தாம்பத்திய நெருக்கத்தை இன்னும் மிகைப்படுத்தும். ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும். ஒரு கிளுகிளுப்பைத் தரும்.

அதெல்லாம் சொல்விக்குத் தெரியாது.

அருளானந்தன் வரும்வரை சொல்வி காத்திருப்பது, அவனது கலகலப்பான பேச்சிலும் இடைவிடாத நகைச்சுவையிலும் அவள் தன்னை மறந்து சிரித்துச் சிரித்து சாப்பிட வேண்டும். அதுதான் அவளது விருப்பம்...

ஆனால்...
“என்னை சாப்பிட விடு அருள் பசிக்குது...” எனக் கெஞ்சுவாள்.
“சரி... சரி... நீ சாப்பிடு...” என சில நிமிடங்கள்தான் பார்த்துக் கொண்டிருப்பான்; பின்னர் ஆரம்பித்துவிடுவான்.
அவளும் அவன் சிரிக்கச் சிரிக்க கதைத்துக் கொண்டிருக்கும்போதே சாப்பிட விரும்புவாள். மனமும் வயிறும் நிறைந்தது போல இருக்கும்.

பல மேலை நாட்டுப் பெண்கள், கணவர் அல்லது காதலர் வீடு வருமுன்னரே தமக்குப் பசித்தால், அவர்கள் உண்டு விட்டு உறங்கியும் விடுவார்கள்,

ஆனால்

சொல்வி அப்படிப் பட்டவளில்லை. சொல்வி உணவு உண்ணும்போது, யாராவது ஒருவரோடு சேர்ந்திருந்துதான் உணவு உண்பாள். நோர்வேயில் இருந்தபோது, ஹன்னா இவளுக்குத் துணையாக இருந்தாள். சுவீடன் வந்த பின்னர் எப்போதுமே அருளானந்தனுடன்தான் உணவு உண்பாள்.
அருளானந்தன், அவனது நண்பர்களோடு அரட்டையில் இருந்தால், அவளும் உணவு உண்ணாமலே உறங்கிவிடுவாள்.

“நான் வாறதுக்கு முன்னமே நீ சாப்பிடலாமே... ஏன் சாப்பிடாமல இருக்கிறனீ...” எனக் கேட்டான் ஒரு நாள் அருளானந்தன்.

“அது முடியாது... நீயும் இருந்து என்னோட சாப்பிட வேணும்... கதைக்க வேணும்... சிரிக்க வேணும் நானும் சாப்பிட வேணும்... அதுதான் எனக்குப் பிடிக்கும்.” என்றாள்.

“தமிழில இதுக்கு ஒரு பழமொழி சொல்லுவாங்க... ‘கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை’ எண்டு” என்றான்.

பழமொழி சொன்னதோடு நிறுத்திவிடாமல் அதற்கு விளக்கமும் சொன்னான் அருளானந்தன்.

“எனக்கு உன்னோட இருந்து சிரிச்சுக் கதைச்சு சாப்பிட வேணுமெண்டதுதான் ஆசை. அதுக்கு நீ இப்பிடி ஒரு அருத்தம் சொல்லுவாயெண்டால் சொல்லு... பறவாயில்லை” என்றாள் சொல்வி

“Heeeiii, நான் பழமொழிதானே சொன்னனான்... அதுக்குப்போய் இப்பிடி குழம்புறியே...” என ஆறுதல் சொன்னான்.

ஆனால்,

அந்தத் தொலைபேசி வந்த அன்றிலிருந்து, அவனிடம் அந்த நகைச்சுவை, குறும்பு, சின்னச் சின்னச் சிலுமிசங்கள், சின்னச் சின்னச் சீண்டல்கள், சின்னச் சின்னச் சிணுங்கல்கள் எல்லாம் இல்லாமல்ப் போயிருந்தது.

இருவரும் ஏதோ அன்னியர் இருவர் எதிரும் புதிருமாக இருந்து உணவு உண்பது போல உணவு உட்கொள்வார்கள்.
தொலைக்காட்சி கூட இருவரும் கூட இருந்து பார்ப்பதில்லை.

அன்று ஒரு புதன்கிழமை இருவரும் மறுநாள் காலை வழமை போல பல்கலைக் கழகம் செல்லவேண்டும், அதனால் சிறிது நேரத்துடனே அருளானந்தனும் சொல்வியும் படுக்கைக்குச் சென்றனர்.

படுக்கும் போது, எப்போதுமே; அருளானந்தன் எப்படிப் படுத்திருந்தாலும் - நிமிர்ந்து, சரிந்து, கவிழ்ந்து - சொல்வி அவனுக்கு மேல் ஒரு கையும் ஒரு காலும் போட்டபடிதான் படுத்துறங்குவாள்.
அனேகமாக, அருளானந்தன் நிமிர்ந்தே படுப்பவன். அவன் அப்படிப் படுத்திருந்தால், சொல்வி ஆசையாக அருளானந்தனது இடது கை புஜத்தில் தலை வைத்தபடி தனது இடது கையால் அருளானந்தனது மார்பை இறுக அணைத்தபடியும் இடது காலை அவனது கால்களுக்குக் குறுக்காக எறிந்தபடிதான் உறங்குவாள்.

ஆனால் அன்று அவள் அப்படிப் படுக்கவில்லை. தனது கரையில், அருளானந்தனைப் பார்க்கு முகமாக படுத்து கண்களை வலுக்கட்டாயமாக மூடிக் கொண்டு படுத்திருந்தாள்.
அந்த நிலையில் சொல்விக்கு நித்திரை வர மறுக்கும். நித்திரை வர மறுத்தது.

அருளானந்தன் என்றுமே ‘கும்’ என்ற இருட்டில் படுக்க மாட்டான். ஏதாவது சிறிய வெளிச்சம் படுக்கை அறையில் இருந்தே ஆக வேண்டும். அதனால், சொல்வியே இரண்டு வெளிர் நீல மின்சார விளக்குகளைப் பொருத்திருந்தாள். அவை கண்களை உறுத்தாது, ஆனால் ஒரு மென்மையான ஒளி பரப்பிய வண்ணமிருக்கும்.

அந்த வெளிச்சத்தில் சொல்வி, இடையிடையே கண் விழித்து, அருளானந்தனைப் பார்த்தாள். அவனோ ஆசையாக அவள் தலை வைக்கும் இடது கையை தனது தலைக்கு மேல் வைத்தபடி படுத்திருந்தான்.

இரவு நேரம் பத்து மணியிருக்கும், அருளானந்தனும் சொல்வியும் ஒருவரை ஒருவர் தொடமல்ப் படுத்திருந்த நேரம், தொலைபேசி ரீங்காரமாக ஒலித்தது.

அருளானந்தன் தமிழில்த் தொலைபேசியில்க் கதைத்தான். சொல்வி கேட்டுக் கொண்டே கண்களைத் திறக்காமல் படுத்திருந்தாள்.

“பொறு! அவள் படுத்திருக்கிறாள். நித்திரையெண்டா எழுப்ப மாட்டன். நித்திரையில்லாட்டி, கேட்டுட்டுச் சொல்றன்” என்ற அருளானந்தன் மெல்ல எட்டி சொல்வி போர்த்திருந்த அந்த தடித்த குளிர்காலப் போர்வையில்க் கை வைத்து, மிக மென்மையான குரலில்

“சொல்வி” என அழைத்தான்.

அருளானந்தன் தன்னைத் தொடும்வரை காத்திருந்த சொல்வி, கண்களைத் திறந்து அருளானந்தனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒரு சலனமும் இல்லாதிருந்தது.

“Heeii, ரகு, காரில நாளைக்கு காலமை ஒஸ்லோ போறானாம்... எங்கள் ரெண்டு பேரையும் வரட்டுமாம்...” என அருளானந்தன் சொல்லி முடிப்பதற்குள்,
“நீ தேவையெண்டா போயிட்டு வா... எனக்கு வர ஏலாது.” என்றாள் சொல்வி, இப்போதும் ஒரு சலனமுமில்லாது.

அப்போது, அருளானந்தன் அவளுக்கு அருகில் வந்து, அவளுக்கு மேலே வலது கையைத் தொலைபேசியோடு வைத்துக் கொண்டும் சொல்வியின் முகத்துக்கு மிக அருகில் தனது முகத்தை வைத்துக் கொண்டும்,
“ஹேய்... உனக்கு சுகமில்லையா... அப்பிடியெண்டா நானும் போகேல்ல...” என்றான் மிகுந்த ஏக்கத்துடன்.

“அப்பிடியெல்லாம் ஒண்டுமில்லை...” என்றவள், சைகையால் அருளானந்தன் வைத்திருந்த தொலை பேசியைக் காட்டினாள்.

“ஓ...” என்ற அருளானந்தன் சொல்வியை விட்டு உருண்டு வந்து, தொலைபேசியில்க் கதைத்தான்.

தொலைபேசியில்க் கதைத்து முடித்த பின், தன்னை முரட்டுத்தனமாக இழுத்து அணைத்து, முத்தம் தருவான். இந்த இரவு இனிமையான இரவாக விடியும் எனக் காத்திருந்தாள் சொல்வி.

ஆனால்,

அவள் எப்போது நித்திரைக்குப் போனாள் என்பது அவளுக்கே தெரியாது. காலையில் அருளானந்தன் அவளை எழுப்பிய போதுதான் கண் விழித்தாள்.

கையில் ஒரு குவளை கோப்பியுடன் சொல்வி அருகில் கட்டிலில் அமர்ந்திருந்தான் அருளானந்தன். அருளானந்தன் ஒஸ்லோ செல்வதற்கு ஆயத்தமான நிலையில் இருந்தான்.

“Heeiii, Good Morning...” என்றாள் சொல்வி அவளது மாறத புன்சிரிப்புடன்.
“Good Morning Sweetie...” என அருளானந்தனும் மலர்ந்த முகத்துடன் சொன்ன போது, சொல்விக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

“Are you ready for big journey? (உன்ர நெடுந்தூரப் பயணத்துக்கு தயாரா...)” எனக் குறும்பாகக் கேட்டாள் சொல்வி.

“ஹேய் உனக்குச் சுகமில்லையெண்டா... சொல்லு நானும் போகேல்ல...” என்றான் அருளானந்தன்.

“எனக்கொண்டுமில்லை... I'm fine... Why? (நான் சுகமாயிருக்கிறன்... ஏன்...) ” என்றாள் சொல்வி.

“இல்லை நீ இந்த ‘ட்ரிப்’(trip)க்கு வரமாட்டன் எண்றாய் அதாலதான் கேட்டன்.” என்றான் அருளானந்தான்.

“நானும் நீயும் தனிய ‘ட்ரிப்’புகள் போகேக்க இருக்கிற சந்தோஷம் இன்னொருத்தரோட போகேக்க இருக்காது... அதைவிட, நான் ஒஸ்லோவுக்குப் போனா, எங்கட வீட்டுக்குப் போகாம வரமாட்டன். அதுக்கு ரகு ஒத்துக் கொள்ள மாட்டான்.
ஏன் வீணா உன்ர ‘ப்ரெண்டுக்கு’ (friend)  தொல்லை கொடுப்பான் எண்டுதான் வரேல்ல எண்டனான்.” என்று சொல்லிக் கொண்டே சொல்வி படுத்திருந்த படியே அருளானந்தனின் கையைத் தடவிக் கொண்டிருந்தாள்.

“ம்...ம்... நீ சொல்றதும் சரிதான்” என அவள் சொன்னதை ஆமோதித்த அருளானந்தன்,

“ரெண்டு நாளும் என்ன செய்யப் போறாய்” எனக் கேட்டான்.

“கீழ் மாடியில, ஒரு ஆபிரிக்க நாட்டுக் காரன் இருக்கிறான். அவனோட போய்...” என சொல்வி முடிக்குமுன்பே

“Heeii..., that's good idea... Go and have fun... (ஹேய்..., அது நல்லதொரு யோசனை... போ... சந்தோஷமாயிரு...)” என்று சொல்வியைப் பார்த்து ஒரு கண்ணைச் சிமிட்டியபடி இரட்டை அர்த்தத்தில் சொன்னான் அருளானந்தன்.

அருளானந்தனும் இதே போல சொல்வியைச் சீண்டுவதுண்டு, அதனால் அவள் சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போகவில்லை. இன்னும் அவள் சொன்னதற்கு மேலாகச் சொன்னான்.

சொல்வி விரல்களை மடக்கிக் கொண்டு, கையினால் ஓங்கி ஒரு குத்துக் குத்தினாள், அருளானந்தனின் இடது புஜத்தில்.

“ஆ...உவ்... வலிக்குதடி” என்று தமிழில் கத்திக் கொண்டு அவள் அடித்த இடத்தை மறு கையால்த் தேய்த்து விட்டான்.

“வளி...குது... Oh... pain... that's good  (ஓ... வலி... அது நல்லது) எனச் சொன்ன சொல்வி தொடர்ந்து,

“அருள்... உன்னைத் தவிர நான், வேற யாரட்டையும் போவன் எண்டு நினைக்கிறியா...” என ஆதங்கத்தோடு கேட்டாள்.

“Heeeiii, don't be silly...” என சொல்வியின் முகத்தருகே குனிந்து,

“எனக்குத் தெரியும் நீ வீம்புக்காகக் கதைக்கிறாயெண்டு, அதுதான் நானும் அப்பிடிச் சொன்னன்” எனும் போதே, அழைப்பு மணி அடித்தது.

அப்படியே ஒரு சிறிய முத்தம் தருவான் என எதிர்பார்த்த சொல்வி ஏமாந்தாள்.
சொல்வியின் கண்கள் கலங்கிவிட்டதைக் கவனிக்காத அருளானந்தன், ஓடிச் சென்று வாசல்க் கதவருகில் இருந்த, பிரதான வாசல்க் கதவைத் திறக்கும் ஆளியோடிருந்த ஒலி வாங்கியை எடுத்து,

“ஹேய்...ரகு... உள்ள வாறியா... அல்லது நான் வரட்டுமா... ” எனக் கேட்டான்.
மடிக் கட்டிடத்தின் பிரதான வாசலில் நின்றிருந்த ரகு, மாடிக் குடியிருப்புகளின் எண்களோடிருந்த பலகையில் பொருத்திய ‘மைக்’ (microphone) அருகில் வந்து,

“நீ வாவென் பிறகேன் நான் உங்க வருவான். நான் காருக்குள்ள இருக்கிறன் வா” என்றான்.

“சரி வாறன்...” என ஒலி வாங்கியை அதனிடத்தில் பொருத்தி விட்டுத் திரும்பியபோது அங்கே நின்றிருந்த சொல்வி,

“நான் ஒண்டு கேட்பன் நீ தருவியா... ” என்றாள் மிகுந்த ஆதங்கத்தோடும்  ஏக்கத்தோடும்.

“ஹேய்... என்ன இப்பிடிக் கேக்கிறாய்... சொல்லு...” என்ற அருளானந்தன் அவளது இரு தோழ்களிலும் கைகளை ஆதரவாக வைத்தான்.

“எனக்கொரு ‘கிஸ்’ தா...” என்றவளது கண்கள் மீண்டும் பனித்தன.
உடனே சொல்வியை இழுத்து இறுக அணைத்து,

“I'm a stupid Sølvi, I'm so sorry...(நானொரு முட்டாள் சொல்வி... என்னை மன்னிச்சிடு...)” என்றவன், அவளது கழுத்தை ஒரு கையாலும் அவளது இடையை மறு கையாலும் இறுக அணைத்து ஆழமாக நீண்ட ஒரு முத்தம் கொடுத்தான்.
சொல்வியும் அவனை தனது இரு கைகளாலும் இறுக அணைத்துக் கொண்டாள்.

அணைப்பைத் தழர்த்தாமல் அவளது முகத்தருகே தனது முகத்தை வைத்து சொல்வியைப் பார்த்து,

“Oh... My... God... You smell sooo good... And in this lingerie, you look like an angel... (ஓ... கடவுளே... நீ நல்ல வாசமாயுமிருக்கிறாய்... இந்த உள்ளாடையோட நீ ஒரு தேவதை போலவும் இருக்கிறாய்...)” என்று அருளானந்தன் சொன்னபோது, சொல்வியின் முகம் மலர்ந்து, நாணத்தால் சிவந்தது.
சொல்வியும் அவனை இறுக இரு கைகளாலும் கட்டிப் பிடித்தபடியே நின்று கொண்டு,
“Thank You Arul...” எனச் சொல்லி, அவன் மார்பில் முகம் புதைத்தாள். அருளானந்தன் சொல்வியின் பொன்னிறக் கேசங்களை நுகர்ந்து அவளது உச்சியில் முத்தமிட்டான்.

“Hei, Can we have a quickie...? Before I go... (ஹேய், சின்னதா ஒண்டு செய்வமா... நான் போறதுக்கு முன்னால...) ” என்றான் ஆசையோடு அருளானந்தன்.
“ம்...ம்...ம்...” என சொல்வி அவனது மார்பிலிருந்து முகத்தை விலக்காமல் ‘ம்ம்ம்’ இராகம் இசைத்தாள்.

சொல்வி அசையாமல் அருளானந்தனின் அணைப்பில் சுகம் கண்டாள்.
“What do you say... My sweet angel...(என்ன சொல்றாய்... என் இனிய தேவதையே...)” என அருளானந்தன் சொல்வியின் காதுக்குள் கிசுகிசுத்தான்.

அருளானந்தனின் மார்பில் முகம் புதைத்திருந்த சொல்வி, திடீரென ஏதோ நினைவுக்கு வந்தவள் போல,  நிமிர்ந்து அருளானந்தனைப் பார்த்து,

“ரகு... வெளியில நிக்கிறான்... இப்ப வேண்டாம்... நீ வந்த பிறகு...” என்றாள் அருனாந்தனைத் தீர்க்கமாகப் பார்த்து சொல்வி.

“அவன் காருக்குள்ள இருக்கிறான்...” என அருளானந்தன் தொடருமுன், மீண்டும் அழைப்பு மணி அடித்தது.

சொல்வியை ஒரு கையால் அணைத்தபடி, மறு கையால் ஒலிவாங்கியை எடுத்து,
“நான் இப்ப வந்திடுறன் நில்லு...” என்றான் அருளானந்தன்.

அப்போ பிரதான வாசலில் நின்றிருந்த ரகு,

“நீங்க ரெண்டு பேரும் ‘அது’ செய்யுறதெண்டா செய்திட்டு வா... ஒரு பத்து பதினைஞ்சு...” என ரகு தொடருமுன்,

“ஹேய்... முட்டாள்... நான் கதவுக்குப்பக்கத்தில நிண்டு நீ மணியடிச்ச உடனே எடுக்கிறன்... என்ன சொல்லுறாய் நாங்கள் ரெண்டு பேரும் செய்யுறம் எண்டு...” என சொல்லிக்கொண்டே,
சொல்வியின் உதடுகளில் அருளானந்தன் தனது உதடுகளைப் பதித்தான்.

வாசலில் நின்றிருந்த ரகு ஏதேதோ சொன்னான். அதை அருளானந்தனோ அல்லது சொல்வியோ கேட்கவில்லை. கேட்கும் நிலையிலும் அவர்கள் இருக்கவில்லை.

அருளானந்தன், சொல்வியிடமிருந்து பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்று ஆள் உயர்த்திக்குள் (Lift) நின்று திரும்பிப் பார்த்தபோது, சொல்வி அவர்களது குடியிருப்பின் வாசலில் நின்று அருளானந்தனைப் பார்த்தாள்.

அருளானந்தன் ஒரு பறக்கும் முத்தம் தந்தான் சொல்விக்கு. பதிலுக்கு அவளும் ஒரு பறக்கும் முத்தம் தந்து கையசைத்து விடை கொடுத்தாள். அதற்கெனவே காத்திருந்தது போல, ஆள் உயர்த்தியும் தனது கதவுகளை மூடிக்கொண்டது.

சொல்வி உள்ளே வந்த உடனேயே தனிமையை உணரத் தொடங்கினாள். அவர்கள் சுவீடன் வந்திருந்த இவ்வளவு காலத்திலும் இதுவே முதல் முறையாக அருளானந்தனைப் பிரிந்து தனியே சொல்வி இருந்தாள்.

“இண்டைக்கு என்னால Universityக்குப் போகேலாது” எனத் தனக்குள் சொல்லியபடியே திரும்பவும் படுக்கையில்ப் போய் விழுந்தாள் சொல்வி.

அருளானந்தன் படுத்திருந்த தலையணையை எடுத்து அதில்த் தலை வைத்து, அருளானந்தன் கழற்றி கட்டிலில் எறிந்து விட்டுப் போன அந்த சாரத்தை எடுத்துத் தனக்கு மேல் போர்த்திக் கொண்டு படுத்தாள்.

ஆனால், அவளுக்கு நித்திரை வரவில்லை. நேரம் காலை மணி எட்டைத் தாண்டியிருந்தது.

சொல்வி நிமிர்ந்து அருளானந்தனின் சாரத்தைப் பார்த்தபோது, அருளானந்தனே அவளுக்கு மேல் படுத்திருப்பதைப் போல ஒரு பிரேமை வந்தது. அதனால் அவளது உடலெங்கும் உணர்வலைகள் கொந்தளிக்க தொடங்கியது.
அப்படியே அவனது தலையணையை எடுத்து மார்போடு இறுக அணைத்தபடி புரண்டு படுத்தாள். ஆனால், அவளுக்கு அதுவும் போதுமானதாக இருக்கவில்லை.

‘ச்சீ... என்ன இது ரெண்டு நாளில வந்துடுவான்... ரெண்டு நாள் என்னால பொறுக்க முடியாதா...’ எனத் தன்னைத் தானே சலித்துச்சொல்லிக் கொண்டாளே தவிர, அணைத்த அவனது தலையணையையும் விடவில்லை. அருளானந்தனது சாரத்தையும் நகர்த்தவில்லை. அவளால் இயலவில்லை. அப்படியே படுத்திருந்தாள்.

சிறிது நேரத்தில் மனதில் ஒரு உறுதியை வரவழைத்தவளாக படுக்கையிலிருந்து எழுந்து, அருளனாந்தன் கொணர்ந்த கோப்பியை எடுத்துப் பார்த்தாள். அது மிகவும் ஆறிப் போயிருந்தது.
அடுக்களை சென்று, கோப்பி வடிப்பானில் (Coffee maker) அருளானந்தன் வடித்து எஞ்சியிருந்த சூடான கோப்பியை தான் வைத்திருந்த குவளையில் நிரப்பி சிறிது உறிஞ்சிச் சுவைத்தபடி வந்தவள், படுக்கையிலிருந்த அருளானந்தனின் சாரத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றாள்.

அவளது உடல் முழுவதும் கோப்பி தந்த உஷ்ணத்தை விட, அவனது சாரம் அவளது பார்வை பட்டதும் தந்த உஷ்ணமே அதிகமாக இருந்தது. ஓடிச் சென்று அவனது சாரத்தை எடுத்து தனது உடலோடு அணைத்துக் கொண்டாள். அதில் அவள் கண்ட சுகத்துக்கோ அளவில்லை.

ஆம், பல நாட்கள் அருளானந்தனின் அணைப்பிற்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தவள். அவன் இருக்கும் போதே அவனது உடைகளை எடுத்து இப்படி அணைத்து தனது ஏக்கங்களை நிறைவு செய்து, மகிழ முடியாமலிருந்தது.

இப்போதுதான் அவனில்லையே,

அவனது சாரத்தோடு, அவன் போர்த்துப் படுத்திருந்த தடித்த குளிர்ப் போர்வையையும் எடுத்துக் கொண்டு, கூடத்துக் வந்து அருளானந்தனின் சாரம், அருளானந்தனின் போர்வை என அடுக்காகத் தனக்கு மேல்ப் போர்த்துக் கொண்டு தொலையிக்கியால் (Remotecontrol) தொலைக் காட்சியை இயக்கினாள் சொல்வி.

தொலைக் காட்சியில் சுவீடன் நாட்டுக் காலைநேர அரட்டை இன்னமும் நிறைவுறவில்லை. அதைப் பார்க்கும் மனோ நிலையில் சொல்வி இருக்கவில்லை.
அவளது கண்கள் அருளானந்தனின் ஒளி-ஒலிப்பதிவு நாடா பெட்டிகள் அடுக்கி வைத்திருந்த அந்த அடுக்குத் தட்டில் (Shelf) ஓடியது. சொல்விக்குத் தமிழ்த் திரைப் படங்கள் பார்க்க விருப்பம். ஆனால் அன்று அதையும் சொல்வி விரும்பவில்லை.
அங்கே, 'Tamil film songs' என அருளானந்தன் எழுதி வைத்திருந்த நாடா அவளது கண் பார்வையின் ஓட்டத்தை நிறுத்தியது.
உடனேயே எழுந்து சென்று அதை எடுத்து ஒலி-ஒளிப் பதிவு நாடா இயக்கியில் (Video Cassette Recoder - VCR-) திணித்துவிட்டு, ஒரு வகை உற்சாகத்துடன் சோபாவில் (Sofa) படுத்துக் கொண்டு அருளானந்தனின் சாரத்தை எடுத்து ஒரு முறை முகர்ந்து தனக்கு மேல்ப் போர்த்தி குளிர்போர்வையைப் போர்த்தும்போது,
“Oh... my sweet sweet Asian Hercules... Your smell kills me... When will you come back and crush me... Oh... my dearest Arul” (ஓ... என்ர இனிய... இனிய... ஆசிய ஹேக்குலீஸ்... உன்ர வாசம் என்னைக் கொல்லுது... எப்ப நீ திரும்பி வந்து என்னை அணைச்சுக் கசக்குவாய்... ஓ... என்ர அன்பு... அருள்...) எனச் சொல்லிக் கொண்டே, VCR ஐ இயக்கினாள்...

அதில் வசந்தமாளிகை என்ற படத்தில் ‘மயக்கமென்ன...’ என்ற பாடல் தொலைக்காட்சியில் ஓடத்தொடங்கியது.
அந்தப் பாடலை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தாள் சொல்வி...
அந்தப் பாடலில் வாணிஸ்ரீ அணிந்திருந்த சேலையைப் போல தானும் அணிய வேண்டும். அந்தப் பாடலில் சிவாஜி கணேசனைப் போல அருளானந்தனை உடை அணிய வைத்து, இந்த ஊர் முழுவதும் அவனோடு சுற்ற வேண்டும்... இந்த நாடு முழுவதும் சுற்ற வேண்டும்... என சிந்தனை ஓடியது சொல்விக்கு.

‘இதென்ன விபரீத ஆசை’ என நினைத்தவள் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள்.

சில நிமிடங்கள் பாடலைப் பார்த்தபடியே இருந்த சொல்வி...
“ஏன் நாமிருவரும் அப்படி உடையணிந்து கொண்டு ஊர் சுற்றினாலென்ன யார் வந்து தடை சொல்லக்கூடும்...?” என சத்தமாகவே கேட்டுக்கொண்டாள் சொல்வி.
அப்படி நினைக்கும்போதே, உடலெல்லாம் ஒரு உன்னதமான உணர்வலை பரவுவதை உணர்ந்தாள்.
உடனேயே அந்தத் தடித்த போர்வைக்குக் கீழே இருந்த அருளானந்தனின் சாரத்தை எடுத்து நுகர்ந்து, ஒரு ஆழமான பெருமூச்செறிந்தாள் சொல்வி.

அந்த ஒளி-ஒலிப்பதிவு நாடாவில் இருந்த அத்தனை காதல்க் காட்சிகளிலும் வந்த இந்தியத் தமிழ் நடிகைகள் போல தானும் சேலை கட்டி உலகம் முழுவதும் சுற்றி வர வேண்டும் என ஆசைப்பட்டாள்.

அந்த ஒளி-ஒலிப் பதிவு நாடாவின் நேரம் முடிவடைவதற்குள்ளேயே சொல்வியை நித்திரை தழுவிக்கொண்டது.

இனிய கனவுகளோடு உறங்கிக் கொண்டிருந்த சொல்வியை நண்பகல் பதினொரு மணியளவில், தொலைபேசி எழுப்பியது.

அருளானந்தன்தான் தொலைபேசி எடுப்பான், என ஆவலோடு தொலைபேசியை எடுத்து,

“Haiii Sweeetiii... What's up...” என்றாள் சொல்வி, கொஞ்சும் குரலில்.

Hello, could I speak to mr. Arul please...(ஹெலோ... நான் அருளோட கதைக்கலாமா... )?”  என்றது ஒரு இளம்பெண் மறுமுனையில்...

(தொடரும்...)

Tuesday 26 May 2015

படிக்காத மனைவி - பாகம் 5 'ஹலோ அங்கிள்'

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).


நோர்வேஜிய பெண்ணகளுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பன இல்லை எனப் பலர் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு...
அதுவும் முதல்ப் பாகங்களில் விரிகிறது.



 'ஹலோ அங்கிள்'...




அருளானந்தனும் சொல்வியும் ஒரு படுக்கையறை (Bed room), ஒரு வதிவறை (Living room), ஒரு அடுக்களை (Kitchen), ஒரு குளியல்க் கூடத்துடன் கழிகலன் கொண்ட குளியலறை (Bath & Toilet)  கொண்ட லின்டாவின் தந்தையின் தொடர் மாடி வீட்டிற்கு (Apartment) குடிபுகுந்து, ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் ஆகியிருந்தன.

அவர்களிருவரும் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான காலத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். 
கலாசாலை, வீடு, கலவி, சின்னச் சின்னச் சீண்டல், சின்னச் சின்ன சிலுமிசம், நண்பர்களுடன் கும்மாளம், 
நோர்வேயில் அருளானந்தனின் வருங்கல மாமனார் மாமியார் மைத்துனனின் அபரமிதமான உபசரிப்பு, இத்யாதி, இத்யாதி என இந்த ஒன்றரை வருட காலமும் அவர்களிருவரும் எந்த வித ஒரு சிக்கலுமில்லாமல் சிந்தனையுமில்லாமல் கழிந்தது.

குழந்தைகளைப்போல மகிழ்ச்சியாக, துன்பம் என்றால் என்ன... வாழ்க்கையில்ச் சிக்கலென்றால் என்ன... வெளி உலகில் என்ன நிகழ்கிறது, அதனால் எவ்வாறான சிக்கல்கள் தோன்றும்... அவற்றை எவ்வாறு சமாளிப்பது... என்ற எந்தவித சிந்தனையுமில்லாமல் அருளானந்தனும் சொல்வியும் இருந்தார்கள்.

அவர்களது கேள்விகளும் பதில்களும், யோசித்து முடிவெடுப்பது எல்லாமுமே...

இன்றைய உணவு வெளியேயா அல்லது சமையலா... ஐரோப்பிய உணவா இந்திய இலங்கை உணவா... சனி ஞாயிறுகளில் என்ன நேரம் எழுந்திருக்க வேண்டும்... சிநேகித சிநேகிதியர் யார் வருவார்கள்... யாரை அழைக்கலாம்... எங்கே சென்று வார இறுதியைக் கழிக்கலாம்... என்ன படம் பார்க்கலாம்... பார்த்த படத்தில் கதை, கதாபாத்திரங்களைப் பற்றி விவாதம்...
இறுதியாக இன்று எந்த நிலையில் கலவி அல்லது மறுநாள் அதை வைத்துக் கொள்வோமா...
இவைதான் அவர்களுடைய சிந்தனையும் யோசனையும் பதிலும் முடிவுகளும்.

எது எப்படி இருந்தாலும், சொல்வியிடம் ஒரு சிறிய மனத்தாங்கல் இருக்கத்தான் செய்தது. அது, ஒரு நாளுமே அருளானந்தன் சொல்வியை அவனது அப்பா அம்மா, தம்பி தங்கையுடன் தொலைபேசியில்க் கதைக்க அனுமதிப்பதில்லை.
அது ஏன் என அவளுக்குத் தெரியும்... அதுதான் அருளானந்தன் இன்னமும் அவர்களது காதலை அவனது பெற்றோருக்குச் சொல்லவில்லை என்பது.

ஆனால் அவளைக் குடைந்தெடுத்த கேள்வி என்ன என்றால், ஏன் அருளானந்தன தங்கள் காதலை இன்னமும் அவனது அப்பா-அம்மாவுக்குச் சொல்ல விரும்புகிறானில்லை என்பதும்,
எப்போது, எப்படி அவர்களது உறவை அருளானந்தனது பெற்றோருக்குச் சொல்வது... எப்போது யாழ்ப்பாணம் செல்வது... தனது வருங்கால மாமனார் மாமியாரை, மைத்துனன் மைத்துனியை எப்போது பார்ப்பாது... அவர்களெல்லோரும் தன்னோடு எப்படிப் பழகுவார்கள்... என்பதெல்லாம் அவளது விடை கிடைக்காத கேள்விகளாய் மனதை உறுத்தும்.

ஓரளவு தமிழ் கதைக்கத் தெரிந்திருப்பதாலும் எதையும் தாங்கிக் கொள்ளலாம் என்ற மனத் தைரியம் இருப்பதாலும் யாழ்ப்பாணத்தில் அவர்களோடு இருக்கும் காலத்தில் அவர்கள் மனம் கோணாத வகையில் நடந்து கொள்ளாலாம் என தன்னைத் தானே தேற்றிக் கொள்வாள். என்றுமே சொல்வி, இவை பற்றி அருளானந்தனிடம் கதைத்ததில்லை.

ஒருநாள், சொல்வி தனியே வீட்டிலிருந்தபொழுது, தொலைபேசி இனிய நாதத்துடன் ஒலித்தது.
அருளானந்தனும் சொல்வியும் வீட்டிலும் கலாசாலையிலும் இருந்தால், அநேகமாக தொலைபேசியில் தங்களது படிப்பு சம்பந்தமாகக் கதைத்து ஆய்வுகளை எழுதுவார்கள்.
அது மட்டுமல்ல, அவர்களிருவரும் தொலைபேசியிலும் காதலிப்பார்கள். நேரம் போவது தெரியாமல் தொலைபேசியிலேயே கொஞ்சிக் கொண்டிருப்பார்கள். பத்து நிமிட நேரத்தில் வீடு செல்லாம், ஆனால் பல மணிநேரம் தொலைபேசியில் கொஞ்சி விளையாடுவார்கள்.

அதனால், அந்த நேரத்தில் அருளனந்தன்தான் கலாசாலையிலிருந்து அழைக்கிறான் என்ற திடமான நம்பிக்கையில்
"Haai Sweetie... what's up..." என கொஞ்சும் குரலில் கேட்டாள் சொல்வி.

"ஹலோ... யாரிது..." என்றது ஒரு பெண் குரல் மறுமுனையிலிருந்து.

எண்ணற்ற தடவைகள் அருளானந்தனின் நண்பர்கள் தொலைபேசியில் சொல்வியுடன் தமிழில் கதைத்திருக்கிறார்கள். சொல்வி தனக்குத் தமிழ் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ளாது, அருளானந்தனிடம் தொலை பேசியின் ஒலி வாங்கியைத் (Receiver) தந்துவிடுவாள். அருளானந்தன் இல்லை என்றால் ஆங்கிலத்திலோ, நோர்வேஜிய மொழியிலோ அவர்களுடன் கதைப்பாள்.

தமிழ் விளங்கிக் கொண்டது போலவும் காட்டிக் கொள்வதில்லை. அவளது எண்ணமெல்லாம் சரளமாகத் தமிழில்க் கதைத்து அருளானந்தனை ஆச்சரியப்பட வைக்க வேண்டுமென்பதே.
அதுவும் அருளானந்தனின் தாய், தந்தை, தம்பி, தங்கை இவர்களுடன் அவள் தமிழில்க் கதைப்பதை அருளானந்தன் பார்த்து ஆச்சரியப்பட வேண்டும் என ஆவலுடன் காத்திருந்தாள். அந்த நாள் வெகு தூரத்திலும் இல்லை என்பதால், எவருக்கும் அவள் தனது தமிழறிவை வெளிக்காட்டாது இருந்தாள்.

ஆனால் எந்த ஒரு தமிழ்ப் பெண் மாணவியும் சொல்வியுடன் தமிழில்க் கதைத்துச் சீண்டுவதில்லை.

அதைவிட, அழைத்த பெண் சிறிது வயதில் முதிர்ந்தவாராகவும் தொலைபேசி அழைப்பு தூர இடத்திலிருந்து வருகிறதென்பதையும் சொல்வி புரிந்து கொண்டாள். 
ஆக, இந்தத் தமிழ்ப் பெண்ணுடன் தனக்குத் தெரிந்த தமிழில் கதைத்தாள் சொல்வி.

"ஹலோ... அருள்... அவர்... வீட்டில இல்ல... நீங்க... யாரு..." என மிகவும் ஆறுதலாகவும் சொல்லுச் சொல்லாகவும் கதைத்தாள்.

"அருளானந்தன்ர வீடில்லயா இது... பிழையான நம்பரா..." என்றது அந்தப் பெண் குரல்.

"இது சரியான நம்பர்தான்... அவரும்.... " என சொல்வி அடுத்த சொல்லுக்காக யோசித்த வேளை...

"நீ ஊர்ல எவடம்... உன்ர தமிழ் ஒரு மாதிரியிருக்கு... " என்றது அந்தப் பெண் குரல்.

"நான் நோர்வே..." என்றாள் சொல்வி.

"நீ நோர்வே நாட்டுப் பொண்ணா... தமிழ் கதைக்கிறியே..." என ஆச்சரியமாகக் கேட்டது அந்தப் பெண்குரல்.

"கொஞ்சம்... கொஞ்சம்... தெரியும்... கதைப்பன்..." என்றாள் சொல்வி அளவில்லாத சந்தோஷத்துடன் கூச்சத்துடனும்.

"Hello, this is Arul's father... (ஹலோ, இது அருளின்ர அப்பா...)" என அருளானந்தனின் தந்தை கதைத்தார்.
"Hello uncle...(ஹலோ... மாமா...)" என மட்டற்ற மகிழ்ச்சியுடன் அன்பாக அழைத்தவள் உடனேயே
"Was that Arul's mother...? (அது அருளின் அம்மாவா...)" எனக் கேட்டாள் சொல்வி, இப்போதும் அளவில்லாத மகிழ்ச்சியுடனும் ஆச்சர்யத்துடனும்.

"Yes... that was his mother...(ஓம்... அது அவனுடைய அம்மா...)" என அருளானந்தனின் தந்தை முடிப்பதற்குள் 
"Oh... My... God... I can not beilive I really talk to you...(அடக் கடவுளே... என்னால நம்ப முடியாமலிருக்கு உண்மையிலயே நான் உங்களோட கதைக்கிறன் எண்டத...)" என சொல்வி சொன்னபோது.

"May I know who you are...? and What you are doing in Arul's Apartment...? (நீ யாரெண்டு தெரிஞ்சு கொள்ளலாமா... நீ அருளின்ர வீட்டில என்ன செய்யுறாய்...)"என அருளானந்தனின் தந்தை கேட்டார்.
அப்போது, சொல்வி ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள்... அது அருளானந்தன் தங்களது காதலை அவனது பெற்றோருக்கு இன்னமும் சொல்லவில்லை என்பது.
சொல்விக்கு இதைப்பற்றி அந்த இந்தியத் தமிழ்ப் பெண், தமிழ் சொல்லித் தரும்போது, கதைத்திருந்தாள். 'பொதுவாக, காதல் வசப்பட்ட ஆணோ பெண்ணோ தமது பெற்றோரிடம் அதைச் சொல்ல பயப்படுவார்கள். எதற்கும் நீ அருளானந்தனிடம் கேட்டுத் தெரிந்துகொள். எக்குத் தப்பாக தொலைபேசியில் மாட்டிக் கொள்ளாதே' என எச்சரித்திருந்தாள். 

அருளானந்தனிடம் சொல்வி கேட்டபோதெல்லாம், 'நான் சொல்கிறேன்... நான் நிட்சமாகக் கதைக்கிறேன்' என்றானே தவிர அவன் தனது காதலை அவனது பெற்றோருக்குச் சொல்லவில்லை என்பதை அவனுடைய தந்தையின் கேள்வியிலிருந்து அறிந்து கொண்டாள்.

இந்த யோசனையெல்லாம் அசுர வேகத்தில் சொல்வியின் தலைக்குள் சுழன்று சரியான ஒரு யுக்தியை, ஒரு யோசனையைக் கொண்டு வந்தது.

"No... Uncle... I am in my room; but we share this telephone to reduce the cost... (இல்ல.. மாமா... நான் என்ர அறையில இருக்கிறன்... நாங்க ரெண்டு பேரும் இந்தத் தொலைபேசியை பகிர்ந்து கொள்றம்... செலவைக் குறைக்கிறதுக்காக...)" என்றாள் சொல்வி ஒரு பதட்டத்தையும் வெளிக்காட்டாமல்.

"Oh... that's very good idea and how... is it possible...? (ஓ... அது நல்லதொரு யோசனை... ஆனா... அதெப்பிடி... அது செய்யலாமோ...)" எனக் கேட்டார் அருளானந்தனின் தந்தை.

"Oh... Yes... It is very simple uncle... Just assume we put another one telephone in a bed room or any where else... at home... Just like that... Arul's friend who made the connection...(ஒமோம்... அது வெகு சுலபம்... இப்ப... ஒரு வீட்டிலயே ஒரு தொலைபேசியை படுக்யையறையிலயோ... அல்லது வேறேதாவது இடத்திலயோ பூட்டூற மாதிரி... அருளின்ர நண்பர் ஒருவர்தான் அப்பிடி இணைப்புக் கொடுத்தவர்..." என ஒரு பொய் சொன்னாள்.

"Oh... Yes... Yes... that's wonderful...(ஓமோம்... அது நல்லது...)" என அருளானந்தனின் தந்தை சொன்னபோது, சொல்வி மார்பில்க் கையை வைத்து, 'Oh... My... Jesus...(ஓ... என்ர யேசுவே...) தப்பிச்சேன்... Thank You...' என மனதுக்குள் கடவுளுக்கு நன்றி செலுத்தினாள்.

அவள் தங்களது காதலை அருளானந்தனே அவனது பெற்றோருக்குச் சொல்ல வேண்டும் என நினைத்தாள். அதுவே முறையானதும் என நினைத்தாள். அருளானந்தன் அவர்களது காதலைச் சொல்லாமலிருக்க, தான் அதைச் சொல்லி அதனால் அருளானந்தனின் பெற்றோர் அருளானந்தன் மீது கோபங்கொள்ளக் கூடும் எனவும் யோசித்தே அப்படி ஒரு பொய்யைச் சொன்னாள் சொல்வி.

"I didn't get your name...(உன்ர பேரைச் சொல்லேல்ல...)" என்றார் அருளானந்தனின் தந்தை.
"Oh... Sorry Uncle... My name is Selvi... uncle...(ஓ... மன்னியுங்கள் மாமா... என்ர பேர் செல்வி...)" என்றாள் சொல்வி பணிவுடன்.

"Oh... Are you Tamil...? (ஓ... நீ தமிழா...?)" என்று ஆச்சரியத்துடன் கேட்டார் அருளானந்தனின் தந்தை.
"Oh... No uncle... I am a Norwegian, but my name sounds like Tamil name... Arul also told me... (ஓ... இல்லை மாமா... நான் ஒரு நோர்வே நாட்டவள்... ஆனா என்ர பேர் தமிழ்ப் பேரைப்போல இருக்கு... அருளும் அதைச் சொன்னவர்...)" என்றாள் சொல்வி.

"Hello, Selvi... would please ask Arul to call us... We are now staying with Arul's uncle in Madras...(ஹலோ, செல்வி... தயவு செய்து...அருளை எங்களுக் தொலைபேசி எடுக்கச் சொல்கிறாயா... நாங்கள் இப்ப அருளின்ர மாமாவோட சென்னையில இருக்கிறம்...)" எனக் கேட்டுக் கொண்டார் அருளானந்தனின் தந்தை.

"Ok... Uncle... I'll tell him..."எனச் சொன்னாள் சொல்வி.

"Thank You... Selvi... It is very nice to talk with you... You are a nice girl... Take care...(நன்றி செல்வி... உன்னோட கதைச்சது சந்தோஷம்... நீ ஒரு நல்ல பிள்ளை... பாதுகாப்பாய் இரு...)" என மிகுந்த அன்புடன் சொன்னார் அருளானந்தனின் தந்தை.

சொல்விக்கு சந்தோஷத்தால் கை கால்கள் நடுங்கியது, உதடுகள் துடித்தன, நாணத்தால் முகம் சிவந்தது. சொல்வி தொடர்ந்து நிற்க இயலாமல் கதிரையில் சாய்ந்தாள்.

"Thank You uncle... And I'll take care of Arul..."என்றவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள். ஆனால் மறுமுனையில் அது தெளிவாகக் கேட்கவில்லை...

"Bye... Bye..."என்றார் அருளானந்தனின் தந்தை.

"Bye..." என நடுங்கும் கைகளால் தொலைபேசியின் ஒலி வாங்கியை தொலைபேசியில் வைத்தவள், சோர்ந்துபோய் அப்படியே கதிரையில் அமர்ந்திருந்தாள்.

சொல்விக்கு ஒரு பக்கம் சந்தோஷம், கிளுகிளுப்பு அவள் உடலை ஆக்கிரமித்தாலும், மறு பக்கம் மூளையை குடைந்தெடுத்தது பலமான யோசனை.

அந்த யோசனையெல்லாம் அருளானந்தன் ஏன் இன்னமும் தங்களது காதலை அவனது பெற்றோருக்குச் சொல்லத் தயங்குகிறான் என்பது. சிந்தனை வசப்பட்டவளாக இருந்தவள், அப்படியே உறங்கிவிட்டாள்.

அருளானந்தன் வீடு வந்தபோது, சொல்வி கதிரையிலேயே ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.

புத்தகப்பையை சத்தமில்லாது வைத்துவிட்டு, சொல்வியினருகில் வந்து நின்று அவள் நித்திரை செய்யும் அழகை சில நிமிடங்கள் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான்.
ஒவ்வொரு முறையும் சொல்வி மூச்சு இழுத்து விடுகையில் அவளது மார்பு ஏறி இறங்குவதை பார்த்து இரசித்து,

"My... Sweet... Angel...(எனது... இனிய தேவதை...)" எனச் சொல்லிக் கொண்டே சொல்வியின் நெற்றியில் முத்தமிட்டான் அருளானந்தன்.

"அ... என்ன..." எனக் கேட்டுக் கொண்டே கண் விழித்து அருளானந்தனைப் பார்த்தாள்  சொல்வி.

"எனது இனிய தேவதை... எண்டு சொன்னனான்..." என்ற அருளானந்தன், அந்த மூவர் அமரக்கூடிய கதிரையில் (Sofa) சொல்விக்கு மிக அருகில் அமர்ந்து சொல்வியை இறுக அணைத்து அவளது உதடுகளில் கனிவாக முத்தமிட்டான்.

அவனது கைகளுக்குள் சொல்வி இதமாக அவனது மார்பில் முகம் புதைத்து சிறிது நேரம் சுகம் கண்டாள்.

"அது சரி... நீ அப்பிடி என்ன செய்து... இப்பிடிக் களைச்சுப் போய் சோபாவில நித்திரை கொள்றாய்...?" என அருளானந்தன் கேட்டதும் சொல்வி அவனது கைகளுக்குள்ளேயே அணைந்து மார்பிலிருந்து விலகாமல் தலையை நிமிர்த்தி, அருளானந்தனைப் பார்த்தாள்.
பின்னர்

"எனக்கு என்னெண்டு தெரியேல்ல... மேசையில இருந்து திசீஸ் (thesis ஆய்வறிக்கை) எழுதிக் கொண்டிருந்தனான் எப்பிடி இதில வந்து நித்திரை கொண்டனெண்டு தெரியேல்ல..." எனக் குழம்பினாள்.

"நீ எதையோ கடுமையா யோசிச்சிருக்கிறாய்... அதால மூளை களைச்சுப் போயிட்டுது... கொஞ்ச நேரம் இதில இருப்பம் எண்டு வந்திருப்பாய்... அப்பிடியே நித்திரையாயிட்டாய்..." என விளக்கம் கொடுத்தான் அருளானந்தன்.

அதைக் கேட்டபோது,

திடீரென அவனது இரு கைகளையும் விலக்கிக் கொண்டு எழுந்திருந்த சொல்வி, அருளானந்தனையே பார்த்தாள். அந்தப் பார்வையில் கலக்கம் நிறைந்திருந்தது.

"ஹேய்... என்ன அப்பிடிப் பாக்கிறாய்..." எனக் குழப்பத்தோடு கேட்டான் அருளானந்தன்.

"நீ எப்ப... எங்களை அல்லது என்னைப் பற்றி உன்ர அம்மா-அப்பாவிட்ட சொல்லப் போறாய்..." என ஏக்கத்துடன் கேட்டாள் சொல்வி.

"சொல்றன்... இப்ப இலங்கேல பிரச்சனையாம் இப்ப போய் எங்களப் பற்றிக் கதைச்சா அவையள் என்ன சொல்லுவினம் எண்டு தெரியாது. ஆறுதலா நேரம் வரேக்க சொல்றன்... இப்ப எதுக்கு அதெல்லாம்... நீ அளவுக்கு அதிகமா யோசிக்கிறாய்..." என ஆறுதல் சொல்லியபடியே சொல்வியை அணைத்தான்.

சொல்வியும் அவனது மார்பில் சாய்ந்தபடி,

"நான் இண்டைக்கு உன்ர அம்மா அப்பாவோட கதைச்சனான்..." எனச் சொல்லியபடியே அவனது சட்டைக்குள் (Shirt) விரல்ளை சொருகி அருளானந்தனின் மார்பில் இருந்த மயிர்களைக் கோதி விட்டுக்கொண்டிருந்தாள்.

அருளானந்தன் திகைத்துப் போய், சொல்வியை தூக்கி நேராக இருத்தி அவளது விழிகளுக்குள் பார்த்து,

"என்ர அம்மா அப்பாவோட கதைச்சனியா...? எப்ப... என்ன சொன்னனி... அவை என்ன சொன்னவை..." என பதட்டப்பட்டான் அருளானந்தன்.

"Relax... (ஆறுதலாயிரு...) நானொண்டும் உன்ர ரகசியத்தை அவயளட்டச் சொல்லேல்ல... எனக்கு இதை அந்த இந்தியத் தமிழ்ப் பெண் சொல்லி எச்சரித்திருக்கிறாள்... " என சொன்னவளின் கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றாகிக் கன்னத்தில் வழிந்தது.

"ஹேய்... ஏனிப்ப அழுறாய்... நீ என்ன கதைச்சனி எண்டுதானே கேட்டனான்..." என சொல்வியை அணைத்தான்.

"ஆசையா... ரெண்டு வார்த்தை உன்ர அம்மாவோட கதைக்கேலாமப்போச்சு... ஆசையா... உன்ர அப்பாவை 'அங்கிள்' எண்டன்... அவர்... அவர்... 'யார் நீ...' எண்டு கேட்டுட்டார்..." என விம்மலினூடே சொன்னாள் சொல்வி.

"ஹேய்... அழாத... அம்மா அவ்வளவுக்கு இங்கிலீஸ் கதைக்கமாட்டா... அப்பாவுக்குத் தெரியாததால நீ யார்... எண்டு கேட்டிருப்பார். இப்ப... உதாரணத்துக்கு நீ நோர்வேயில இருக்கிறாய் இங்க நீ கோல் (Call) எடுக்கேக்க... ஒரு பொம்பிள கதைச்சா நீ என்ன கேட்பாய்..." எனச் சமாதனம் சொல்லும் வகையில் அருளானந்தன் கேட்டபோது,

அவனது மார்பை விட்டெழுந்து அருளானந்தனின் முகத்தைப் பார்த்து,

"அடுத்த ப்ளைட்டில (flight) இங்க வந்து நிப்பன்..." எனச் சொல்லி அவனது மார்பில் 'தும் தும் தும்' எனக் குத்தினாள் சொல்வி.

சொல்வியை அப்படியே அணைத்து அவளது உதடுகளில் முத்தங் கொடுத்தான் அருளானந்தன்.

"ஹேய்... உன்ர அம்மா அப்பா, தம்பி தங்கை எல்லாரும் இந்தியாவுக்கு வந்திருக்கினமாம். உன்ர அங்கிள் வீடடிலதான் தங்கியிருக்கினமாம்... உன்னை கோல் பண்ணச் சொல்லச் சொன்னார் உன்ர அப்பா... என்ர மாமா..." என வெட்கத்துடன் சொல்லி அவனது மார்பில் முகம் புதைத்தாள் சொல்வி...

"ஐயோ வெக்கத்தைப் பார்... முகமெல்லாம் வெக்கத்தில சிவந்து போச்சு..." என சொல்வியை அணைத்து அவளது உச்சியல் முத்தமிட்ட அருளானந்தன், தொலைபேசியைின் ஒலிவாங்கியை எடுத்து, எண்களை அமுக்கினான்.

சொல்வி அவனது மடியில் படுத்திருந்தபடியே தொலைக் காட்சிப் பெட்டியை இயக்கி சத்தமில்லாது பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு பத்து, பதினைந்து நிமிடம் அருளானந்தன் தொலைபேசியில் அவனது அம்மா அப்பாவுடன் கதைத்து முடித்தவன் தொலைபேசியை வைத்துவிட்டு, சொல்வியின் பொன்னிறக் கேசங்களைக் கோதிவிட்டுக் கொண்டிருந்தான்.
சொல்விக்கு அருளானந்தனின் தமிழ் ஓரளவுக்கு விளங்கினாலும் முழுவதையும் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

சொல்வி நிமிர்ந்து அருளானந்தனைப் பார்த்தாள். அவளது பார்வையில் 'நாம் யாழ்ப்பாணம் போக முடியாதா...' என்ற கேள்வி நிறைந்திருதது. அருளானந்தன் சொல்வியின் பார்வையை சந்திக்கத் தைரியமில்லாது, சுவரை வெறித்துப் பார்த்த வண்ணம் அவனது மடியில்ப் படுத்திருந்த சொல்வியின் தலைமுடியைக் கோதிக்கொண்டிருந்தான்.

தொடரும்...

Wednesday 13 May 2015

படிக்காத மனைவி - பாகம் 4 பிறந்த நாள் - தொடர்ச்சி...

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).



பிறந்த நாள் - தொடர்ச்சி...



"அருள் ஒரு நல்ல காதலர்...(Arul is a great lover...)" எனும் போது,
"படுக்கையிலா... அல்லது... பொதுவாகவா...?" என்றான் ஒருவன்
"படுக்கையிலும்... பொதுவாகவும்..." என்று சொல்வி சொல்லும் போதே சொல்வியின் முகம் செஞ்சாந்து பூசிக் கொண்டது. சொல்வி முகத்தை மூடிக் கொண்டாள்.
"Oh... Oh... Ha..." என அங்கேயிருந்த பெண் மாணவிகளெல்லாம் ஆச்சர்யப்பட்டு ஏக்கப் பெருமூச்செறிந்தனர்.

"வா...  தனிய... உன்னைக் குடைஞ்சு, எல்லா விஷயங்களையும் எடுக்கிறன்..." என்றாள் சொல்வியின் சிநேகிதி ஒருத்தி.
சொல்வி வெட்கத்தோடு அவளைப் பார்த்தாள். அனைவரும் சொல்வியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தன்னைச் சுதாகரித்தவளாக சொல்வி தொடர்ந்தாள்

"Arul takes care of me... (அருள் என்னைப் பார்த்துக் கொள்கிறார்.)" என்று சொல்லி சொல்வி தொடர முற்படுகையில்...

"What do you mean by that... (அதனர்த்தம் என்ன...)" என்றாள் சொல்வியின் சிநேகிதி ஒருத்தி.

"How do I describe...mmm... (எப்படி நான் விபரிக்க... ம்... ம்...)" என்று விட்டு...

"OK... OK... இப்போ... உதாரணமாக... எனக்கு சுகமில்லையெண்டா... நான் பேசாம படுத்திருக்கலாம் அருள் எல்லா உதவியும் செய்வார்... எனக்கு ஆறுதாலா இருப்பார்." என சொல்வி தொடர... 

எல்லோரும் மெளனமாக சொல்வியையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருளானந்தன் சிரித்துக் கொண்டிருந்தான். சொல்வி அருளானந்தனின் முதுகில் தனது வலது கையால் தடவியபடியே தொடர்ந்தாள்...


"எங்களுக்குத் தெரியாத நிறைய விஷயங்கள் அருளின்ர கலாச்சாரத்தில இருக்கு... அதையெல்லாம் நான் அருளானந்தன் மூலமா தெரிஞ்சு கொண்டிருக்கிறன்... அனுபவிச்சுக் கொண்டிருக்கிறன்..." எனத் தொடரமுன்

"One of that is Karmasutra... isn't it?... (அதில ஒண்டு காமசூத்திரா... இல்லையா...)" என்றான் ஒருவன் அருளானந்தனைப் பார்த்துக் கண் சிமிட்டியவாறு...

"Yes... ஆனா... அதில்ல நான் சொல்றது..." என்றபோது, அனைவரும் ஆவலோடு 'இவளென்ன சொல்கிறாள்' என சொல்வியையே பார்த்தனர்.

"இப்ப... உதாரணமா... எங்களுக்கு மாதவிலக்கு வருமில்லையா..." என்றபோது,

"Ahh... what does he do for that... What do you do for her menses... Arul...? (அஹ்... என்ன அதற்கு அவன் செய்கிறான்... என்ன செய்கிறாய் நீ அருள் அவளின்ர மாதவிலக்கிற்கு...)" என்று கேட்டான் அருளானந்தனின் நண்பன் ஒருவன்.
அருளானந்தனுக்கு சிறிது வெட்கமும் கோபமுமாக இருந்தது. தலையைக் கவிழ்ந்து கொண்டு,

"Let her talk please... I totally do not like these...(தயவு செய்து அவளைக் கதைக்க விடுங்க... எனக்கு இது ஒண்டும் பிடிக்காது...)"என்றான் அருளானந்தன்.

"Arul... They our friends... Please not to be mad... They want to know how wonderful you are... (அருள்... அவர்கள் எங்களுடைய நண்பர்கள்... தயவு செய்து கோவிக்காத...நீ எவ்வளவு சிறந்தவன் என அவர்கள் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள்...)" என மிகவும் பணிவாக அருளானந்தனின் காதில் சொன்ன சொல்வி, தொடர்ந்து,

"அருளானந்தன் ஒரு நல்ல பண்புடையவர்... கலகலப்புடன் பழகுவார்... அவரோட இருந்தா கவலையே தெரியாது... சிரிக்க வைத்துப் பேசிக்கொண்டே இருப்பார்... அருளின்ர நல்ல குணங்களை சொல்ல நான் எடுத்த உதாரணம் சில வேளையில உங்களுக்கு விபரீதமா... அல்லது அருவெறுப்பாய்க் கூட இருக்கலாம்... ஆனா... என்னைப் பொறுத்த வரையில அதுதான் சிறந்த உதாரணம்... அருளைப்பற்றியோ அல்லது அருளின்ர தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றியோ சொல்றதுக்கு..." என மூச்சு விடாமல் சொன்ன சொல்வி, 

மேசை மீது அவளுக்கு முன்னாலிருந்த கண்ணாடிக் குவளையில் நீரை நிரப்பி மட மடவெனக் குடித்தாள். சொல்வி தொடரும் வரை அங்கே ஒருவர்கூட ஒரு வார்த்தை பக்கத்தில் இருப்பவரிடம்கூடக் கதைக்காமல், சொல்வியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மீண்டும் சொல்வி தொடர்ந்தாள்,
"எனக்கு மாதவிலக்கு நாட்களில் அருள் என்னை எதுவுமே செய்ய அனுமதிப்பதில்லை... எனது அறையில் மீன் தொட்டி கழுவி நீர் மாற்றுவதிலிருந்து எனக்கு உணவு தயாரிப்பது... இன்னும் என்னென்ன நான் செய்வேனோ அவையெல்லாம் அருள் செய்வார்... நான் தொலைக்காட்சி பார்த்தபடி அமர்ந்திருப்பேன்... நான் கேட்டதற்கு அவர் சொன்னார்... 'தங்களது கலாச்சாரம் அப்படியெனவும், மாதவிலக்கான பெண்களை தாங்கள் எந்த வேலையையும் செய்ய அனுமதிப்பதில்லையெனவும்... நீ இந்த நாட்டு பெண் என்பதால் நான் என்னை விட்டுத்தர தயாரில்லையெனவும்' சொன்னார்" என்ற போது, அனைவரும் பிரமித்துப்போய் அமர்ந்திருந்தனர்.

"Is he great guy or what..." என சிறிது நேரம் நிறுத்திய சொல்வி,

"OK...OK... இனி நான் சொல்லப் போற good news... everyone." என மிகுந்த மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாள் சொல்வி...
"நீங்க எல்லாம் என்ர வலது கையில ஒளி வீசும் வைரக் கல்லோட ஒரு 'றிங்கை' (Ring) கண்டிருப்பீங்க... எல்லாரும் சரியா யூகிச்சிருப்பீங்க... இருந்தாலும்;  இந்த இடத்தில நானே சொல்றதில எனக்கும் பெருமை... 
நானும் அருளும் திருமணம் செய்யிறதா முடிவு செய்திருக்கிறம்... This is my engagement ring (இது எனது நிட்சயதார்த்த மோதிரம்...)அருள்தான் போட்டே விட்டான்..." என சொல்லி சொல்வி தனது வலது கையை உயர்த்தி தனது மோதிரத்தை எல்லோருக்கும் காட்டினாள். அப்போது,

"Congratulations... You guys are made for each other... (வாழ்த்துக்கள்... நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எனப் படைக்கப் பட்டிருக்கிறீர்கள்...)" என ஏகோபித்த குரலில் நண்பர்கள் வாழ்த்தினர்.

அருளானந்தனின் நண்பனொருவன்,

"No... Sølvi was made for me... Arul somehow stole from me (இல்லை... சொல்வி எனக்கா உருவாக்கப்பட்டவள்... அருள் எப்படியோ திருடிவிட்டான்...)" என்றான். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். 

"This is the joke of the year... (இதுதான் இந்த வருடத்தின் நகைச்சுவை)" என்றான், இன்னொருவன்.

பரிசுப் பொதிகளைப் பிரித்துப் பார்க்கச் சொன்னார்கள்.

ஒரு பரிசுப் பொதி ஆணுறைப் பெட்டியைக் கொண்டிருந்தது. இன்னொன்று பாலியல் விளையாட்டு அதிரியைக் (Vibrator) கொண்டிருந்தது. மற்றுமொன்று காற்றடித்தால் பொம்மையாகும் பொம்மையைக் கொண்டிருந்தது. அதனோடு
'அவளுக்கு எல்லா நாளும் இயலும் என நினைக்காதே... அவளுக்கு இயலாத நாட்களில் இது உதவும்' என எழுதப்பட்டிருந்தது.

அதை அருளானந்தன் சத்தமாகவே வாசித்தான்... அப்போது, சொல்வியின் முகம் நாணத்தால் சிவந்தது. எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

ஒவ்வொரு பரிசுப் பொருளைப் பிரித்த போதும் அது பாலியல் சம்பத்தப் பட்டதாகவே இருந்தது. ஒவ்வொன்றுக்கும் பெரியதொரு சிரிப்பலை எழுந்து அடங்கியது.

ஒருவாறாக, அந்த வைபவம் நிறைவுற்றது.

அருளானந்தனும் சொல்வியும் வெளியே வந்த போது; அவர்களுக்காக ஒரு வாடகை வாகனம் (Taxi) காத்திருந்தது. சொல்வி எதுவும் சொல்லாமல் ஏறிக்கொண்டு,

"அருள்... வா..." என்றாள்.

"இன்னும் என்ன Surprise  வைச்சிருக்கிறாய்" என்றபடி காரினுள்ளே ஏறினான்.

ஒருவரும் ஒன்றும் சொல்லாமலே கார் (car) ஒடத்தொடங்கியது.

அருளானந்தன் சொல்வியின் கையை எடுத்து முத்தங் கொடுத்து;

"Thank You... for a wonderful party... you are the best... I love you... (ஒரு நல்ல வைபவத்திற்கு நன்றி... நீ மிகச் சிறந்தவள்... நான் உன்னைக் நேசிக்கிறேன்... )" என்று சொல்வியை அணைத்து அவளது உதடுகளில் முத்தமிட்டான்.

வாடகை வாகனம் (Taxi) Best Western Hotelக்கு முன் நின்றது.

சொல்வி காருக்கான கட்டணத்தைக் கொடுக்க முற்படுகையில் அருளானந்தன் தடுத்துவிட்டு; தானே அந்தக் கட்டணத்தைச் செலுத்தினான்.

"இங்க எதுக்கு..." என்றான் அருளானந்தன்.

"வா... சொலறன்..." என்றபடி முன்னே நடந்து சொல்வி, பணிப் பெண்ணிடம் ஒரு அறை திறக்கும் அட்டையைப் பெற்றுக் கொண்டாள்.

இருவரும் அறைக்கு வந்தபோது;

"இதெல்லாம் வீண் செலவு சொல்வி..." என்றான் அருளானந்தன். அப்போது, சொல்வி தனது வலது கையின் மோதிர விரலையும் மோதிரத்தையும் இரகசியமாகப் பார்த்துவிட்டு,

"Arul... don't be silly... (அருள் சிறுபிள்ளைத்தனமாக இராதே...)" என்றவள்.
அருளானந்தனை அணைத்து ஆழமாக முத்தமிட்டு, அவனை இழுத்துச் சென்று கட்டிலில் அமர வைத்துவிட்டு,

"இரு... நான் உடை மாத்திக் கொண்டு வாறன்" என்று சொல்லிக் கொண்டே குளியலறைக்கு நடந்தாள் சொல்வி.

"ஏன் பாத்றூமுக்கு... (Bathroom) எத்தின நாள் எத்தின ஆயிரம் தரம் உன்ன உடுப்பில்லாம பாத்திருப்பன்." எனச் சொல்லி சொல்வியைப் பார்த்தான் அருளானந்தன்.

"ம்... உனக்கு முன்னால உடுப்பு மாத்தலாம் ஆனா நீ என்னை விடமாட்டியே..." என குளியலறை வாயிலில் நின்று சொன்னவள்,

"ஹேய்... அந்த இடத்திலயே இருக்கவேணும்... உள்ளுக்கு வந்தாய்... நடக்கிறது வேற..." எனச் சொல்லிவிட்டு குளியலறை சென்ற சொல்வி குளியலறைக்குத் தாள்பாழ் இட்டுக் கொண்டாள்.

"எப்ப நீ பாத்றூம் கதவைப் பூட்டத் தொடங்கினனீ..."என்றான் அருளனந்தன் மிகுந்த ஆதங்கத்துடன்.

"இந்த விஷயத்தில... நான் என்ன சொல்லி நீ என்ன கேட்டிருக்கிறாய்... உன்ர குணம் தெரிஞ்சதுதானே..." என்றாள் சொல்வி குளியலறையில் இருந்தபடியே...

"I love you... (நான் உன்னை நேசிக்கிறன்...)" என சற்று பலத்த குரலில் சொன்னான் அருளானந்தன்.

"I love you too... (நானும் உன்னை நேசிக்கிறன்...) அதனாலதான் இண்டைக்கு கதவைப் பூட்டின்னான்

அருளானந்தான் கட்டிலின் எதிரே இருந்த தொலைக் காட்சிப் பெட்டியை இயக்கி ஏனோ தானோ எனப் பார்த்துக் கொண்டிருந்தபோது,

குளியலறைக் கதவைத் திறந்து சொல்வி வெளியே வந்தாள். 
சொல்வி, Victoria's Secrets இலிருந்து தருவித்த செந்திராட்சை இரச சிவப்பிலான  பளபளப்பான ஒண்பட்டுத்துணியில்த் தைத்த உள்ளாடையை (lingerie - The Angel Lace & satin slip - ) அணிந்திருந்தாள்.  அது ஏறத் தாழ அவளது தொடைகளை மறைப்பனவாகவும் மிகவும் தளர்ந்தும் இருந்தது.

அருளானந்தன் வைத்த கண் வாங்காமலும் திறந்த வாய் மூடாமலும் சொல்வியையே பார்த்த வண்ணம் இருந்தான். அந்த உள்ளாடையின் பெயருக்கேற்ப அந்த உள்ளாடையில் ஒரு கவர்ச்சி தேவதையாகக் காட்சியளித்தாள் சொல்வி.

சொல்வியோ அருளானந்தனைப் பார்த்துச் சிரித்தபடி இரு முறை வேகமாக சுழன்றபோது, அந்த உள்ளாடை அரைவரை விசிறி போல உயர்ந்து விழுந்தது.

அப்போது, அருளானந்தன் கட்டிலில் துள்ளியெழுந்திருந்து கொண்டு,

"Once more... Once more... Please..." என்றான்.

அருளானந்தனுக்கு ஒரு பறக்கும் முத்தம் தந்த சொல்வி, திரும்பவும் இரு முறை சுழன்றாள்.

"How is it...?" எனக் கேட்டுக் கொண்டே அருளானந்தனிடம் வந்தாள்.

"Soooo Beeeeauuuuutiful... Sooooo sexy... You are an angel... This is the best Birthday gift ever...(மிகவும் அழகாயிருக்கு... மிகவும் கவர்ச்சியாக இருக்கு... நீ ஒரு தேவதை... இதுதான் மிகவும் சிறந்த பிறந்த தினப் பரிசு...)" எனச் சொல்லி சொல்வியின் இடையை தன் இரு கைகளாலும் அணைத்து அவளது வயிற்றில் முத்தமிட்டான்.

அருளானந்தனைக் கட்டிலில் தள்ளிவிட்டு, அவன் மீது ஏறி முத்தமிட்ட சொல்வி எட்டி கட்டில் தலைமாட்டில் இருந்த மின் விளக்கு ஆழியை அமுக்கி மின் விளக்குகளை அணைத்தாள்.   

"ஹேய்... நான் உன்னைப் பாக்கேலாது இருட்டில..." என அருளானந்தன் சொல்ல,

"Show is over... now kissing time...(காட்சி முடிந்துவிட்டது... இப்போது கொஞ்சும் நேரம்...)" என சொன்ன சொல்வி அருளானந்தனை அணைத்து முத்தமிட்டாள்.

மறுநாள்க் காலை பத்து மணியளவில் கண் விழித்த அருளானந்தன்,

"சொல்வி... சொல்வி... எழும்பு... " என அவசரமாக எழுப்பினான்.

"Good morning sweetie..." என அருளானந்தனை அணைத்து முத்தமிட்டாள் சொல்வி.

"ஹேய்... நாம் இப்போ றூமை (Room) விடேல்ல எண்டா... அவங்கள் ரெண்டு நாள் காசு போட்டுடுவாங்கள்..." எனப் பதறினான் அருளானந்தன்.

"Relax... I paid for two days... (ஆறுதாலயிரு... நான் இரண்டு நாட்களுக்கு கட்டணம் செலுத்திவிட்டேன்...)" எனச் சொல்லி அருளானந்தனை இழுத்து இறுக அணைத்தாள்.
"அப்போ... நேற்று விட்ட மிச்சம் இப்ப தொடருவமா..." என ஆவலாகக் கேட்டான் அருளானந்தன்.

"நான் மாட்டனெண்டா சொன்னனான்... " என்றவள்,

"அதுக்கு முன்னம் நான் ஒண்டு கேட்பன் நீ கோவிக்கக் கூடாது..." எனப் பீடிகை போட்டாள் சொல்வி.
"ஹேய்... நானெப்ப உன்னோட கோவிச்சனான்" என்றான் அருளானந்தன்.

"நாங்க ரெண்டு பேரும் தனி ஒரு அப்பாட்மெனற் (Apartment) எடுத்து ரெண்டு பேரும் ஒண்டாயிருந்தாலென்ன..." என சொல்வி முடிப்பதற்குள்

"I love you... I love you... I love you..." எனச் சொல்லி சொல்வியை முத்தமிட்டான்.

"ஹேய்... நான் கேட்டதுக்குப் பதில் சொல்லாம... 'I love you ' எண்டா என்ன அர்த்தம்" என சிரித்தபடி கேட்டாள் சொல்வி.

சொல்விக்கு அதனர்த்தம் விளங்கியிருந்தபோதும், அதை அருளானந்தனின் வாயால் கேட்க வேண்டுமென்ற ஆவல்.

"அதின்ர அர்த்தம்... எனக்கும் விருப்பம் எண்டததுதான்... நானும் இதை உன்னட்ட கேக்க வேணும் எண்டு நிறைய நாள் யோசிச்சனான்..." எனச் சொல்லி சொல்வியின் முகத்தை இரு கைகளாலும் ஏந்தி முத்தமிட்டான் அருளானந்தன்.

"நான் நினைச்சன் உங்கட கலாச்சாரப்படி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்திருக்கிறது பிழையெண்டு சொல்லுவாயெண்டு..." என சொல்வி வியப்புடன் சொன்னாள்.

"எங்கட கலாச்சாரப்படி, நான் ஒரு பொம்பிளையை தொடூறதே பிழை... அவளை நான் கலியாணங் கட்டூறதாயிருந்தாக் கூட, கலியாணத்துக்கு முன்னம் தொடவே ஏலாது... சிலர் தனியச் சந்திக்கிறதையே அனுமதிக்கிறேல்ல... நான் எங்கட கலாச்சாரத்தைத் தாண்டி வந்து, எவ்வளவோ காலமாச்சு..." என்றான் அருளானந்தன்.

"அப்ப உன்ர அப்பா அம்மா..." என சொல்வி தொடருமுன் இடை மறித்த அருளாந்தன்,

"அதுகளெல்லாம் இப்ப என்னத்துக்கு... நாங்க ரெண்டு பேரும் ஒரு அப்பாட்மென்ற் (Apartment) பாப்பம்"என்றான்...

"என்ர பிரெண்ட் (friend Linda) லின்டாவின்ர அப்பாவுக்குச் சொந்தமா ஒரு அப்பாட்மெனற் ற்ரவுணுக்க (Town) ப்றீயா (free) இருக்காம்... றென்ற்றும் (Rent) குறைவு..." எனச் சொல்வி சொல்ல,

"Did I tell you that you are my angel... (நீ என்ர தேவதையெண்டு சொன்னனானா...)" எனச் சொல்லி சொல்வியின் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தான் அருளானந்தன்.



தொடரும்...

Monday 11 May 2015

Saturday 9 May 2015

Tuesday 5 May 2015

படிக்காத மனைவி. - பாகம் 3 - பிறந்த நாள்

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).


பிறந்த நாள்


அருளானந்தன், சொல்வி, ஹன்னா மூவரது பிறந்த நாட்களும் வந்து போனது இவர்கள் நோர்வேயில் இருந்தபோது. 
ஆனால் அவை ஹன்னாவின் வீட்டிலும் சொல்வியின் வீட்டிலும்தான் சில நண்பர்களோடு அருளானந்தனையும் அழைத்துக் கொண்டாடுவார்கள் மிக எளிதாக.
ஒவ்வொரு மாணவரது பிறந்த நாளும் வரும், ஆனால் ஒவ்வொருவரும் தத்தம் வசதிக்கேற்ப நண்பர்களை அழைத்துக் கொண்டாடுவார்கள்... 
அருளானந்தன் தனது அறையில் ஹன்னா, சொல்வியோடு சில நண்பர்களோடும் கொண்டாடுவான். சொல்வியே கேக் (cake) கொண்டு வருவாள். 

எந்தக் கொண்டாடமாக இருந்தாலும் எவ்வளவு எளிமையாக இருந்தாலும் மாணவர்கள் கூடும் கொண்டாட்டமாக இருந்தால்; அங்கே அதிர வைக்கும் இசையும் மது பானமும் முதலிடம் வகிக்கும்.

அருளானந்தன் தினம் தினம் மதுபானம் குடித்து, குடிபோதையில்த் திளைக்கும் குணம் இல்லாவிட்டாலும்; வைபவங்கள், கொண்டாட்டங்களில் மிதமாக மது அருந்தும் குணங் கொண்டவன். அதாவது, நிதானம் தவறாத அளவுக்குக் குடிப்பான். ஹன்னாவைப் போல வெள்ளிக்கிழமையானதும் போத்தலும் கையுமாக ஞாயிறு மாலைவரை திரிவதில்லை. சொல்வியும் ஹன்னாவோடு திரிந்தாலும் அளவோடு எதையும் செய்பவள்.

சுவீடன் வந்த பின்பு ஒரே ஒரு பிறந்த தினம் இருவரும் ஒருவருக்கும் சொல்லாமல், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் வாழ்த்துச் சொல்லிக் கொண்டார்கள்.

ஆனால், அருளனந்தனின் இந்தப் பிறந்த தினத்தை பெரிதாகக் கொண்டாட சொல்வி நினைத்தாள்.
அதற்கும் காரணங்கள் உண்டு.

சொல்வி தனது நிட்சயதார்த்தத்தை அறிவிக்க இது ஒரு சந்தர்ப்பம் என நினைத்தாள்...
அதை விட, இன்னொரு காரணமும் இருந்தது.

ஒரு நாள் தனது சுவீடன் நாட்டுச் சிநேகிதியிடம்; அருளானந்தன் அணிவித்த மோதிரத்தைக் காட்டினாள். அந்த சிநேகிதியின் தந்தை நகைக் கடை வைத்திருக்கிறார். ஆதாலால், அவளுக்கு நகைகளைப் பார்த்து அவற்றை மதிப்பிடத் தெரிந்திருந்தது. அவள்; அந்த சுவீடன் நாட்டுச் சிநேகிதி பார்த்தவுடனேயே அந்த மோதிரம் ஒரு ஐயாயிரம் குறோணருக்கு மேல் வரும். கடைக்கு வந்தால், சரியான மதிப்பீடு சொல்லலாம் என்றதும் சொல்வி ஆச்சர்யத்திலாழ்ந்தாள்.

அந்த மோதிரத்தை சொல்வி ஒரு ஆயிரம் குறோணர் அல்லது அதற்குள்ளேதான் வரும் என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால், என்றுமே அருளானந்தனைக் கேட்டதில்லை.

நகைக்கடையில், அவள் சிநேகிதியின் தந்தை, அந்த மோதிரம் எண்ணாயிரம் தொடக்கம் பத்தாயிரம் வரை விலை பெறும் என்றதும், சொல்வியால் தனது கண்களையும் காதுகளையும் நம்ப முடியாமலிருந்தது.

சர்வ சாதாரணமாக, லஸன்யாவுள் புதைத்து என்னிடம் தந்த அந்த மோதிரத்தின் விலை பத்தாயிரம் குறோணரா என வியந்து போனாள்.

தன்னிடத்தில் அருளானந்தன் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறான் என்பதை அந்த மோதிரம் மட்டுமல்ல, அவளது சிநேகிதியும் சொன்னாள்.

"ஹேய்... அவன் உன்னை உயிருக்குயிரா நேசிக்கிறான்... You are one of the luckiest girl on the earth... (நீ இந்த உலகத்திலிருக்கும் அதிர்ஷ்டக்காரிகளுள் ஒருத்தி...)" என்றாள்.

அருளானந்தனிடம் தனது எண்ணத்தை முதலிலேயே வெளிப்படுத்தினால், அவன் அதை மறுத்து விடக் கூடும்; என்பதால் இரகசிமாகவே எல்லாவற்றையும் செய்தாள் சொல்வி, அவளது சிநேகித, சிநேகிதியருடன்.

அருளானந்தனின் பிறந்த தினத்தன்று, சொல்வி காலையில் எழுந்து அருகே படுத்திருந்த அருளானந்தனை எழுப்பி, அவனது உதடுகளில் ஒரு முத்தம் கொடுத்து,

"Happy Birthday my dearest sweetie...(பிறந்தின வாழ்த்துக்கள் எனதன்பே...)" என்றாள்.
"Oh... Thank You... Thank You..." என்ற அருளானந்தன், அவளை இழுத்து திரும்ப ஒரு முத்தம் கொடுத்தான்.
சொல்வியின் முகத்தை தன் இரு கைகளாலும் ஏந்திப் பிடித்து,

"இண்டைக்கு யூனிவேசிற்றிக்குப் (university) போகம... எங்கயாவது ஊர் சுத்துவமா..." எனக்கேட்டான்.

உடனே, சொல்வி

"ஏன்... " என்றாள் ஒன்றும் தெரியாதவள் போல

"ஹேய்... இண்டைக்கு என்ர பேத்டே (Birthday)... எங்கயாவது போய் ஜாலியா இருந்திட்டு, றெஸ்ரோரன்ற்றில (Restaurant) சாப்பிட்டுட்டு, ஒரு மூவி (movie) பாத்தட்டு வருவம்" என செல்லமாகச் சொன்னான்...

"இண்டைக்கு யூனிவெசிற்றியில எனக்கு நிறைய வேலை இருக்கு. உன்னோட ஊர் சுத்த எனக்கு நேரமில்ல" என்றாள் எது வித சலனமுமில்லாமல் சொல்வி.

சொல்வியை இழுத்து தனக்கு மேல் படுக்க வைத்த அருளானந்தன், தனது இரு கைகளாலும் கால்களாலும் சொல்வியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு,

"நான் விடமாட்டன்... " என்று சொல்லி சொல்வியின் உதடுகளில் முத்தமிட்டான்.

சொல்வி, அருளானந்தனையே வைத்த கண் வாங்காமல் சில நொடிகள் பார்த்திருந்து விட்டு,
"சரி... பின்னேரம்... யூனிவேசிற்றிக்குப் போக வேணும்... நீயும் வர வேணும்... நிறைய றிசேச் (research) வேலை இருக்கு..." என்றாள் சொல்வி.

"OK... OK... பின்னேரம் போவம்... இப்ப இரண்டு பேரும் கொஞ்ச நேரம் இப்பிடியே படுத்திருப்பம்... பிறகு..." என அருளானந்தன் முடிப்பதற்குள்

"ஆ... நான் மாட்டன் அதுக்கு... அ...அ... இப்ப இல்லை..." எனப் பிடிவாதமாக மறுத்தாள் சொல்வி...

"ஹேய்... இண்டைக்கு என்ர பேத்டே... இண்டைக்குக்கூட ஒரு ஸ்பெஷல் (special)... இல்லையா..." எனக் கெஞ்சினான் அருளானந்தன்.

"ஸ்பெஷல்... எல்லாம் இரவுக்கு... இப்ப நல்ல பிள்ளை மாதிரி எழும்பிக் குளிச்சிட்டு வா... வெளியில போவம்..." எனச் செல்லமாகக் அவனது கன்னத்தில்க் கிள்ளி, ஒரு செல்லத் தட்டு தட்டி விட்டு, அருளானந்தனைப் பார்த்து கண் சிமிட்டினாள்.

"இப்பிடியே ஒரு பத்து நிமிஷம் படுத்திருப்பம் பிறகு... எழும்புவம்..." என்றான்.

"ஆ... ஹ... நீ பிறகு ஏதாவது குசும்பு செய்வாய்... நான் விட்டுத் தந்துடுவன்... முடியாது... என்ர செல்லமெல்லே... இரவுக்கு..." என அவனது உதடுகளில் இன்னொரு முத்தமிட்டுவிட்டு, அருளானந்தனின் கைகளை விலக்கி விட்டு எழுந்தாள் சொல்வி.

அருளானந்தன் போர்த்திருந்த போர்வையைப் பார்த்து விட்டு சிரித்தாள் சொல்வி.

"ஹேய்... இவ்வளவு அழகான தேவதை போல ஒரு பெண் பக்கத்தில படுத்திருந்தா, முனிவனா இருந்தாலுங்கூட, உடம்பெல்லாம் சூடேறியிடும்..." என்றான் அருளானந்தன் ஏக்கமாக சொல்வியைப் பார்த்தபடி

"சரி, முனிவரே... போய் நல்ல குளிர் தண்ணீல குளியுங்க... சூடு தணியட்டும்..." என்றாள், சொல்வி மிக நளினத்தோடு.

சொன்ன சொல்வி, குளியலறையை நோக்கி நடந்தாள்.

"நானும் வருவன் உன்னோட குளிக்க..." என்றபடி எழுந்து சொல்வியின் பின்னால் நடந்தான் அருளனாந்தன்.

"அங்க வந்து... தப்பு தண்டா... பண்ணூறேல்ல..." என்றபடி சொல்வி குளியலறைக்குள் நுளைய, அருளானந்தனும் அவளைப் பின் தொடர்ந்தான்.

சொல்வி பல் துலக்கியபடியே பின்னால் வந்த அருளானந்தனை முகம் பார்க்கும் கண்ணாடியில்ப் பார்த்து,

"இப்ப எங்கே போவம்...?" என்றாள்.

அவளது இடையை இரு கைகளாலும் கட்டிப்பிடித்து இறுக அணைத்த அருளானந்தன்,

"முதல்ல... போய் எங்கேயாவது... சாப்பிட்டுட்டு அதுக்குப்பிறகு யோசிப்பம்..." எனச் சொல்லி சொல்வியின் கழுத்தில் முத்தமிட்டான் அருளானந்தன்.

கூச்சலும் கும்மாளமுமாக ஒரு முக்கால் மணி நேரம் தண்ணீரில் குழந்தைகள் போல விளையாடிக் குளித்து முடித்த பின் சொல்வி உடலைத் துவட்டும்போது,

"நீ அப்பிடியே marshmallow (சீமைத்துத்தி) மாதிரி இருக்கிறாய்... உன்னை அப்பிடியே கடிச்சுச் சாப்பிட வேணும் போல கிடக்கு" என சொல்வியைப் பார்த்து அருளானந்தன் சொன்னான்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் அப்படி இருவரும் சேர்ந்து குளிப்பதில்லை, அப்படி இருவரும் சேர்ந்து குளித்தால்; ஒவ்வொரு தின் பண்டத்தின் பெயரைச் சொல்லி சொல்வியைக் கடிப்பதுபோல குறும்பு செய்வது அருளானந்தனின் வழமை.

இருந்தாலும், ஒவ்வொரு முறையும் சொல்வி அதை இரசித்து தனது உடலை அவனது பார்வையிலிருந்து மறைப்பாள். அந்தச் சின்னச் சின்ன சிலுமிசங்களை சொல்வி மிக இரசிப்பாள்.

"ஆ... ஹ... இப்ப என்னைச் சாப்பிட்டா... இரவுக்கு ருசிக்கிறதுக்கு என்ன பண்ணுவாய்...?" என தனது உடம்பை அந்தத் துவாயால் சுற்றிக் கொண்டு அறைக்கு வந்தாள்.

தன்பின்னால் தொடர்ந்து அருளானந்தனும் வருவானெனத் தெரியும்; இருந்தும் துவாயை கதிரையில் போட்டுவிட்டு, தனது மார்புக் கச்சையை (BRA) எடுத்து அணிய முற்படுகையில், அருளானந்தன் வந்து அவளை திருப்பி இறுகக் கட்டியணைத்து, அவளது இளஞ்சிவப்பு உதடுகளில் முத்தமிட்டான்.

இப்படியெல்லாம் தினமும் நடப்பதில்லை... ஏனெனில் அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்து, பல்கலைக் கழகம் செல்பவர்கள். இப்படிப் பட்ட சரச விளையாட்டுக்களுக்கெல்லாம் அன்றாடம் நேரம் கிடைப்பதில்லை.

மாலை வேளையென்றால், உடல் களைப்பால் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்திருந்து தொலைக்காட்சியைப் பார்த்து விட்டு அப்படியே நித்திரைக்குச் சென்று விடுவது வழமை.
உடற்கூறுகளின் ஆதிக்கம் மிகும்போது, அருளானந்தனே சரசத்தில் ஆரம்பிப்பான். ஆனால், சொல்வியால் அன்று இயலாதென்றால் விட்டுவிடுவான்.

சுவீடன் வந்த ஆரம்பத்தில் இருவரும் உடலுறவில் முயல்கள் மாதிரித்தான் இருந்தார்கள். ஆனால் நாள்ச் செல்ல, நாள்ச் செல்ல அது குறைந்து விட்டது.

அவர்கள் இருவரும் படிப்பில் முழுக்கவனமும் செலுத்த ஆரம்பித்த போது, உடலுறவு வாரத்தில் இரு முறை அல்லது மூன்று முறை எனக் குறைந்து போனது.

சனி ஞாயிறுகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை... ஒன்றில் அருளானந்தனின் நண்பர்கள் வெள்ளி மாலையிலிருந்து அட்டகாசம் போடுவார்கள் அல்லது சொல்வியின் சிநேகிதிகள் சொல்வியின் அறையில் அட்டகாசம் போடுவார்கள். ஆக, இவர்களுக்கு இப்படி நேரம் கிடைப்பது எப்போதாவதுதான்.

அனேகமாக, அருளனந்தனின் நணபர்கள் என்றால் தமிழர்தான் அவனது அறைக்கு வந்து கும்மாளமடிப்பார்கள், தமிழ்ப் படங்கள் பார்ப்பார்கள். அப்போதெல்லாம் சொல்வி தனித்துப்போவள் .

எப்போதுமே அருளனாந்தனின் தமிழ் நண்பர்கள் கதையில் தகாத வார்த்தைப் பிரயோகம் சரளமாக இருக்கும். முதலில் சொல்வி இருக்கிறாளென பயந்தார்கள். ஏதாவது தகாத வார்த்தை சொன்னால் நாக்கைக் கடித்துக் கொள்வார்கள். ஆனால் போகப் போக அவர்கள் எல்லா வார்த்தைகளையும் ஒரு கூச்சமும் இல்லாமல் அவள் முன்னிலையிலேயே கொட்டி முழக்குவார்கள். அருளானந்தன் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் சுவீடன் மொழியிலோ அல்லது நோர்வே மொழியிலோ கதைக்கமாட்டார்கள்.

சொல்விக்கு தனது அறையில் இருக்கப் பிடிக்காது. காரணம் இவர்களது அட்டகாசமான சிரிப்பொலியும் கதையும்  அவளை அருளானந்தனின் அறைக்கு வரச் செய்துவிடும்.

அருளானந்தன் இயன்றளவு கதைகளை, நகைச்சுவைத் துணுக்குகளை சொல்விக்கு மொழி பெயர்ப்பான். ஆனால் எல்லாவற்றையும் அல்ல. எல்லாவற்றையும் அவளுக்குச் சொல்ல முடியாமலும் இருக்கும்.

இது சொல்விக்கு பெரியதொரு ஏக்கத்தையும் அச்சத்தையும் உண்டாக்கியது. அதாவது அவள் இலங்கை சென்றால், யாழ்ப்பாணம் சென்றால் அங்கே எல்லோரும் ஆங்கிலம் கதைப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. அதை அருளானந்தனே சொல்லியிருக்கிறான். அவள் யாழ்ப்பாணம் சென்றால், அங்கே வருவோர் போவோர், சொந்த பந்தங்களுடன் உரையாட அவளால் முடியாமல்ப் போய்விடும். அருளானந்தனின் தம்பி - தங்கை, பெற்றோர் கூட அவளுடன் உரையாடக் கஷ்டப் படுவார்கள். இதனால் அவனுடைய உறவுகள் அவளை ஒதுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்தப் பயம் சொல்வியைக் குடைய ஆரம்பித்தது. அவள் அதற்கு என்ன வழி என யோசித்தாள். தமிழ் கற்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற முடிவுக்கு வந்தாள் சொல்வி.

அந்த நேரம் அவள் தமிழ் கற்பதற்கு பாடசாலைகளில் தமிழ்ப் பாடம் என்று ஒன்று இல்லை. இன்று தமிழ்க் கல்விக் கூடங்களே ஆங்காங்கு இயங்குகின்றன.
பல அரச பாடசாலைகளில் தமிழ்ப் பாடமும் ஒன்றாக புகுத்தியிருக்கிறார்கள் இன்று.

ஒரு நாள் பல்கலைக் கழகத்திலிருந்து சொல்வி வந்தபோது, எதிரே அருளானந்தனுக்குப் பழக்கமான அந்த இந்தியப் பெண்ணும் அவளுடைய மகளும் வந்தார்கள். இவர்களிடம் கேட்டால், அவர்களது பிள்ளைகள் தமிழ் கற்கச் செல்லுமிடத்திற்கு தானும் செல்லலாம் என நினைத்து சொல்வி அவர்களிடம் கதைத்தாள்.

அந்த இந்தியப் பெண்; தானேதான் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் தமிழ் கற்பிப்பதாகவும், தான் சொல்விக்கு உதவுவதாகவும் சொன்னாள்.
ஆபத்தில் திரெபதைக்கு உதவிய கண்ணன் போல; சொல்வி அந்த இந்தியத் தமிழ் பெண்ணை நினைத்தாள்.

சொல்வி தமிழ் கற்பதோடு மட்டுமல்லாமல், இந்திய உணவுவகைகளையும் சமைக்கக் கற்றுக் கொண்டிருந்தாள். ஆனால் இந்த விடயம் அருளானந்தனுக்குத் தெரியாது.

சொல்வி, அருளானந்தனை அழைத்துக் கொண்டு கலாசாலையின் ஒரு கூடத்திற்கு வந்தாள்.

"என்ன... ஏன்... இங்க போறாய்?" என்றான் மிகுந்த குழப்பத்துடன்.

"மொனிக்காவிட்ட கொஞ்ச றீடிங்ஸ் (Readings - Data - தரவுகள்) எடுக்க வெணும்... எல்லாம் இந்த றூம்ல (room) வைச்சிருக்கிறன் எண்டவள்... சும்மா கத்தாமல் வா..." எனச் சொல்லிக் கொண்டே, சொல்வி அந்தச் சிறிய மாணவர் சேர்ந்திருந்து படிக்கும் அறையைத் திறந்தாள்.

"ஐயோ... இருட்டாயிருக்கு..." என சொல்லிக் கொண்டு சொல்வி பின்னே வர;

"சுவிச் (swich) கதவுக்குப் பக்கத்திலதானே இருக்கு..." எனச் சொல்லியபடி அந்த அறையினுள் நுளைந்து, அந்த மின் விளக்குகள் ஆளியை அமுக்கினான் அருளானந்தன்.

வெளிச்சம் வரும் வரை காத்திருந்த அருளானந்தனதும் சொல்வியினதும் சிநேகித சிநேகிதியர் ஒரு சேர

"SURPISE!!" என கோஷமிட்டனர். பின்னர்...
"HAPPY BIRTH DAY TO YOU!!!" என கோஷித்தனர்.

அருளானந்தன் திகைத்துப் போய் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றாலும், சுதாகரித்துக் கொண்டு;

"THANK YOU... THANK YOU..." எனக் கூறிக் கொண்டு, மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் வலது கையை வைத்து தலை குனிந்து அவர்களது வாழ்த்துக்களை ஏற்றான்.

பின்னர், அவன் பின்னால் புன்னகையோடு நின்ற சொல்வியைத் திரும்பிப் பார்த்து;

"இதெல்லாத்துக்கும் காரணம் நீதானே... வா... உனக்கு இருக்கு... உனக்கு..." என சொல்வியைப் பார்த்து சொல்லும் போதே,

"Happy Birth Day To You Arul..." என்றபடி நண்பர்கள் வந்து பரிசுப் பொருள்களைக் கொடுக்க, பிறந்த நாள் கொண்டாட்டம் ஆரம்பமானது.

விருந்துண்ணும்போதே, ஒவ்வொருவராக நண்பர்கள் அருளானந்தனைப் பற்றியம் சொல்வியைப் பற்றியும் சிலேடையாகவும் நகைச்சுவையாகவும் பேசினர். பின்னர் வாழ்த்தினர்.

இடையில் சொல்வி எழுந்து,

"Happy Birthday to You Arul! (இனிய பிறந்ததின வாழ்த்துக்கள் அருள்!!) எனக்கு அருளானந்தனோடு கடந்த ஐந்து வருடங்களாக பழக்கம் இருந்து வருகிறது..." என சொல்வி தொடருமுன்...
"Come On... We know that... Tell us some juicy stuff... (இங்க... பார்... உதெல்லாம் எங்களுக்குத் தெரிஞ்சது... ஏதாவது கிளுகிளுப்பாய்ச் சொல்லு...)" என்றது ஒரு குரல் அப்போது ஒட்டு மொத்தமாக எல்லோரும்,
"Yeah... tell us something juicy... (ஒ,.. ஏதாவது கிளுகிளுப்பாய்ச்சொல்லு...)" என்றனர்.

சொல்வியின் முகம் நாணத்தால் சிவந்தது. இருந்தும் சளைக்காதவளாய்

"Come On... guys... It is our private... Isn't it... Come On...(இங்க பாருங்க... நண்பர்களே... அது எங்களோட அந்தரங்கம்... இல்லையா... )" என அருளானந்தனையும் பார்த்து ஏனையோரையும் பார்த்து நாணத்தோடும் சிவந்த முகத்துடனும் சொன்னாள் சொல்வி.

"We didn't ask anything on the bed... We ask something other than that... (நாங்கள் கட்டில்ல நடக்கிறதைக் கேட்கேல்ல... அதை விட வேறேதாவது...)" என்றது ஒரு பெண் குரல்.

"Come On... You girls always talk very intimate stuff... Come On... some outlines... Please Sølvi give us some cookies... (இங்க பாருங்க... நீங்க பெண்கள் எப்பவும் மிக அந்தரங்கமானவை கதைப்பீர்கள்... தயவு செய்து சொல்வி கொஞ்சம் கோடிட்டு காட்டு... ஏதாவது... சின்னச் சின்ன இனிப்புத்துண்டுகள்... தயவு காட்டு...)" என்றான் அவர்களில் ஒருவன்.

இப்போதும் சொல்வி ஏதாவது அவர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல வேண்டும் என எதிர்ப்பார்த்தார்கள்.

அருளானந்தன் சிரித்தபடி செந்திராட்சை இரசத்தை உருசித்துக் கொண்டு, 'மாட்டிக்கிட்டியா... நல்லது என்னட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா... இதுக்கெல்லாம் நான் உடன்பட்டிருக்கவே மாட்டன்...' என நினைத்துக் கொண்டான்.
சொல்வியோ விட்டுக் கொடுக்காமல்...
"நண்பர்களே... நீங்கள் எதுவேணும் எண்டாலும் அருளைக் கேளுங்கள்...  " என அருளானந்தனைப் பார்த்து ஒரு சிரிப்புடன் சொன்னாள் சொல்வி.

"No... No... இல்லை... இல்லை... அவன் எதுவும் எதைப் பற்றியும் எங்களுக்குச் சொல்லமாட்டான்... அவன் சொன்னான் "நான் சொல்விக்கு மதிப்பும் மரியாதையும் தருகிறேன். ஆதலால் நான் சொல்வி சம்பந்தப்பட்ட எதுவும் சொல்ல மாட்டேன்" என்று விட்டான்... please Sølvi..."
என்றான் ஒரு நண்பன்.

"Oh... so... sweeeet..." என்ற சொல்வி குனிந்து, அருளானந்தனின் கழுத்தைத் தன் வலது கையால் மிக ஆதரவாக அணைத்து அருளானந்தனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.  பின்னர் நிமிர்ந்து,

"அருளானந்தனிடம் எனக்குப் பிடித்ததது நிறைய இருக்கிறது. அவற்றில் இதுவும் ஒன்று... நான் உண்மையில்க் கொடுத்து வைத்தவள். " எனும் போது, அனைவரும்

"He is a great guy..." என்றார்கள். அருளானந்தன் சிரித்தபடி எழுந்து தலைதாழ்த்தினான்.

"OK... Sølvi... tell us something..." என்றது அதே பழைய குரல்.

"OK... OK... " என்று சொல்வி ஆரம்பித்தபோது, அனைவரும் அமைதியாயினர். சொல்வியின் வாயிலிருந்து முத்துக்கள் உதிரப் போகின்றன என்பது போல அனைவரும் அவளையே பார்த்தார்கள்.

"அருள் ஒரு நல்ல காதலர்...(Arul is a great lover...)" எனும் போது,
"படுக்கையிலா... அல்லது... பொதுவாகவா...?" என்றான் ஒருவன்
"படுக்கையிலும்... பொதுவாகவும்..." என்று சொல்வி சொல்லும் போதே சொல்வியின் முகம் செஞ்சாந்து பூசிக் கொண்டது. சொல்வி முகத்தை மூடிக் கொண்டாள்.
"Oh... Oh... Ha..." என அங்கேயிருந்த பெண் மாணவிகளெல்லாம் ஆச்சர்யப்பட்டு ஏக்கப் பெருமூச்செறிந்தனர்.

"வா...  தனிய... உன்னைக் குடைஞ்சு, எல்லா விஷயங்களையும் எடுக்கிறன்..." என்றாள் சொல்வியின் சிநேகிதி ஒருத்தி.
சொல்வி வெட்கத்தோடு அவளைப் பார்த்தாள். அனைவரும் சொல்வியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தன்னைச் சுதாகரித்தவளாக சொல்வி தொடர்ந்தாள்.


தொடரும்...

Friday 1 May 2015

Friday 24 April 2015

படிக்காத மனைவி. - பாகம் - 2 லஸன்யாவும் மோதிரமும்

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna). 

லஸன்யாவும் மோதிரமும் 



சுவீடனில் இரண்டாவது வருடத்திலிருந்து சொல்வியின் எண்ணங்கள் கதைகள் எல்லாமுமே திருமணம் திருமணத்தின் பின் என்பனவும் அருளானந்தனின் தம்பி தங்கை எப்படித் தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்பனவுமாக இருந்தது.

ஒரு நாள் அதையும் கேட்டாள் சொல்வி.

"ஹேய் அருள்... உன்ர அம்மா அப்பா, தம்பி தங்கையெல்லாம் எப்பிடி..." என்று மிகுந்த ஏக்கத்துடன் கேட்டபடி சமையலறைக்கு வந்தாள் சொல்வி.

அந்த சமையலறை, இவர்களுக்கு மட்டும் தனியானதல்ல... அது அந்த தளத்திலிருக்கும் அறுவருக்குப் பொது. இவர்களிருவரோடு இன்னும் மூன்று ஆண் மாணவர்களும் ஒரு பெண் மாணவியும் அந்தச் சமையலறையைப் பகிர்ந்து கொள்ள வேணடும்.
ஒவ்வொரு அறையுடனும் கழிகலன் (Commode) நீர் விசிறியுடனான குளியல்க் கூடம் (Shower with Cabinet) முகம் கழுவுவதற்கென ஒரு கழுவு தொட்டி (Washing sink) என்பவற்றுடன் ஒரு ஒருசேர் குளியலறை இருக்கும்.
மாணவர்கள் இருப்பது, படுப்பது, படிப்பது, கும்மாளமடிப்பது, உடலுறவு கொள்வது, தொலைக்காட்சி பார்ப்பது எல்லாமுமே சற்று விசாலமான ஒரே ஒரு அறையில்த்தான்.

அந்தச் சமையலறையில் அருளானந்தனோடு அந்த தளத்தில்க் குடியிருக்கும் சுவீடன் நாட்டு பெண் மாணவியும் பாண் துண்டங்களுக்கு மேல் பாலாடைக்கட்டிகளை (Cheese slices) வைத்து சூழை (Oven) அடுப்பில் வைத்துச் சூடாக்கிக் கொண்டிருந்தாள்.

சமையலறையில் சத்தமாகக் கேட்டுக் கொண்டே வந்த சொல்வியைப் பார்த்துப் புன்னகை செய்தாள் அந்த சுவீடன் நாட்டு மாணவி.

"என்ன செய்யுறது... ஒருத்தரைக் காதலிச்சா... அவருடைய சொந்த பந்தங்கள் எப்பிடி இருப்பினம் எண்டு கேட்டு தெரிஞ்சுட்டா நல்லதுதானே..." என அந்த சுவீடன் நாட்டு மாணவியைப் பார்த்து சொல்லிக் கொண்டு அருளானந்தனின் கழுத்தைக் கைகளால் வளைத்து கன்னத்தில் ஒரு முத்தமிட்டாள் சொல்வி.

அந்த சுவீடன் நாட்டு மாணவியோ கண் ஜாடையால்

"இவரா... உன்ர... காதலன்..." எனக் கேட்டாள்.

சொல்வியும் தலையையசைத்து வலது கண்ணை மூடித்திறந்து ஆமோதித்தாள்.

அந்த சுவீடன் நாட்டு மாணவி அவசர அவசரமாக பாண் துண்டுகளை சற்றே உருகிய பாலடைக் கட்டித் துண்டுகளுடன் (Cheese slices) சூழையிலிருந்து எடுத்துக் கொண்டு சமையலறையை விட்டு நகர்ந்தாள்.

அவள் செல்லும் போது,
அருளானந்தன் பாராத வண்ணம், சொல்வியைப் பார்த்து தனது இடது கையைத் தூக்கி பெருவிரலையும் சுட்டு விரலையும் சேர்த்து ஒரு வட்டம் போலாக்கி மற்றைய மூன்று விரல்களையும் அடுக்காகவும் நேராகவும் வைத்து சொல்விக்குக் காட்டி
"நல்ல தெரிவு (Good choice)" என சத்தம் வரதா வாறு வாயால் சொன்னாள்.
"Thank you..." என அதே போல சொன்ன சொல்வி...

மீண்டும் அருளானந்தனை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு
"My would-be..." என்றாள்.

"என்ன..." எனத் திரும்பினான் அருளானந்தன்.

அப்போ, சுவீடன் நாட்டு மாணவி அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

"இங்கிதம் தெரிந்தவள்..." என்ற அருளானந்தன்.

தொடர்ந்து...

"என்ன சொன்னாய்..." என சொல்வியைக் கேட்டான்.

"உன்ர பெற்றோர், தம்பி, தங்கை எப்பிடி இருப்பினம் எண்டு கேட்டன்..." என்றாள் சொல்வி.

"அவயளுக்கு ரெண்டு கால், ரெண்டு கை, ஒரு தலை, ஒரு உடம்பு இருக்கும்... அதில்ல; இப்ப என்ன சொன்னனி..." என இரு கைகளாலும் சொல்வியின் இடுப்பைச் சுற்றி தன்னோடு அணைத்தபடி கேட்டான்.

"அதுவா... மொனிக்கா, அந்த சுவீடன் girl, சொன்னாள் நல்ல தெரிவு எண்டு... அதான் அவளுக்குத் Thank you... எண்டு சொல்லி my would-be எண்டன் " என சொல்வி சொன்ன போது,

அருளானந்தன் சிரித்தான்...

"ஏன் பிழையா..." என அங்கலாய்ப்புடன் கேட்டாள் சொல்வி.

"ம்... பிழைதான்..." எனச் சாதாரணமாகச் சொல்லி விட்டு (lasagne) லஸன்யாவை துண்டங்களாக வெட்டி கோப்பைகளில் எடுத்தான்.

அதிர்ந்து போய், ஸ்தம்பித்துப் போய் பேச்சில்லாமல் நின்றாள் சொல்வி...
சொல்வியின் விழி மடல்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.

கோப்பைகளோடு லஸன்யாவை எடுத்துக் கொண்டு திரும்பிய அருளானந்தன் சொல்வியைப் பார்த்து அதிர்ந்து போனான்.

"ஹே....ய்... என்ன நடந்தது ஏன் அழுகிறாய்..." எனக் கேட்டுக் கொண்டே கோப்பைகளை அங்கே இருந்த மேசைமேல் வைத்துவிட்டு, சொல்வியை இரு கைகளாலும் அணைத்தபடி

"அழாத... என்ன நடந்தது... அவள் ஏதாவது சொன்னவளே... இரு வாறன் மொனிக்கா உன்னைத் துவைக்கிறன் பார்..." என அனாவசியமாக அந்த சுவீடன் நாட்டு மாணவிமேல் ஆத்திரப்பட்டான் அருளானந்தன்.

அப்போது, தனது அழுகையை ஒருவாறு அடக்கி விம்மியவாறே,

"நீ என்னைக் காதலிக்கிறாயா... " எனக் கேட்டாள் சொல்வி...

அருளானந்தன், சொல்வியின் இடையிலிருந்த தன் இரு கைகளாலும் சொல்வியின் முகத்தை ஆதரவோடு பிடித்து கொண்டு, அவளது கண்களைப் பார்த்து,

"இதில என்ன சந்தேகம்... I love You... I love You... I love You..." எனப் பல முறை சொல்லிவிட்டு,

"நாங்கதானே நாலு பிள்ளையள் பெறப்போறம்... அதெல்லாம் நான்... என்ன... அந்த சுவீடன் காறியோடயா  பெறப்போறன்... ஹ...?" என்றான் அருளானந்தன்.

இப்போது சொல்வி, வழிந்த கண்ணீரோடு சோகமாக சிரித்தாள்.
பின்னர்,
அருளானந்தனின் இரு தோழ்களையும் பிடித்து இழுத்து அவனது உதடுகளில் ஒரு ஈர முத்தம் கொடுத்தாள்.

"உன்ர முத்தம் உப்புக் கரிக்குது..." என்றான் குறும்புடன் அருளானந்தன்.
அருளானந்தனின் தோழ்களில் இருந்த கைகளை எடுத்து, இரண்டு கைகளாலும் 'தும், தும், தும்' என அவன் மார்பில் குத்திவிட்டு;

"Stupid... that is my tears... (முட்டாள்... அது என்ர கண்ணீர்...)" என்று ஒரு சோகச் சிரிப்புடனே சொன்னாள்...

அருளானந்தன் அவளது கண்ணீரைத் துடைத்து விட்டு;

"இப்ப எதுக்கு இதெல்லாம்... எதுக்காக அழுதனி..." என ஆச்சரியத்தோடு கேட்டான் அருளானந்தன்.

"இல்ல... நீ என்ர would-be எண்டு நான் சொல்லேக்க  நீ 'அது பிழை' எண்டாய் அதுதான் எனக்கு உடனே அழுகை வந்துட்டுது... இவ்வளவு நாளும் என்னென்னெல்லாமோ கதைச்சம்... எப்பியெல்லாமோ பழகினம்... எங்கெயெல்லாமோ சுத்தினம்... அதெல்லாம் வெறும் உடலுறவுக்குத்தானோ... எண்டு நினைச்சன் உடனே அழுகை வந்துட்டுது..." என்றாள் மிகுந்த சோகத்தோடு.

"Oh... my God... இப்ப... நாங்க... போய்... லஸன்யாவைச் சாப்பிட்டுட்டு... எல்லாம் விளக்கமாய்ச் சொல்றன் வா..." என ஆதரவோடு ஒரு கோப்பையை அவளிடம் தந்துவிட்டு வலது கையால் அவளை அணைத்தபடி இடது கையில் மற்றைய கோப்பையுடன் அறைக்கு அவளை கூட்டி வந்தான்.

"அது சரி... எங்கே அந்த would-be எண்ட சொல்லை கேட்டனி... அல்லது..." என அருளானந்தன் முடிக்கு முன், இடை மறித்த சொல்வி;

"ஒரு இந்தியன் லவ் ஸ்ரோறி (Love story) வாசிச்சன். லைபிறறில (Library) இருந்த ஒரு மகஸீன்ல (magazine)அதிலதான்... " சொலவி தொடர விடாமல்

"ஐயோ... ஐயோ... சிலர் சரியான அர்த்தம் தெரியாம எல்லாம் எழுதி வைப்பாங்க... வா... எல்லாம் விளக்கமா சொல்றன்..." என்றபடி அவளுடன் நடந்தான் அருளானந்தன்.

அறைக்கு வந்த இருவரும், இரட்டைக் கட்டிலாக்க கூடிய அந்த சோபா (Sofa) வில் அமர்ந்து கோப்பைகளை எதிரே இருந்த கூடத்து மேசை (Coffee Table) மேல் வைத்து முள்ளுக் கரண்டிகளை எடுத்தார்கள்.

ஆனால், சொல்வி முள்ளுக்கரண்டியை கையில் பிடித்த வண்ணம் அருளானந்தனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அருளானந்தன் தனது கோப்பையில் இருந்த லஸன்யாவில் ஒரு சிறிய துண்டு வெட்டி எடுத்த பின், சொல்வியைப் பார்த்தான்.

"ஹேய்... என்ன... சாப்பிடாம என்னைப் பாத்துக் கொண்டிருக்கிறாய்...?" என்றவன், தனது முள்ளுக்கரண்டியில் இருந்த லஸன்யாவை அவளுக்கு நீட்டி...

"இந்தா சாப்பிடு... பிறகு எல்லாம் சொல்றன்..." என்றான்.

சொல்வியும் வாயை திறந்து அவன் கொடுத்த லஸன்யாவை அப்படியே வாங்கி மென்றாள்...
அந்த லஸன்யாத் துண்டை அவள் வாயில் வைத்த அருளானந்தன் சொல்வியைப் பார்த்துக்கொண்டிருந்தான்...

அப்போது,

"எங்ங... ஏகோ..." என வாய் நிறைய லஸன்யாவோடு சொற்களை இடறினாள் சொல்வி. அருளானந்தன் புன்னகையோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சொல்வி அருளானந்தனை வியப்புடனும் விழிகளை அகல விரித்து அச்சத்துடனும் பார்த்து விட்டு, தனது வலது கையின் பெருவிரலையும் சுட்டு விரலையும் தனது வாயுள் வைத்து கம்பியாலான ஒரு வளையத்தை வாயிலிருந்து எடுத்தவள், மிகுதி லஸன்யாவை வாயிலிருந்து காகிதக் கைக்குட்டையில் உமிழ்ந்து விட்டு,

"அருள்... என்ன இது..." என லஸன்யாவால் மூடியிருந்த வளையத்தை இன்னொரு காகிதக் கைக்குட்டையால் துடைத்தபடி கேட்டாள்.

அப்போது அருளானந்தன்  தனது இடது முழங்காலைத் தரையில் வைத்து, வலது முழங்காலை மடித்து சோபா முன்னே தரையில் இருந்து கொண்டு,
லஸன்யாவை அந்த வளையத்திலிருந்து துடைத்துக் கொண்டிருந்த சொல்வியின் இரண்டு கைகளையும் அவளது மார்புக்கு நேராக பிடித்து கொண்ட போது, சொல்வி அருளானந்தனைப் பார்த்தாள்.

"சொல்வி... நான் உன்னை இதயபூர்வமாகக் காதலிக்கிறன்... நீ இல்லாம... நான் இனி சந்தோஷத்தை நினைச்சும் பார்க்க முடியாது... என்னை நீ திருமணம் செய்து கொள்வாயா..." எனக் கேட்டு முடிப்பதற்குள்...

சொல்வியின் கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றாக கன்னத்தில் வழிய,
"Yes...Yes... Yes... I will marry you..." (ஓம்... ஓம்... ஓம்... நான் உன்னை திருமணம் செய்கிறேன்...) என்றாள் கண்களில் கண்ணீர் வழிந்தோட விம்மியபடியே.

அப்படியே சொல்வி முன்னே வந்து, அருளானந்தனைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டாள்.

பின்னர், எழுந்து குளியலறைக்கு ஓடினாள்...

"ஹேய்... எங்க போறாய்..." என்றான் அருளானந்தன்.
"நான் மோதிரத்தைக் கழுவிப் பாக்கப் போறன்..." என்றாள் சொல்வி குளியலறைக்கு ஓடிக்கொண்டு...

சொல்வி அந்த வைர மோதிரத்தை கழுவி எடுக்கையில், அருளானந்தன் அவள் பின்னால் வந்து அவளது இடையில் இரு கைகளையும் வைத்துப் பிடித்து அவளை திருப்பினான்...

அந்த மோதிரத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த சொல்வியின் நெற்றியில் முத்தமிட்ட அருளானந்தன்; அந்த மோதிரத்தை அவளிடமிருந்து வாங்கி அவளது வலது கையின் மோதிர விரலில் அணிந்தான்.

"நல்ல அளவாயிருக்கு... எப்பிடி... " என்ற சொல்வி திரும்பி கண்ணாடியில் தனது வலது கையின் பின்புறத்தை அந்த வைர மோதிரத்தோடு பார்த்து...

"Beautiful... So, beautiful... I love it... Thank you..." (அழகாகயிருக்கு... நல்ல அழகாகயிருக்கு... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... நன்றி...) என்ற படி திரும்பி அருளானந்தனைக் இறுகக் கட்டியணைத்து ஆழமாக முத்தமிட்டாள்...

பின்னர் இருவரும் சோபாவை அடைந்தபோது,

"அருள் எனக்கு... உடம்பெல்லாம் என்னவோ செய்யுது... எனக்குப் பசிக்கேல்ல..." என்றபடி அருளானந்தனின் மார்பில் சாய்ந்தாள் சொல்வி.
"ஹே... ய்...  இன்ப அதிர்ச்சியைத் தாங்க இயலாம உடம்பு தள்ளாடுது போல..." என்ற அருளனாந்தன், சொல்வியை இறுக அணைத்தான்...

சொல்வி அருளானந்தனின் மார்பில் முகத்தைப் புதைத்தபடி

"ம்... ம்..." என்றாள்.

சொல்வியின் முதுகை ஆதரவாகத் தடவி சொல்வியை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த அருளானந்தன்;

"ஹேய்... வெளில கொஞ்ச நேரம் நடந்து போயிட்டு வருவம்... அப்ப உனக்கு ஆறுதலா இருக்கும்..." எனச் சொல்லி சொல்வியின் தலையில் முத்தமிட்டான் அருளானந்தன்.

அதற்கும் சொல்வி,

"ம்... ம்... " என்றாளே தவிர அசையவில்லை.

"எழும்பு போய் முகத்தைக் கழுவியிட்டு வா... எழும்பு..." என்றான் அருளானந்தன்.
அப்போது சொல்வி ஒருவாறாக தலை நிமிர்த்தி அருளானந்தனைப் பார்த்தாள்; பின்னர் தனது வலது கையை எடுத்த அவன் மார்பில் வைத்து அந்த மோதிரத்தைப் பார்த்து, பின்னர் அருளானந்தனைப் பார்க்க; அருளானந்தன் சொல்வியைப் பார்த்துச் சிரித்தான்.

"Thank You..." என்றவள், அருளானந்தனின் முத்தத்தை எதிர்பார்த்து சிறிது முகத்தை மேலே உயர்த்த, அதையுணர்ந்த அருளானந்தன் குனிந்த அவளை ஒரு குழந்தையை அணைப்பது போல அணைத்து, அவளது ரோஜாப் பூ நிற உதடுகளில் கனிவான ஒரு முத்தம் தந்தான்.

சொல்வியும் அருளானந்தனும் வெளியே அந்த விடுதிப் புல் வெளியில் இள மாலை நிலவொளியில் ஒருவரை ஒருவர் அணைத்தபடி நடந்தனர்.

அந்த நிலவொளியில் தனது வலது கையை உயர்த்தி அந்த மோதிரத்தைப் பார்த்து;

"Beauuuuutiful... I looooove it... (அழகாகாகாகா இருக்கு... எனக்கு ரொம்ம்ம்ப பிடிச்சிருக்கு...)" என்ற சொல்வி நடந்து கொண்டே அருளானந்தனை அணைத்து முத்தமிட்டாள்...

"ஹெய்... அருள்... Sri Lanka வில... எப்பிடி என்கேஜ்மென்ற் engagement (நிட்சயதார்த்தம்) செய்வீங்க..." எனக் கேட்டாள் சொல்வி.

"பொதுவா அப்பா அம்மா பார்க்கிறது நிட்சயம் செய்யிறதுதான் வழமை... ஆனா ரெண்டு பேர் காதலிச்சாலும்... முறையோட போய் நிட்சயம் பண்ணுவினம்... மோதிரம் போடுறது... றிஜிஸ்ரர் (பதிவு - Register) செய்யிற நேரம்... அதுக்குப் பிறகு கலியாணம் செய்யேக்க பொம்பிளைக்கு தாலியை மாப்பிள கட்டுவார்..."
என்ற அருளானந்தன் தொடர்ந்து,

"இப்ப நீ சொல்லலாம் நான் உன்ர would-be எண்டு என்கேஜ்மென்ருக்கு முதல் would-be எண்டு சொல்றேல்ல... ..."

"ஓ... அதாலதான் பிழையெண்டு சொன்னியா..." என்றவள் தொடர்ந்து

"நானும் தாலி கட்டலாமா..." என ஆசையுடன் அருளானந்தனைப் பார்த்துக் கேட்டாள் சொல்வி.

"கட்டாயமெண்டில்ல... உனக்கு விருப்மெண்டா நான் கட்டிவிடுறன்..." எனச் சிரித்தபடி சொன்னான்.

"எனக்குத் தமிழ் முறைப்படி கலியாணம் கட்ட விருப்பம் சாறி கட்டி, தலை நிறைய பூ வைச்சு, நிறைய நகையள் போட்டு..." என மிகுந்த ஆசையுடன் சொல்வி தொடர இடைமறித்த அருளானந்தன்...

"தமிழ்க்கலியாணம் எங்கே பாத்தனீ...?" என்றான் ஆச்சர்யத்துடன்.

"ஒரு இந்தியப் படத்தில... So... Beautiful wedding ceremony (நல்ல அழகான திருமண வைபவம்)" என்றாள் சொல்வி

"அப்ப உன்ர அப்பா அம்மா அத விரும்புவினமா..." என்றான் அருளானந்தன்.
"அதுதான் தெரியேல்ல... ஒரு மாதிரி கதைச்சுப்பாப்பம்..." என மிகுந்த ஆதங்கத்துடன் சொன்னாள்.

"ஹேய்... I have an idea (எனக்கொரு யோசனை வருது...) நாங்கள் Sri Lanka வில ரெண்டு கலியாணம் ரெண்டு நாள் செய்வம்... ஒண்டைச் சொல்லுவம் றிஜிஸ்ரர் மரீஜ் (register marriage) எண்டு... மற்றதைச் சொல்லுவம் சடங்கு கல்யாணமெண்டு... அதையே... உன்ர அப்பா அம்மாவுக்காக சேர்ச் (Church) இலயும்... உன்ர ஆசைக்கு ஒரு தமிழ்க் கல்யாணம் ஒரு ஹோல் இலயும் செய்தா என்ன... எப்பிடி என்ர ஐடியா..." என்றான் அருளானந்தன் மிகுந்த துள்ளலுடன்...

"Really... " என ஆச்சர்யபட்டாள் சொல்வி.

"ஏன் அது... அப்பிடி ரெண்டு கலியாணம்... எனக்கு விளங்கேல்ல...?" என ஆர்வத்துடன் கேட்டாள் சொல்வி.

"எங்கட கலாச்சார முறைப்படி ஒரு கலியாணம்தான். ஐயர் மந்திரம் சொல்லி... மணவறையில தாலி கட்டுறது. ஆனா, இங்லிஷ் (English) காரன் வந்திருக்கேக்க; கவண்மென்ரிலயும் பதிய வேணும் எண்டுட்டான். இங்லிஷ் காரன் எங்கட மரபுக் கல்யாணத்தை ஏற்றுக் கொள்ளேலாது எண்டுட்டான்... அது அப்பிடியே தொடர்ந்து வந்து... இப்ப அதுக்குப் பேர் றிஜிஸ்ரர் மரீஜ் (Register Marriage) எண்டு அதையும் எங்கட கல்யாணத்தில ஒரு அங்கமா சேத்திருக்கினம்..." என அருளானந்தன் தொடருமுன்.

"அது, இப்ப எனக்கு நல்ல வசதியாப் போச்சு..." என்றாள் சொல்வி

"ம்... உன்ர ஆசையை நல்ல வடிவா செய்து முடிக்கிறன் போதுமே...?" என்றபடி சொல்வியை இறுக அணைத்தபடி சொல்வியோடு நடந்தான் அருளானந்தன்.

"அப்ப உனக்கு எண்டு ஒரு ஆசை இல்லையா... கலியாணத்தில... இப்பிடிச் செய்ய வேணும்... இப்படி அலங்கரிக்க வேணும் எண்டெல்லாம்... ஆசை இல்லையா... " என அருளானந்தனைப் பார்த்துக் கேட்டாள் சொல்வி.

அருளானந்தன் சொல்வியை நிறுத்தி இறுக அணைத்து, அவளது கண்களைப் பார்த்து,

"என்ர ஆசையெல்லாம் நீ என்னோடையே இருக்க வேணும்... எண்டதுதான்... அது போதும்..." எனச் சொல்லி சொல்வியை ஆழமாக முத்தமிட்டான்.



தொடரும்...

இந்தக் கதையின் முதலாவது பாகத்தை வாசிப்பதற்கு இணைப்பு கீழே...

Wednesday 15 April 2015

படிக்காத மனைவி. - பாகம் - 1 நட்பும் காதலும்

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

சம்பவம் என்னவோ முழுக்க முழுக்க உண்மை; ஆனால், பெயர்கள், வயதுகள், இடங்கள், சம்பவம் நடந்த காலகட்டம், உப பாத்திர சொருகல்கள் எல்லாம் எனது கற்பனை...
முதலில் அருளானந்தனின் ஆரம்பகால வாழ்க்கை; நோர்வேயிலும் சுவீடனிலும் எப்படி இருந்தது எனச் சொல்கிறேன்... அதைச் சொன்னால்த்தான் அருளானந்தனின் மன நிலை எப்படி இருந்தது என அறிந்து கொள்ளமுடியும்.



நட்பும் காதலும்.



அருளானந்தன் தனது இருபதாவது வயதில் நோர்வேயிற்கு மேற்படிப்புக்காக எழுபத்தெட்டாம் ஆண்டு வந்தவன்.

நான்கு வருட பல்கலைக்கழகப் படிப்பு முடித்த பின், சுவீடன் நாட்டு பல்கலைக் - கழகங்களில் ஒன்று அருளானந்தனை ஆராய்ச்சிப் படிப்பிற்காக அழைத்தது. இரண்டு வருடப் படிப்பு நான்கு வருடங்களானது. கலைமானிப் பட்டமும் பெற்றுக் கொண்டான்.

அவனது படிப்பில் முதலில் அவனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna). ஹன்னாவை அருளானந்தனுக்கு அவ்வளாகப் பிடிப்பதில்லை. காரணம் அவளது பொறுப்பின்மை, குடிப்பழக்கம், படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என காரணங்களுக்குக் குறைவில்லை.

அருளானந்தனுக்கு சொல்வியை பிடித்ததற்கு இன்னும் ஒரு காரணம்...
சொல்வி என்ற பெயர் ஓரளவிற்கு செல்வி என்ற தமிழ்ப் பெயருடன் ஒத்திருந்ததும்.

ஆக, ஒருநாள் அவளிடமே அவளது பெயருக்கு என்ன பொருள் எனக்- கேட்டுவிட்டான்.
"சொல்வி என்றால் காடு!! " என்றுவிட்டு அருளானந்தனைப் பார்த்தாள். 

"ஹா... " என வாயை விரித்து ஆச்சரியத்துடன் பார்த்தான்.

சொல்வியும் ஹன்னாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அருளானந்தனுக்கு ஏன் கேட்டோம் என்றாகி விட்டது...
பின்னர் சொல்வியே சொன்னாள்.

"காடும் ஒரு பொருள்... ஆனால் வெள்ளி என்பதும் ஒரு பொருள்..." என்று அவள் சொன்ன போது,

"ஓ... யா... சொல்வ் என்றால் வெள்ளி... " என வியந்தான் அருளானந்தன்.

"நான் கருவானது அம்மாவும் அப்பாவும் காட்டில் இருக்கும் எங்களது விடுமுறை குடிசைக்கு (cottage) சென்ற நேரம்... ஆக, அதுவும் எனக்குப் பொருந்தும்..." என்றாள்.

"தமிழில் செல்வி எனப் பெயருள்ளது... அதனால்த்தான் கேட்டேன்..." என்று அருளனாந்தன் சொன்ன போது;

அந்த இரு பெண்களுமே
"ஓ... அதனர்த்தம் என்ன" என ஆச்சர்யத்தோடு கேட்டார்கள்.

"செல்வி என்றால் பல அர்த்தங்களுண்டு. திருமணமாகத பெண்ணைச் சுட்டும் பெயர்... அதாவது உதாரணமாக செல்வி ஹன்னா என்பது போல... அடுத்து மகிழ்ச்சி, சந்தோஷம், வளமான, என்பவற்றோடு மகள் என்றும் பொருள்..." என்றான் அருளானந்தன்...

"அப்படியானால்... திருமணமான பின் பெயர் மாற்ற வேண்டுமா அது சிக்கலல்லவோ??" எனக் கேட்டாள் ஹன்னா.

"இல்லை... ஒரு பெண்ணின் பெயர் செல்வி என்றால்... அவள் திருமணமான பின் அவளது சுட்டுப் பெயர் திருமதி என மாறும்... இங்கே (f)ப்றோ(ø)க்கன் (frøken) என திருமணமாகாத பெண்ணையும் (f)ப்றுஎ (Frue) எனத் திருமணமான பெண்ணையும் சுட்டுப் பெயர்களால் அழைப்பதில்லையா... அது போல... ஆனல் செல்வி என்ற அவளது இடு பெயர் மாறாது..." என விளக்கினான் அருளானந்தன்.

பாரபட்சம் காட்டாமல்,

"ஹன்னா என்றால் என்ன பொருள்... " எனக் கேட்டான் அருளானந்தன்.

"ஹன்னா ஹீப்ரூ இலிருந்து வந்தது... கடவுள் கிருபை என்பததர்த்தம்..." என்றாள் ஹன்னா.

"அருளானந்தன் என்றால் என்ன அர்த்தம்? " சொல்வி கேட்டாள்
"அருள் என்றால்... Blessing of God கடவுளின் ஆசி... ஆனந்தன் என்றால்... மகிழ்ச்சியானவன்... ஆக, அருளானந்தன் என்றால் கடவுளின் ஆசியால் மகிழ்ச்சியாய் இருப்பவன் என்பதர்த்தம்" என்று அருளானந்தன் சொல்லி முடிக்கையில்...

"Of cours you are... (நிட்சயமாக அது போலவே இருக்கிறாய்...)" என்றாள் சொல்வி.

"Thank You..."என நன்றி தெரிவித்தான் அருளானந்தன்.


சொல்வி என்ற பெயர் செல்வி என்ற தமிழ்ப் பெயரை ஒத்ததாக இருந்தால், அருளானந்தனுக்கு அந்தப் பெயரும் வெகுவாகப் பிடித்திருந்தது.

ஹன்னாவினுடைய தந்தை தனது நிறுவனத்தில் மூவருக்கும் வேலை தருவதாச்சொன்னார். ஆனால் அருளானந்தன் கலைமானிப் பட்டப் படிப்பைத் தொடரத் தீர்மானித்து, ஹன்னா வின் தந்தையினது அழைப்பை நிராகரித்தான்.

அதேபோல, சொல்வியும் ஹன்னாவினுடைய தந்தையின் அழைப்பை ஏற்றுக் கொள்ளாது, பட்டப் படிப்பை அருளானந்தனோடு பயில விரும்பினாள். சுவீடன் நாட்டு அந்தப் பல்கலைக்கழகமும் இருவரையும் அனுமதி தந்து வரவேற்றது.

சொல்வி அருளானந்தனோடு கலைமானிப் பட்டப்படிப்பைத் தொடர அவனோடு சுவீடன் வந்தது; அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இருவரும் ஒரே மாடியில் ஒரே தளத்தில் பக்கம் பக்கமான அறைகளில் தங்கியிருந்து படித்தார்கள்.

இவர்கள் இருவருக்குள்ளும் மிக இறுக்கமான பிணைப்பு ஏற்பட்டது. ஏன் அப்படியெல்லாம் சுற்றி வளைக்க வேண்டும்... இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள்.

-- இங்கே காதல் அல்லது திருமணம் என்ற பந்தங்கள் இல்லாமலே பாலியல் உறவை ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வைத்துக் கொள்ளலாம். தவறே இல்லை.  இன்றைய இளைஞர் கட்சிப் பேச்சாளர்; கலவியியல்க் கல்வி நோர்வே நாட்டின் பாடத்திட்டத்தில் செய்முறைப் பயிற்சியோடு உள்ளடக்கப் பட வேண்டும் எனக் கூறியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆக, அருளானந்தனும் சொல்வியும் உடலுறவு கொள்வது, விடுமுறை காலங்களில் இடங்கள் சுற்றிப் பார்ப்பது என அவர்களது நான்கு வருட கலைமானிப் படிப்புக் காலமும் மிக இனிமையாகக் கழிந்தது. அவர்களிருவருக்கும் பொதுவான விடயங்கள் என்றால்; கல்வியிலிருந்து கலவி உட்பட எல்லாமுமே...

ஒரு நாள் சொல்வி அதையும் அருளானந்தனிடம் சொன்னாள்.
"ஹெய்... எனக்கு பிடிச்சதெல்லாம் உனக்கும் பிடிச்சிருக்கு... உனக்கு பிடிச்சதெல்லாம் எனக்கும் பிடிச்சிருக்கு... எங்கள் இரண்டு பேரையும் சொர்க்கத்திலயே சேர்த்து வைக்க முடிவு செய்திருக்கு போல...'match made in heaven'" என்று சொல்வி சொல்ல;

"எனக்கு கார உணவு பிடிக்கும்... உன்னால் அதை உண்ண முடியாதே..." என பதில் சொன்னான் அருளானந்தன்.

"எனக்கு பிடிக்காதெண்டு நான் சொல்லேல்லயே... நீ கொஞ்சம் உறைப்பை குறைச்சு கறி சமைச்சா நானும் 'enjoy' பண்ணுவன்..." எனக் கூறி அவன் மடியிலமர்ந்து செல்லமாக அவன் கன்னத்தில் கிள்ளி விட்டு உதடுகளில் முத்தமிட்டாள்.

ஹன்னாவின் குறுக்கீடு இல்லாமல் இருவரும் சுவீடன் வந்தபோதே அவர்களுக்குள் காதல் வளர ஆரம்பித்தது. நோர்வேயில் இருந்தபோது, இருவரிடமும் ஒரு ஈர்ப்பு இருந்தது, என்னவோ உண்மை.

சுவீடனில் இருவரும் தனித்தனி அறை விலாசங்கள் வைத்திருந்தாலும், சொல்வி, அருளானந்தனின் அறையில்த்தான் எல்லாமுமே.
உண்பது, உறங்குவது, உடலுறவு கொள்வது, தொலைக்காட்சி பார்ப்பது, படிப்பது எல்லாம்.

ஒரு நாள் குழந்தைகள் காப்பகங்களைப் பற்றிய ஒரு விவரணம் தொலைக்காட்சியில் காண்பித்தார்கள். அப்போது, ஒரு ஆபிரிக்க - சுவீடன் குழந்தையைக் காட்டினார்கள். அதைக் கண்டவுடன் சொல்வி,

"மிக அழகான குழந்தை என்ன..." என்று விட்டு உடனேயே

"எனக்கும் உனக்கும் குழந்தைகள் பிறந்தால் இப்படி அழகாகவும் அறிவுடையவர்களாகவும் இருப்பார்கள் இல்லையா..." என அருளானந்தனின் மார்பில் சாய்ந்திருந்து தொலைகாட்சி பார்த்த சொல்வி தலை நிமிர்த்தி அருளானந்தனைப் பார்த்துக் கேட்டாள்.

அருளானந்தன், சொல்வியின் முகத்தை இரு கைகளாலும் அள்ளியெடுத்து கனிவான ஒரு முத்தம் அவளது உதடுகளில் பதித்தான். பின்னர்

"நானும் அதைத்தான் யோசிச்சனான்..." என்ற அருளானந்தன்,

"அது சரி... குழந்தைகள் என்றால்... எத்தனை குழந்தைகள் பெறப் போகிறோம்?" என அருளானந்தான் சொல்வியை இழுத்து மடியில் படுக்க வைத்துக் கேட்டான்.

நிமிர்ந்து அருளானந்தனின் மடியில் படுத்திருந்த சொல்வி, அருளானந்தனை பார்த்து, வலது கையில் பெரு விரலை மடித்துக் கொண்டு மிகுதி நான்கு விரல்களையும் விரித்துக் காட்டி விட்டு நாணம் மேலிட, சொல்வியின் முகமும் குங்குமாகச் சிவக்க இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டாள்.

"ஹேய்... உன்ர உடம்பு தாங்காது... ரெண்டு போதும்..." எனச் சொல்லிய படியே அவளது இரு கைகளையும் எடுத்து அவற்றிற்கு முத்தங் கொடுத்தான் அருளானந்தன்.

"ஊகும்... அதெல்லாம் முடியாது... ரெண்டு ஆணும் ரெண்டு பெண்ணும்... " எனச் சொல்லி விட்டு, நாணம் இரத்தச் சிவப்பை சொல்வியின் முகத்தில் பூச, உடனேயே திரும்பி அருளானந்தனின் அடி வயிற்றில் முகத்தைப் புதைத்துக் கொணடாள் சொல்வி...

அருளானந்தன், சொல்வியின் தங்க நிறத் தலை மயிர்களை விரல்களால்க் கோதிவிட்ட படி,
"உனக்கு விருப்பமெண்டா... எனக்கும் விருப்பம்தான்... எனக்கென்ன விதைக்கிற மட்டுந்தானே... சுமக்கிறது... அறுவடை செய்யிறது... பிள்ளயளை நல்ல பிள்ளயளா வளர்க்கிறது... எல்லாம் உன் பொறுப்பு..." என்று சொல்லி சொல்வியின் சிவந்த கன்னத்தில் முத்தமிட்டான்.

உடனே சொல்வி எழுந்து, அருளானந்தனைப் பார்த்து;
"அப்பா ஸ்தானத்தில இருந்து என்ன செய்ய வேணுமோ அவ்வளவும் நீ தான் செய்ய வேணும்... இது Sri Lanka இல்ல..." என அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டு, அருளானந்தனைப் பார்த்தாள்.

"நீ என்னென்ன சொல்றியோ அதெல்லாம் நான் செய்யிறன்..." எனச் சொல்லிவிட்டு, சொல்வியை இறுக அணைத்து ஆழமாக முத்தமிட்டான் அருளானந்தன்.



தொடரும்...