Tuesday 26 May 2015

படிக்காத மனைவி - பாகம் 5 'ஹலோ அங்கிள்'

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).


நோர்வேஜிய பெண்ணகளுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பன இல்லை எனப் பலர் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு...
அதுவும் முதல்ப் பாகங்களில் விரிகிறது.



 'ஹலோ அங்கிள்'...




அருளானந்தனும் சொல்வியும் ஒரு படுக்கையறை (Bed room), ஒரு வதிவறை (Living room), ஒரு அடுக்களை (Kitchen), ஒரு குளியல்க் கூடத்துடன் கழிகலன் கொண்ட குளியலறை (Bath & Toilet)  கொண்ட லின்டாவின் தந்தையின் தொடர் மாடி வீட்டிற்கு (Apartment) குடிபுகுந்து, ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் ஆகியிருந்தன.

அவர்களிருவரும் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான காலத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். 
கலாசாலை, வீடு, கலவி, சின்னச் சின்னச் சீண்டல், சின்னச் சின்ன சிலுமிசம், நண்பர்களுடன் கும்மாளம், 
நோர்வேயில் அருளானந்தனின் வருங்கல மாமனார் மாமியார் மைத்துனனின் அபரமிதமான உபசரிப்பு, இத்யாதி, இத்யாதி என இந்த ஒன்றரை வருட காலமும் அவர்களிருவரும் எந்த வித ஒரு சிக்கலுமில்லாமல் சிந்தனையுமில்லாமல் கழிந்தது.

குழந்தைகளைப்போல மகிழ்ச்சியாக, துன்பம் என்றால் என்ன... வாழ்க்கையில்ச் சிக்கலென்றால் என்ன... வெளி உலகில் என்ன நிகழ்கிறது, அதனால் எவ்வாறான சிக்கல்கள் தோன்றும்... அவற்றை எவ்வாறு சமாளிப்பது... என்ற எந்தவித சிந்தனையுமில்லாமல் அருளானந்தனும் சொல்வியும் இருந்தார்கள்.

அவர்களது கேள்விகளும் பதில்களும், யோசித்து முடிவெடுப்பது எல்லாமுமே...

இன்றைய உணவு வெளியேயா அல்லது சமையலா... ஐரோப்பிய உணவா இந்திய இலங்கை உணவா... சனி ஞாயிறுகளில் என்ன நேரம் எழுந்திருக்க வேண்டும்... சிநேகித சிநேகிதியர் யார் வருவார்கள்... யாரை அழைக்கலாம்... எங்கே சென்று வார இறுதியைக் கழிக்கலாம்... என்ன படம் பார்க்கலாம்... பார்த்த படத்தில் கதை, கதாபாத்திரங்களைப் பற்றி விவாதம்...
இறுதியாக இன்று எந்த நிலையில் கலவி அல்லது மறுநாள் அதை வைத்துக் கொள்வோமா...
இவைதான் அவர்களுடைய சிந்தனையும் யோசனையும் பதிலும் முடிவுகளும்.

எது எப்படி இருந்தாலும், சொல்வியிடம் ஒரு சிறிய மனத்தாங்கல் இருக்கத்தான் செய்தது. அது, ஒரு நாளுமே அருளானந்தன் சொல்வியை அவனது அப்பா அம்மா, தம்பி தங்கையுடன் தொலைபேசியில்க் கதைக்க அனுமதிப்பதில்லை.
அது ஏன் என அவளுக்குத் தெரியும்... அதுதான் அருளானந்தன் இன்னமும் அவர்களது காதலை அவனது பெற்றோருக்குச் சொல்லவில்லை என்பது.

ஆனால் அவளைக் குடைந்தெடுத்த கேள்வி என்ன என்றால், ஏன் அருளானந்தன தங்கள் காதலை இன்னமும் அவனது அப்பா-அம்மாவுக்குச் சொல்ல விரும்புகிறானில்லை என்பதும்,
எப்போது, எப்படி அவர்களது உறவை அருளானந்தனது பெற்றோருக்குச் சொல்வது... எப்போது யாழ்ப்பாணம் செல்வது... தனது வருங்கால மாமனார் மாமியாரை, மைத்துனன் மைத்துனியை எப்போது பார்ப்பாது... அவர்களெல்லோரும் தன்னோடு எப்படிப் பழகுவார்கள்... என்பதெல்லாம் அவளது விடை கிடைக்காத கேள்விகளாய் மனதை உறுத்தும்.

ஓரளவு தமிழ் கதைக்கத் தெரிந்திருப்பதாலும் எதையும் தாங்கிக் கொள்ளலாம் என்ற மனத் தைரியம் இருப்பதாலும் யாழ்ப்பாணத்தில் அவர்களோடு இருக்கும் காலத்தில் அவர்கள் மனம் கோணாத வகையில் நடந்து கொள்ளாலாம் என தன்னைத் தானே தேற்றிக் கொள்வாள். என்றுமே சொல்வி, இவை பற்றி அருளானந்தனிடம் கதைத்ததில்லை.

ஒருநாள், சொல்வி தனியே வீட்டிலிருந்தபொழுது, தொலைபேசி இனிய நாதத்துடன் ஒலித்தது.
அருளானந்தனும் சொல்வியும் வீட்டிலும் கலாசாலையிலும் இருந்தால், அநேகமாக தொலைபேசியில் தங்களது படிப்பு சம்பந்தமாகக் கதைத்து ஆய்வுகளை எழுதுவார்கள்.
அது மட்டுமல்ல, அவர்களிருவரும் தொலைபேசியிலும் காதலிப்பார்கள். நேரம் போவது தெரியாமல் தொலைபேசியிலேயே கொஞ்சிக் கொண்டிருப்பார்கள். பத்து நிமிட நேரத்தில் வீடு செல்லாம், ஆனால் பல மணிநேரம் தொலைபேசியில் கொஞ்சி விளையாடுவார்கள்.

அதனால், அந்த நேரத்தில் அருளனந்தன்தான் கலாசாலையிலிருந்து அழைக்கிறான் என்ற திடமான நம்பிக்கையில்
"Haai Sweetie... what's up..." என கொஞ்சும் குரலில் கேட்டாள் சொல்வி.

"ஹலோ... யாரிது..." என்றது ஒரு பெண் குரல் மறுமுனையிலிருந்து.

எண்ணற்ற தடவைகள் அருளானந்தனின் நண்பர்கள் தொலைபேசியில் சொல்வியுடன் தமிழில் கதைத்திருக்கிறார்கள். சொல்வி தனக்குத் தமிழ் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ளாது, அருளானந்தனிடம் தொலை பேசியின் ஒலி வாங்கியைத் (Receiver) தந்துவிடுவாள். அருளானந்தன் இல்லை என்றால் ஆங்கிலத்திலோ, நோர்வேஜிய மொழியிலோ அவர்களுடன் கதைப்பாள்.

தமிழ் விளங்கிக் கொண்டது போலவும் காட்டிக் கொள்வதில்லை. அவளது எண்ணமெல்லாம் சரளமாகத் தமிழில்க் கதைத்து அருளானந்தனை ஆச்சரியப்பட வைக்க வேண்டுமென்பதே.
அதுவும் அருளானந்தனின் தாய், தந்தை, தம்பி, தங்கை இவர்களுடன் அவள் தமிழில்க் கதைப்பதை அருளானந்தன் பார்த்து ஆச்சரியப்பட வேண்டும் என ஆவலுடன் காத்திருந்தாள். அந்த நாள் வெகு தூரத்திலும் இல்லை என்பதால், எவருக்கும் அவள் தனது தமிழறிவை வெளிக்காட்டாது இருந்தாள்.

ஆனால் எந்த ஒரு தமிழ்ப் பெண் மாணவியும் சொல்வியுடன் தமிழில்க் கதைத்துச் சீண்டுவதில்லை.

அதைவிட, அழைத்த பெண் சிறிது வயதில் முதிர்ந்தவாராகவும் தொலைபேசி அழைப்பு தூர இடத்திலிருந்து வருகிறதென்பதையும் சொல்வி புரிந்து கொண்டாள். 
ஆக, இந்தத் தமிழ்ப் பெண்ணுடன் தனக்குத் தெரிந்த தமிழில் கதைத்தாள் சொல்வி.

"ஹலோ... அருள்... அவர்... வீட்டில இல்ல... நீங்க... யாரு..." என மிகவும் ஆறுதலாகவும் சொல்லுச் சொல்லாகவும் கதைத்தாள்.

"அருளானந்தன்ர வீடில்லயா இது... பிழையான நம்பரா..." என்றது அந்தப் பெண் குரல்.

"இது சரியான நம்பர்தான்... அவரும்.... " என சொல்வி அடுத்த சொல்லுக்காக யோசித்த வேளை...

"நீ ஊர்ல எவடம்... உன்ர தமிழ் ஒரு மாதிரியிருக்கு... " என்றது அந்தப் பெண் குரல்.

"நான் நோர்வே..." என்றாள் சொல்வி.

"நீ நோர்வே நாட்டுப் பொண்ணா... தமிழ் கதைக்கிறியே..." என ஆச்சரியமாகக் கேட்டது அந்தப் பெண்குரல்.

"கொஞ்சம்... கொஞ்சம்... தெரியும்... கதைப்பன்..." என்றாள் சொல்வி அளவில்லாத சந்தோஷத்துடன் கூச்சத்துடனும்.

"Hello, this is Arul's father... (ஹலோ, இது அருளின்ர அப்பா...)" என அருளானந்தனின் தந்தை கதைத்தார்.
"Hello uncle...(ஹலோ... மாமா...)" என மட்டற்ற மகிழ்ச்சியுடன் அன்பாக அழைத்தவள் உடனேயே
"Was that Arul's mother...? (அது அருளின் அம்மாவா...)" எனக் கேட்டாள் சொல்வி, இப்போதும் அளவில்லாத மகிழ்ச்சியுடனும் ஆச்சர்யத்துடனும்.

"Yes... that was his mother...(ஓம்... அது அவனுடைய அம்மா...)" என அருளானந்தனின் தந்தை முடிப்பதற்குள் 
"Oh... My... God... I can not beilive I really talk to you...(அடக் கடவுளே... என்னால நம்ப முடியாமலிருக்கு உண்மையிலயே நான் உங்களோட கதைக்கிறன் எண்டத...)" என சொல்வி சொன்னபோது.

"May I know who you are...? and What you are doing in Arul's Apartment...? (நீ யாரெண்டு தெரிஞ்சு கொள்ளலாமா... நீ அருளின்ர வீட்டில என்ன செய்யுறாய்...)"என அருளானந்தனின் தந்தை கேட்டார்.
அப்போது, சொல்வி ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள்... அது அருளானந்தன் தங்களது காதலை அவனது பெற்றோருக்கு இன்னமும் சொல்லவில்லை என்பது.
சொல்விக்கு இதைப்பற்றி அந்த இந்தியத் தமிழ்ப் பெண், தமிழ் சொல்லித் தரும்போது, கதைத்திருந்தாள். 'பொதுவாக, காதல் வசப்பட்ட ஆணோ பெண்ணோ தமது பெற்றோரிடம் அதைச் சொல்ல பயப்படுவார்கள். எதற்கும் நீ அருளானந்தனிடம் கேட்டுத் தெரிந்துகொள். எக்குத் தப்பாக தொலைபேசியில் மாட்டிக் கொள்ளாதே' என எச்சரித்திருந்தாள். 

அருளானந்தனிடம் சொல்வி கேட்டபோதெல்லாம், 'நான் சொல்கிறேன்... நான் நிட்சமாகக் கதைக்கிறேன்' என்றானே தவிர அவன் தனது காதலை அவனது பெற்றோருக்குச் சொல்லவில்லை என்பதை அவனுடைய தந்தையின் கேள்வியிலிருந்து அறிந்து கொண்டாள்.

இந்த யோசனையெல்லாம் அசுர வேகத்தில் சொல்வியின் தலைக்குள் சுழன்று சரியான ஒரு யுக்தியை, ஒரு யோசனையைக் கொண்டு வந்தது.

"No... Uncle... I am in my room; but we share this telephone to reduce the cost... (இல்ல.. மாமா... நான் என்ர அறையில இருக்கிறன்... நாங்க ரெண்டு பேரும் இந்தத் தொலைபேசியை பகிர்ந்து கொள்றம்... செலவைக் குறைக்கிறதுக்காக...)" என்றாள் சொல்வி ஒரு பதட்டத்தையும் வெளிக்காட்டாமல்.

"Oh... that's very good idea and how... is it possible...? (ஓ... அது நல்லதொரு யோசனை... ஆனா... அதெப்பிடி... அது செய்யலாமோ...)" எனக் கேட்டார் அருளானந்தனின் தந்தை.

"Oh... Yes... It is very simple uncle... Just assume we put another one telephone in a bed room or any where else... at home... Just like that... Arul's friend who made the connection...(ஒமோம்... அது வெகு சுலபம்... இப்ப... ஒரு வீட்டிலயே ஒரு தொலைபேசியை படுக்யையறையிலயோ... அல்லது வேறேதாவது இடத்திலயோ பூட்டூற மாதிரி... அருளின்ர நண்பர் ஒருவர்தான் அப்பிடி இணைப்புக் கொடுத்தவர்..." என ஒரு பொய் சொன்னாள்.

"Oh... Yes... Yes... that's wonderful...(ஓமோம்... அது நல்லது...)" என அருளானந்தனின் தந்தை சொன்னபோது, சொல்வி மார்பில்க் கையை வைத்து, 'Oh... My... Jesus...(ஓ... என்ர யேசுவே...) தப்பிச்சேன்... Thank You...' என மனதுக்குள் கடவுளுக்கு நன்றி செலுத்தினாள்.

அவள் தங்களது காதலை அருளானந்தனே அவனது பெற்றோருக்குச் சொல்ல வேண்டும் என நினைத்தாள். அதுவே முறையானதும் என நினைத்தாள். அருளானந்தன் அவர்களது காதலைச் சொல்லாமலிருக்க, தான் அதைச் சொல்லி அதனால் அருளானந்தனின் பெற்றோர் அருளானந்தன் மீது கோபங்கொள்ளக் கூடும் எனவும் யோசித்தே அப்படி ஒரு பொய்யைச் சொன்னாள் சொல்வி.

"I didn't get your name...(உன்ர பேரைச் சொல்லேல்ல...)" என்றார் அருளானந்தனின் தந்தை.
"Oh... Sorry Uncle... My name is Selvi... uncle...(ஓ... மன்னியுங்கள் மாமா... என்ர பேர் செல்வி...)" என்றாள் சொல்வி பணிவுடன்.

"Oh... Are you Tamil...? (ஓ... நீ தமிழா...?)" என்று ஆச்சரியத்துடன் கேட்டார் அருளானந்தனின் தந்தை.
"Oh... No uncle... I am a Norwegian, but my name sounds like Tamil name... Arul also told me... (ஓ... இல்லை மாமா... நான் ஒரு நோர்வே நாட்டவள்... ஆனா என்ர பேர் தமிழ்ப் பேரைப்போல இருக்கு... அருளும் அதைச் சொன்னவர்...)" என்றாள் சொல்வி.

"Hello, Selvi... would please ask Arul to call us... We are now staying with Arul's uncle in Madras...(ஹலோ, செல்வி... தயவு செய்து...அருளை எங்களுக் தொலைபேசி எடுக்கச் சொல்கிறாயா... நாங்கள் இப்ப அருளின்ர மாமாவோட சென்னையில இருக்கிறம்...)" எனக் கேட்டுக் கொண்டார் அருளானந்தனின் தந்தை.

"Ok... Uncle... I'll tell him..."எனச் சொன்னாள் சொல்வி.

"Thank You... Selvi... It is very nice to talk with you... You are a nice girl... Take care...(நன்றி செல்வி... உன்னோட கதைச்சது சந்தோஷம்... நீ ஒரு நல்ல பிள்ளை... பாதுகாப்பாய் இரு...)" என மிகுந்த அன்புடன் சொன்னார் அருளானந்தனின் தந்தை.

சொல்விக்கு சந்தோஷத்தால் கை கால்கள் நடுங்கியது, உதடுகள் துடித்தன, நாணத்தால் முகம் சிவந்தது. சொல்வி தொடர்ந்து நிற்க இயலாமல் கதிரையில் சாய்ந்தாள்.

"Thank You uncle... And I'll take care of Arul..."என்றவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள். ஆனால் மறுமுனையில் அது தெளிவாகக் கேட்கவில்லை...

"Bye... Bye..."என்றார் அருளானந்தனின் தந்தை.

"Bye..." என நடுங்கும் கைகளால் தொலைபேசியின் ஒலி வாங்கியை தொலைபேசியில் வைத்தவள், சோர்ந்துபோய் அப்படியே கதிரையில் அமர்ந்திருந்தாள்.

சொல்விக்கு ஒரு பக்கம் சந்தோஷம், கிளுகிளுப்பு அவள் உடலை ஆக்கிரமித்தாலும், மறு பக்கம் மூளையை குடைந்தெடுத்தது பலமான யோசனை.

அந்த யோசனையெல்லாம் அருளானந்தன் ஏன் இன்னமும் தங்களது காதலை அவனது பெற்றோருக்குச் சொல்லத் தயங்குகிறான் என்பது. சிந்தனை வசப்பட்டவளாக இருந்தவள், அப்படியே உறங்கிவிட்டாள்.

அருளானந்தன் வீடு வந்தபோது, சொல்வி கதிரையிலேயே ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.

புத்தகப்பையை சத்தமில்லாது வைத்துவிட்டு, சொல்வியினருகில் வந்து நின்று அவள் நித்திரை செய்யும் அழகை சில நிமிடங்கள் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான்.
ஒவ்வொரு முறையும் சொல்வி மூச்சு இழுத்து விடுகையில் அவளது மார்பு ஏறி இறங்குவதை பார்த்து இரசித்து,

"My... Sweet... Angel...(எனது... இனிய தேவதை...)" எனச் சொல்லிக் கொண்டே சொல்வியின் நெற்றியில் முத்தமிட்டான் அருளானந்தன்.

"அ... என்ன..." எனக் கேட்டுக் கொண்டே கண் விழித்து அருளானந்தனைப் பார்த்தாள்  சொல்வி.

"எனது இனிய தேவதை... எண்டு சொன்னனான்..." என்ற அருளானந்தன், அந்த மூவர் அமரக்கூடிய கதிரையில் (Sofa) சொல்விக்கு மிக அருகில் அமர்ந்து சொல்வியை இறுக அணைத்து அவளது உதடுகளில் கனிவாக முத்தமிட்டான்.

அவனது கைகளுக்குள் சொல்வி இதமாக அவனது மார்பில் முகம் புதைத்து சிறிது நேரம் சுகம் கண்டாள்.

"அது சரி... நீ அப்பிடி என்ன செய்து... இப்பிடிக் களைச்சுப் போய் சோபாவில நித்திரை கொள்றாய்...?" என அருளானந்தன் கேட்டதும் சொல்வி அவனது கைகளுக்குள்ளேயே அணைந்து மார்பிலிருந்து விலகாமல் தலையை நிமிர்த்தி, அருளானந்தனைப் பார்த்தாள்.
பின்னர்

"எனக்கு என்னெண்டு தெரியேல்ல... மேசையில இருந்து திசீஸ் (thesis ஆய்வறிக்கை) எழுதிக் கொண்டிருந்தனான் எப்பிடி இதில வந்து நித்திரை கொண்டனெண்டு தெரியேல்ல..." எனக் குழம்பினாள்.

"நீ எதையோ கடுமையா யோசிச்சிருக்கிறாய்... அதால மூளை களைச்சுப் போயிட்டுது... கொஞ்ச நேரம் இதில இருப்பம் எண்டு வந்திருப்பாய்... அப்பிடியே நித்திரையாயிட்டாய்..." என விளக்கம் கொடுத்தான் அருளானந்தன்.

அதைக் கேட்டபோது,

திடீரென அவனது இரு கைகளையும் விலக்கிக் கொண்டு எழுந்திருந்த சொல்வி, அருளானந்தனையே பார்த்தாள். அந்தப் பார்வையில் கலக்கம் நிறைந்திருந்தது.

"ஹேய்... என்ன அப்பிடிப் பாக்கிறாய்..." எனக் குழப்பத்தோடு கேட்டான் அருளானந்தன்.

"நீ எப்ப... எங்களை அல்லது என்னைப் பற்றி உன்ர அம்மா-அப்பாவிட்ட சொல்லப் போறாய்..." என ஏக்கத்துடன் கேட்டாள் சொல்வி.

"சொல்றன்... இப்ப இலங்கேல பிரச்சனையாம் இப்ப போய் எங்களப் பற்றிக் கதைச்சா அவையள் என்ன சொல்லுவினம் எண்டு தெரியாது. ஆறுதலா நேரம் வரேக்க சொல்றன்... இப்ப எதுக்கு அதெல்லாம்... நீ அளவுக்கு அதிகமா யோசிக்கிறாய்..." என ஆறுதல் சொல்லியபடியே சொல்வியை அணைத்தான்.

சொல்வியும் அவனது மார்பில் சாய்ந்தபடி,

"நான் இண்டைக்கு உன்ர அம்மா அப்பாவோட கதைச்சனான்..." எனச் சொல்லியபடியே அவனது சட்டைக்குள் (Shirt) விரல்ளை சொருகி அருளானந்தனின் மார்பில் இருந்த மயிர்களைக் கோதி விட்டுக்கொண்டிருந்தாள்.

அருளானந்தன் திகைத்துப் போய், சொல்வியை தூக்கி நேராக இருத்தி அவளது விழிகளுக்குள் பார்த்து,

"என்ர அம்மா அப்பாவோட கதைச்சனியா...? எப்ப... என்ன சொன்னனி... அவை என்ன சொன்னவை..." என பதட்டப்பட்டான் அருளானந்தன்.

"Relax... (ஆறுதலாயிரு...) நானொண்டும் உன்ர ரகசியத்தை அவயளட்டச் சொல்லேல்ல... எனக்கு இதை அந்த இந்தியத் தமிழ்ப் பெண் சொல்லி எச்சரித்திருக்கிறாள்... " என சொன்னவளின் கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றாகிக் கன்னத்தில் வழிந்தது.

"ஹேய்... ஏனிப்ப அழுறாய்... நீ என்ன கதைச்சனி எண்டுதானே கேட்டனான்..." என சொல்வியை அணைத்தான்.

"ஆசையா... ரெண்டு வார்த்தை உன்ர அம்மாவோட கதைக்கேலாமப்போச்சு... ஆசையா... உன்ர அப்பாவை 'அங்கிள்' எண்டன்... அவர்... அவர்... 'யார் நீ...' எண்டு கேட்டுட்டார்..." என விம்மலினூடே சொன்னாள் சொல்வி.

"ஹேய்... அழாத... அம்மா அவ்வளவுக்கு இங்கிலீஸ் கதைக்கமாட்டா... அப்பாவுக்குத் தெரியாததால நீ யார்... எண்டு கேட்டிருப்பார். இப்ப... உதாரணத்துக்கு நீ நோர்வேயில இருக்கிறாய் இங்க நீ கோல் (Call) எடுக்கேக்க... ஒரு பொம்பிள கதைச்சா நீ என்ன கேட்பாய்..." எனச் சமாதனம் சொல்லும் வகையில் அருளானந்தன் கேட்டபோது,

அவனது மார்பை விட்டெழுந்து அருளானந்தனின் முகத்தைப் பார்த்து,

"அடுத்த ப்ளைட்டில (flight) இங்க வந்து நிப்பன்..." எனச் சொல்லி அவனது மார்பில் 'தும் தும் தும்' எனக் குத்தினாள் சொல்வி.

சொல்வியை அப்படியே அணைத்து அவளது உதடுகளில் முத்தங் கொடுத்தான் அருளானந்தன்.

"ஹேய்... உன்ர அம்மா அப்பா, தம்பி தங்கை எல்லாரும் இந்தியாவுக்கு வந்திருக்கினமாம். உன்ர அங்கிள் வீடடிலதான் தங்கியிருக்கினமாம்... உன்னை கோல் பண்ணச் சொல்லச் சொன்னார் உன்ர அப்பா... என்ர மாமா..." என வெட்கத்துடன் சொல்லி அவனது மார்பில் முகம் புதைத்தாள் சொல்வி...

"ஐயோ வெக்கத்தைப் பார்... முகமெல்லாம் வெக்கத்தில சிவந்து போச்சு..." என சொல்வியை அணைத்து அவளது உச்சியல் முத்தமிட்ட அருளானந்தன், தொலைபேசியைின் ஒலிவாங்கியை எடுத்து, எண்களை அமுக்கினான்.

சொல்வி அவனது மடியில் படுத்திருந்தபடியே தொலைக் காட்சிப் பெட்டியை இயக்கி சத்தமில்லாது பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு பத்து, பதினைந்து நிமிடம் அருளானந்தன் தொலைபேசியில் அவனது அம்மா அப்பாவுடன் கதைத்து முடித்தவன் தொலைபேசியை வைத்துவிட்டு, சொல்வியின் பொன்னிறக் கேசங்களைக் கோதிவிட்டுக் கொண்டிருந்தான்.
சொல்விக்கு அருளானந்தனின் தமிழ் ஓரளவுக்கு விளங்கினாலும் முழுவதையும் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

சொல்வி நிமிர்ந்து அருளானந்தனைப் பார்த்தாள். அவளது பார்வையில் 'நாம் யாழ்ப்பாணம் போக முடியாதா...' என்ற கேள்வி நிறைந்திருதது. அருளானந்தன் சொல்வியின் பார்வையை சந்திக்கத் தைரியமில்லாது, சுவரை வெறித்துப் பார்த்த வண்ணம் அவனது மடியில்ப் படுத்திருந்த சொல்வியின் தலைமுடியைக் கோதிக்கொண்டிருந்தான்.

தொடரும்...

Wednesday 13 May 2015

படிக்காத மனைவி - பாகம் 4 பிறந்த நாள் - தொடர்ச்சி...

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).



பிறந்த நாள் - தொடர்ச்சி...



"அருள் ஒரு நல்ல காதலர்...(Arul is a great lover...)" எனும் போது,
"படுக்கையிலா... அல்லது... பொதுவாகவா...?" என்றான் ஒருவன்
"படுக்கையிலும்... பொதுவாகவும்..." என்று சொல்வி சொல்லும் போதே சொல்வியின் முகம் செஞ்சாந்து பூசிக் கொண்டது. சொல்வி முகத்தை மூடிக் கொண்டாள்.
"Oh... Oh... Ha..." என அங்கேயிருந்த பெண் மாணவிகளெல்லாம் ஆச்சர்யப்பட்டு ஏக்கப் பெருமூச்செறிந்தனர்.

"வா...  தனிய... உன்னைக் குடைஞ்சு, எல்லா விஷயங்களையும் எடுக்கிறன்..." என்றாள் சொல்வியின் சிநேகிதி ஒருத்தி.
சொல்வி வெட்கத்தோடு அவளைப் பார்த்தாள். அனைவரும் சொல்வியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தன்னைச் சுதாகரித்தவளாக சொல்வி தொடர்ந்தாள்

"Arul takes care of me... (அருள் என்னைப் பார்த்துக் கொள்கிறார்.)" என்று சொல்லி சொல்வி தொடர முற்படுகையில்...

"What do you mean by that... (அதனர்த்தம் என்ன...)" என்றாள் சொல்வியின் சிநேகிதி ஒருத்தி.

"How do I describe...mmm... (எப்படி நான் விபரிக்க... ம்... ம்...)" என்று விட்டு...

"OK... OK... இப்போ... உதாரணமாக... எனக்கு சுகமில்லையெண்டா... நான் பேசாம படுத்திருக்கலாம் அருள் எல்லா உதவியும் செய்வார்... எனக்கு ஆறுதாலா இருப்பார்." என சொல்வி தொடர... 

எல்லோரும் மெளனமாக சொல்வியையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருளானந்தன் சிரித்துக் கொண்டிருந்தான். சொல்வி அருளானந்தனின் முதுகில் தனது வலது கையால் தடவியபடியே தொடர்ந்தாள்...


"எங்களுக்குத் தெரியாத நிறைய விஷயங்கள் அருளின்ர கலாச்சாரத்தில இருக்கு... அதையெல்லாம் நான் அருளானந்தன் மூலமா தெரிஞ்சு கொண்டிருக்கிறன்... அனுபவிச்சுக் கொண்டிருக்கிறன்..." எனத் தொடரமுன்

"One of that is Karmasutra... isn't it?... (அதில ஒண்டு காமசூத்திரா... இல்லையா...)" என்றான் ஒருவன் அருளானந்தனைப் பார்த்துக் கண் சிமிட்டியவாறு...

"Yes... ஆனா... அதில்ல நான் சொல்றது..." என்றபோது, அனைவரும் ஆவலோடு 'இவளென்ன சொல்கிறாள்' என சொல்வியையே பார்த்தனர்.

"இப்ப... உதாரணமா... எங்களுக்கு மாதவிலக்கு வருமில்லையா..." என்றபோது,

"Ahh... what does he do for that... What do you do for her menses... Arul...? (அஹ்... என்ன அதற்கு அவன் செய்கிறான்... என்ன செய்கிறாய் நீ அருள் அவளின்ர மாதவிலக்கிற்கு...)" என்று கேட்டான் அருளானந்தனின் நண்பன் ஒருவன்.
அருளானந்தனுக்கு சிறிது வெட்கமும் கோபமுமாக இருந்தது. தலையைக் கவிழ்ந்து கொண்டு,

"Let her talk please... I totally do not like these...(தயவு செய்து அவளைக் கதைக்க விடுங்க... எனக்கு இது ஒண்டும் பிடிக்காது...)"என்றான் அருளானந்தன்.

"Arul... They our friends... Please not to be mad... They want to know how wonderful you are... (அருள்... அவர்கள் எங்களுடைய நண்பர்கள்... தயவு செய்து கோவிக்காத...நீ எவ்வளவு சிறந்தவன் என அவர்கள் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள்...)" என மிகவும் பணிவாக அருளானந்தனின் காதில் சொன்ன சொல்வி, தொடர்ந்து,

"அருளானந்தன் ஒரு நல்ல பண்புடையவர்... கலகலப்புடன் பழகுவார்... அவரோட இருந்தா கவலையே தெரியாது... சிரிக்க வைத்துப் பேசிக்கொண்டே இருப்பார்... அருளின்ர நல்ல குணங்களை சொல்ல நான் எடுத்த உதாரணம் சில வேளையில உங்களுக்கு விபரீதமா... அல்லது அருவெறுப்பாய்க் கூட இருக்கலாம்... ஆனா... என்னைப் பொறுத்த வரையில அதுதான் சிறந்த உதாரணம்... அருளைப்பற்றியோ அல்லது அருளின்ர தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றியோ சொல்றதுக்கு..." என மூச்சு விடாமல் சொன்ன சொல்வி, 

மேசை மீது அவளுக்கு முன்னாலிருந்த கண்ணாடிக் குவளையில் நீரை நிரப்பி மட மடவெனக் குடித்தாள். சொல்வி தொடரும் வரை அங்கே ஒருவர்கூட ஒரு வார்த்தை பக்கத்தில் இருப்பவரிடம்கூடக் கதைக்காமல், சொல்வியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மீண்டும் சொல்வி தொடர்ந்தாள்,
"எனக்கு மாதவிலக்கு நாட்களில் அருள் என்னை எதுவுமே செய்ய அனுமதிப்பதில்லை... எனது அறையில் மீன் தொட்டி கழுவி நீர் மாற்றுவதிலிருந்து எனக்கு உணவு தயாரிப்பது... இன்னும் என்னென்ன நான் செய்வேனோ அவையெல்லாம் அருள் செய்வார்... நான் தொலைக்காட்சி பார்த்தபடி அமர்ந்திருப்பேன்... நான் கேட்டதற்கு அவர் சொன்னார்... 'தங்களது கலாச்சாரம் அப்படியெனவும், மாதவிலக்கான பெண்களை தாங்கள் எந்த வேலையையும் செய்ய அனுமதிப்பதில்லையெனவும்... நீ இந்த நாட்டு பெண் என்பதால் நான் என்னை விட்டுத்தர தயாரில்லையெனவும்' சொன்னார்" என்ற போது, அனைவரும் பிரமித்துப்போய் அமர்ந்திருந்தனர்.

"Is he great guy or what..." என சிறிது நேரம் நிறுத்திய சொல்வி,

"OK...OK... இனி நான் சொல்லப் போற good news... everyone." என மிகுந்த மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாள் சொல்வி...
"நீங்க எல்லாம் என்ர வலது கையில ஒளி வீசும் வைரக் கல்லோட ஒரு 'றிங்கை' (Ring) கண்டிருப்பீங்க... எல்லாரும் சரியா யூகிச்சிருப்பீங்க... இருந்தாலும்;  இந்த இடத்தில நானே சொல்றதில எனக்கும் பெருமை... 
நானும் அருளும் திருமணம் செய்யிறதா முடிவு செய்திருக்கிறம்... This is my engagement ring (இது எனது நிட்சயதார்த்த மோதிரம்...)அருள்தான் போட்டே விட்டான்..." என சொல்லி சொல்வி தனது வலது கையை உயர்த்தி தனது மோதிரத்தை எல்லோருக்கும் காட்டினாள். அப்போது,

"Congratulations... You guys are made for each other... (வாழ்த்துக்கள்... நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எனப் படைக்கப் பட்டிருக்கிறீர்கள்...)" என ஏகோபித்த குரலில் நண்பர்கள் வாழ்த்தினர்.

அருளானந்தனின் நண்பனொருவன்,

"No... Sølvi was made for me... Arul somehow stole from me (இல்லை... சொல்வி எனக்கா உருவாக்கப்பட்டவள்... அருள் எப்படியோ திருடிவிட்டான்...)" என்றான். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். 

"This is the joke of the year... (இதுதான் இந்த வருடத்தின் நகைச்சுவை)" என்றான், இன்னொருவன்.

பரிசுப் பொதிகளைப் பிரித்துப் பார்க்கச் சொன்னார்கள்.

ஒரு பரிசுப் பொதி ஆணுறைப் பெட்டியைக் கொண்டிருந்தது. இன்னொன்று பாலியல் விளையாட்டு அதிரியைக் (Vibrator) கொண்டிருந்தது. மற்றுமொன்று காற்றடித்தால் பொம்மையாகும் பொம்மையைக் கொண்டிருந்தது. அதனோடு
'அவளுக்கு எல்லா நாளும் இயலும் என நினைக்காதே... அவளுக்கு இயலாத நாட்களில் இது உதவும்' என எழுதப்பட்டிருந்தது.

அதை அருளானந்தன் சத்தமாகவே வாசித்தான்... அப்போது, சொல்வியின் முகம் நாணத்தால் சிவந்தது. எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

ஒவ்வொரு பரிசுப் பொருளைப் பிரித்த போதும் அது பாலியல் சம்பத்தப் பட்டதாகவே இருந்தது. ஒவ்வொன்றுக்கும் பெரியதொரு சிரிப்பலை எழுந்து அடங்கியது.

ஒருவாறாக, அந்த வைபவம் நிறைவுற்றது.

அருளானந்தனும் சொல்வியும் வெளியே வந்த போது; அவர்களுக்காக ஒரு வாடகை வாகனம் (Taxi) காத்திருந்தது. சொல்வி எதுவும் சொல்லாமல் ஏறிக்கொண்டு,

"அருள்... வா..." என்றாள்.

"இன்னும் என்ன Surprise  வைச்சிருக்கிறாய்" என்றபடி காரினுள்ளே ஏறினான்.

ஒருவரும் ஒன்றும் சொல்லாமலே கார் (car) ஒடத்தொடங்கியது.

அருளானந்தன் சொல்வியின் கையை எடுத்து முத்தங் கொடுத்து;

"Thank You... for a wonderful party... you are the best... I love you... (ஒரு நல்ல வைபவத்திற்கு நன்றி... நீ மிகச் சிறந்தவள்... நான் உன்னைக் நேசிக்கிறேன்... )" என்று சொல்வியை அணைத்து அவளது உதடுகளில் முத்தமிட்டான்.

வாடகை வாகனம் (Taxi) Best Western Hotelக்கு முன் நின்றது.

சொல்வி காருக்கான கட்டணத்தைக் கொடுக்க முற்படுகையில் அருளானந்தன் தடுத்துவிட்டு; தானே அந்தக் கட்டணத்தைச் செலுத்தினான்.

"இங்க எதுக்கு..." என்றான் அருளானந்தன்.

"வா... சொலறன்..." என்றபடி முன்னே நடந்து சொல்வி, பணிப் பெண்ணிடம் ஒரு அறை திறக்கும் அட்டையைப் பெற்றுக் கொண்டாள்.

இருவரும் அறைக்கு வந்தபோது;

"இதெல்லாம் வீண் செலவு சொல்வி..." என்றான் அருளானந்தன். அப்போது, சொல்வி தனது வலது கையின் மோதிர விரலையும் மோதிரத்தையும் இரகசியமாகப் பார்த்துவிட்டு,

"Arul... don't be silly... (அருள் சிறுபிள்ளைத்தனமாக இராதே...)" என்றவள்.
அருளானந்தனை அணைத்து ஆழமாக முத்தமிட்டு, அவனை இழுத்துச் சென்று கட்டிலில் அமர வைத்துவிட்டு,

"இரு... நான் உடை மாத்திக் கொண்டு வாறன்" என்று சொல்லிக் கொண்டே குளியலறைக்கு நடந்தாள் சொல்வி.

"ஏன் பாத்றூமுக்கு... (Bathroom) எத்தின நாள் எத்தின ஆயிரம் தரம் உன்ன உடுப்பில்லாம பாத்திருப்பன்." எனச் சொல்லி சொல்வியைப் பார்த்தான் அருளானந்தன்.

"ம்... உனக்கு முன்னால உடுப்பு மாத்தலாம் ஆனா நீ என்னை விடமாட்டியே..." என குளியலறை வாயிலில் நின்று சொன்னவள்,

"ஹேய்... அந்த இடத்திலயே இருக்கவேணும்... உள்ளுக்கு வந்தாய்... நடக்கிறது வேற..." எனச் சொல்லிவிட்டு குளியலறை சென்ற சொல்வி குளியலறைக்குத் தாள்பாழ் இட்டுக் கொண்டாள்.

"எப்ப நீ பாத்றூம் கதவைப் பூட்டத் தொடங்கினனீ..."என்றான் அருளனந்தன் மிகுந்த ஆதங்கத்துடன்.

"இந்த விஷயத்தில... நான் என்ன சொல்லி நீ என்ன கேட்டிருக்கிறாய்... உன்ர குணம் தெரிஞ்சதுதானே..." என்றாள் சொல்வி குளியலறையில் இருந்தபடியே...

"I love you... (நான் உன்னை நேசிக்கிறன்...)" என சற்று பலத்த குரலில் சொன்னான் அருளானந்தன்.

"I love you too... (நானும் உன்னை நேசிக்கிறன்...) அதனாலதான் இண்டைக்கு கதவைப் பூட்டின்னான்

அருளானந்தான் கட்டிலின் எதிரே இருந்த தொலைக் காட்சிப் பெட்டியை இயக்கி ஏனோ தானோ எனப் பார்த்துக் கொண்டிருந்தபோது,

குளியலறைக் கதவைத் திறந்து சொல்வி வெளியே வந்தாள். 
சொல்வி, Victoria's Secrets இலிருந்து தருவித்த செந்திராட்சை இரச சிவப்பிலான  பளபளப்பான ஒண்பட்டுத்துணியில்த் தைத்த உள்ளாடையை (lingerie - The Angel Lace & satin slip - ) அணிந்திருந்தாள்.  அது ஏறத் தாழ அவளது தொடைகளை மறைப்பனவாகவும் மிகவும் தளர்ந்தும் இருந்தது.

அருளானந்தன் வைத்த கண் வாங்காமலும் திறந்த வாய் மூடாமலும் சொல்வியையே பார்த்த வண்ணம் இருந்தான். அந்த உள்ளாடையின் பெயருக்கேற்ப அந்த உள்ளாடையில் ஒரு கவர்ச்சி தேவதையாகக் காட்சியளித்தாள் சொல்வி.

சொல்வியோ அருளானந்தனைப் பார்த்துச் சிரித்தபடி இரு முறை வேகமாக சுழன்றபோது, அந்த உள்ளாடை அரைவரை விசிறி போல உயர்ந்து விழுந்தது.

அப்போது, அருளானந்தன் கட்டிலில் துள்ளியெழுந்திருந்து கொண்டு,

"Once more... Once more... Please..." என்றான்.

அருளானந்தனுக்கு ஒரு பறக்கும் முத்தம் தந்த சொல்வி, திரும்பவும் இரு முறை சுழன்றாள்.

"How is it...?" எனக் கேட்டுக் கொண்டே அருளானந்தனிடம் வந்தாள்.

"Soooo Beeeeauuuuutiful... Sooooo sexy... You are an angel... This is the best Birthday gift ever...(மிகவும் அழகாயிருக்கு... மிகவும் கவர்ச்சியாக இருக்கு... நீ ஒரு தேவதை... இதுதான் மிகவும் சிறந்த பிறந்த தினப் பரிசு...)" எனச் சொல்லி சொல்வியின் இடையை தன் இரு கைகளாலும் அணைத்து அவளது வயிற்றில் முத்தமிட்டான்.

அருளானந்தனைக் கட்டிலில் தள்ளிவிட்டு, அவன் மீது ஏறி முத்தமிட்ட சொல்வி எட்டி கட்டில் தலைமாட்டில் இருந்த மின் விளக்கு ஆழியை அமுக்கி மின் விளக்குகளை அணைத்தாள்.   

"ஹேய்... நான் உன்னைப் பாக்கேலாது இருட்டில..." என அருளானந்தன் சொல்ல,

"Show is over... now kissing time...(காட்சி முடிந்துவிட்டது... இப்போது கொஞ்சும் நேரம்...)" என சொன்ன சொல்வி அருளானந்தனை அணைத்து முத்தமிட்டாள்.

மறுநாள்க் காலை பத்து மணியளவில் கண் விழித்த அருளானந்தன்,

"சொல்வி... சொல்வி... எழும்பு... " என அவசரமாக எழுப்பினான்.

"Good morning sweetie..." என அருளானந்தனை அணைத்து முத்தமிட்டாள் சொல்வி.

"ஹேய்... நாம் இப்போ றூமை (Room) விடேல்ல எண்டா... அவங்கள் ரெண்டு நாள் காசு போட்டுடுவாங்கள்..." எனப் பதறினான் அருளானந்தன்.

"Relax... I paid for two days... (ஆறுதாலயிரு... நான் இரண்டு நாட்களுக்கு கட்டணம் செலுத்திவிட்டேன்...)" எனச் சொல்லி அருளானந்தனை இழுத்து இறுக அணைத்தாள்.
"அப்போ... நேற்று விட்ட மிச்சம் இப்ப தொடருவமா..." என ஆவலாகக் கேட்டான் அருளானந்தன்.

"நான் மாட்டனெண்டா சொன்னனான்... " என்றவள்,

"அதுக்கு முன்னம் நான் ஒண்டு கேட்பன் நீ கோவிக்கக் கூடாது..." எனப் பீடிகை போட்டாள் சொல்வி.
"ஹேய்... நானெப்ப உன்னோட கோவிச்சனான்" என்றான் அருளானந்தன்.

"நாங்க ரெண்டு பேரும் தனி ஒரு அப்பாட்மெனற் (Apartment) எடுத்து ரெண்டு பேரும் ஒண்டாயிருந்தாலென்ன..." என சொல்வி முடிப்பதற்குள்

"I love you... I love you... I love you..." எனச் சொல்லி சொல்வியை முத்தமிட்டான்.

"ஹேய்... நான் கேட்டதுக்குப் பதில் சொல்லாம... 'I love you ' எண்டா என்ன அர்த்தம்" என சிரித்தபடி கேட்டாள் சொல்வி.

சொல்விக்கு அதனர்த்தம் விளங்கியிருந்தபோதும், அதை அருளானந்தனின் வாயால் கேட்க வேண்டுமென்ற ஆவல்.

"அதின்ர அர்த்தம்... எனக்கும் விருப்பம் எண்டததுதான்... நானும் இதை உன்னட்ட கேக்க வேணும் எண்டு நிறைய நாள் யோசிச்சனான்..." எனச் சொல்லி சொல்வியின் முகத்தை இரு கைகளாலும் ஏந்தி முத்தமிட்டான் அருளானந்தன்.

"நான் நினைச்சன் உங்கட கலாச்சாரப்படி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்திருக்கிறது பிழையெண்டு சொல்லுவாயெண்டு..." என சொல்வி வியப்புடன் சொன்னாள்.

"எங்கட கலாச்சாரப்படி, நான் ஒரு பொம்பிளையை தொடூறதே பிழை... அவளை நான் கலியாணங் கட்டூறதாயிருந்தாக் கூட, கலியாணத்துக்கு முன்னம் தொடவே ஏலாது... சிலர் தனியச் சந்திக்கிறதையே அனுமதிக்கிறேல்ல... நான் எங்கட கலாச்சாரத்தைத் தாண்டி வந்து, எவ்வளவோ காலமாச்சு..." என்றான் அருளானந்தன்.

"அப்ப உன்ர அப்பா அம்மா..." என சொல்வி தொடருமுன் இடை மறித்த அருளாந்தன்,

"அதுகளெல்லாம் இப்ப என்னத்துக்கு... நாங்க ரெண்டு பேரும் ஒரு அப்பாட்மென்ற் (Apartment) பாப்பம்"என்றான்...

"என்ர பிரெண்ட் (friend Linda) லின்டாவின்ர அப்பாவுக்குச் சொந்தமா ஒரு அப்பாட்மெனற் ற்ரவுணுக்க (Town) ப்றீயா (free) இருக்காம்... றென்ற்றும் (Rent) குறைவு..." எனச் சொல்வி சொல்ல,

"Did I tell you that you are my angel... (நீ என்ர தேவதையெண்டு சொன்னனானா...)" எனச் சொல்லி சொல்வியின் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தான் அருளானந்தன்.



தொடரும்...

Monday 11 May 2015

Saturday 9 May 2015

Tuesday 5 May 2015

படிக்காத மனைவி. - பாகம் 3 - பிறந்த நாள்

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).


பிறந்த நாள்


அருளானந்தன், சொல்வி, ஹன்னா மூவரது பிறந்த நாட்களும் வந்து போனது இவர்கள் நோர்வேயில் இருந்தபோது. 
ஆனால் அவை ஹன்னாவின் வீட்டிலும் சொல்வியின் வீட்டிலும்தான் சில நண்பர்களோடு அருளானந்தனையும் அழைத்துக் கொண்டாடுவார்கள் மிக எளிதாக.
ஒவ்வொரு மாணவரது பிறந்த நாளும் வரும், ஆனால் ஒவ்வொருவரும் தத்தம் வசதிக்கேற்ப நண்பர்களை அழைத்துக் கொண்டாடுவார்கள்... 
அருளானந்தன் தனது அறையில் ஹன்னா, சொல்வியோடு சில நண்பர்களோடும் கொண்டாடுவான். சொல்வியே கேக் (cake) கொண்டு வருவாள். 

எந்தக் கொண்டாடமாக இருந்தாலும் எவ்வளவு எளிமையாக இருந்தாலும் மாணவர்கள் கூடும் கொண்டாட்டமாக இருந்தால்; அங்கே அதிர வைக்கும் இசையும் மது பானமும் முதலிடம் வகிக்கும்.

அருளானந்தன் தினம் தினம் மதுபானம் குடித்து, குடிபோதையில்த் திளைக்கும் குணம் இல்லாவிட்டாலும்; வைபவங்கள், கொண்டாட்டங்களில் மிதமாக மது அருந்தும் குணங் கொண்டவன். அதாவது, நிதானம் தவறாத அளவுக்குக் குடிப்பான். ஹன்னாவைப் போல வெள்ளிக்கிழமையானதும் போத்தலும் கையுமாக ஞாயிறு மாலைவரை திரிவதில்லை. சொல்வியும் ஹன்னாவோடு திரிந்தாலும் அளவோடு எதையும் செய்பவள்.

சுவீடன் வந்த பின்பு ஒரே ஒரு பிறந்த தினம் இருவரும் ஒருவருக்கும் சொல்லாமல், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் வாழ்த்துச் சொல்லிக் கொண்டார்கள்.

ஆனால், அருளனந்தனின் இந்தப் பிறந்த தினத்தை பெரிதாகக் கொண்டாட சொல்வி நினைத்தாள்.
அதற்கும் காரணங்கள் உண்டு.

சொல்வி தனது நிட்சயதார்த்தத்தை அறிவிக்க இது ஒரு சந்தர்ப்பம் என நினைத்தாள்...
அதை விட, இன்னொரு காரணமும் இருந்தது.

ஒரு நாள் தனது சுவீடன் நாட்டுச் சிநேகிதியிடம்; அருளானந்தன் அணிவித்த மோதிரத்தைக் காட்டினாள். அந்த சிநேகிதியின் தந்தை நகைக் கடை வைத்திருக்கிறார். ஆதாலால், அவளுக்கு நகைகளைப் பார்த்து அவற்றை மதிப்பிடத் தெரிந்திருந்தது. அவள்; அந்த சுவீடன் நாட்டுச் சிநேகிதி பார்த்தவுடனேயே அந்த மோதிரம் ஒரு ஐயாயிரம் குறோணருக்கு மேல் வரும். கடைக்கு வந்தால், சரியான மதிப்பீடு சொல்லலாம் என்றதும் சொல்வி ஆச்சர்யத்திலாழ்ந்தாள்.

அந்த மோதிரத்தை சொல்வி ஒரு ஆயிரம் குறோணர் அல்லது அதற்குள்ளேதான் வரும் என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால், என்றுமே அருளானந்தனைக் கேட்டதில்லை.

நகைக்கடையில், அவள் சிநேகிதியின் தந்தை, அந்த மோதிரம் எண்ணாயிரம் தொடக்கம் பத்தாயிரம் வரை விலை பெறும் என்றதும், சொல்வியால் தனது கண்களையும் காதுகளையும் நம்ப முடியாமலிருந்தது.

சர்வ சாதாரணமாக, லஸன்யாவுள் புதைத்து என்னிடம் தந்த அந்த மோதிரத்தின் விலை பத்தாயிரம் குறோணரா என வியந்து போனாள்.

தன்னிடத்தில் அருளானந்தன் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறான் என்பதை அந்த மோதிரம் மட்டுமல்ல, அவளது சிநேகிதியும் சொன்னாள்.

"ஹேய்... அவன் உன்னை உயிருக்குயிரா நேசிக்கிறான்... You are one of the luckiest girl on the earth... (நீ இந்த உலகத்திலிருக்கும் அதிர்ஷ்டக்காரிகளுள் ஒருத்தி...)" என்றாள்.

அருளானந்தனிடம் தனது எண்ணத்தை முதலிலேயே வெளிப்படுத்தினால், அவன் அதை மறுத்து விடக் கூடும்; என்பதால் இரகசிமாகவே எல்லாவற்றையும் செய்தாள் சொல்வி, அவளது சிநேகித, சிநேகிதியருடன்.

அருளானந்தனின் பிறந்த தினத்தன்று, சொல்வி காலையில் எழுந்து அருகே படுத்திருந்த அருளானந்தனை எழுப்பி, அவனது உதடுகளில் ஒரு முத்தம் கொடுத்து,

"Happy Birthday my dearest sweetie...(பிறந்தின வாழ்த்துக்கள் எனதன்பே...)" என்றாள்.
"Oh... Thank You... Thank You..." என்ற அருளானந்தன், அவளை இழுத்து திரும்ப ஒரு முத்தம் கொடுத்தான்.
சொல்வியின் முகத்தை தன் இரு கைகளாலும் ஏந்திப் பிடித்து,

"இண்டைக்கு யூனிவேசிற்றிக்குப் (university) போகம... எங்கயாவது ஊர் சுத்துவமா..." எனக்கேட்டான்.

உடனே, சொல்வி

"ஏன்... " என்றாள் ஒன்றும் தெரியாதவள் போல

"ஹேய்... இண்டைக்கு என்ர பேத்டே (Birthday)... எங்கயாவது போய் ஜாலியா இருந்திட்டு, றெஸ்ரோரன்ற்றில (Restaurant) சாப்பிட்டுட்டு, ஒரு மூவி (movie) பாத்தட்டு வருவம்" என செல்லமாகச் சொன்னான்...

"இண்டைக்கு யூனிவெசிற்றியில எனக்கு நிறைய வேலை இருக்கு. உன்னோட ஊர் சுத்த எனக்கு நேரமில்ல" என்றாள் எது வித சலனமுமில்லாமல் சொல்வி.

சொல்வியை இழுத்து தனக்கு மேல் படுக்க வைத்த அருளானந்தன், தனது இரு கைகளாலும் கால்களாலும் சொல்வியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு,

"நான் விடமாட்டன்... " என்று சொல்லி சொல்வியின் உதடுகளில் முத்தமிட்டான்.

சொல்வி, அருளானந்தனையே வைத்த கண் வாங்காமல் சில நொடிகள் பார்த்திருந்து விட்டு,
"சரி... பின்னேரம்... யூனிவேசிற்றிக்குப் போக வேணும்... நீயும் வர வேணும்... நிறைய றிசேச் (research) வேலை இருக்கு..." என்றாள் சொல்வி.

"OK... OK... பின்னேரம் போவம்... இப்ப இரண்டு பேரும் கொஞ்ச நேரம் இப்பிடியே படுத்திருப்பம்... பிறகு..." என அருளானந்தன் முடிப்பதற்குள்

"ஆ... நான் மாட்டன் அதுக்கு... அ...அ... இப்ப இல்லை..." எனப் பிடிவாதமாக மறுத்தாள் சொல்வி...

"ஹேய்... இண்டைக்கு என்ர பேத்டே... இண்டைக்குக்கூட ஒரு ஸ்பெஷல் (special)... இல்லையா..." எனக் கெஞ்சினான் அருளானந்தன்.

"ஸ்பெஷல்... எல்லாம் இரவுக்கு... இப்ப நல்ல பிள்ளை மாதிரி எழும்பிக் குளிச்சிட்டு வா... வெளியில போவம்..." எனச் செல்லமாகக் அவனது கன்னத்தில்க் கிள்ளி, ஒரு செல்லத் தட்டு தட்டி விட்டு, அருளானந்தனைப் பார்த்து கண் சிமிட்டினாள்.

"இப்பிடியே ஒரு பத்து நிமிஷம் படுத்திருப்பம் பிறகு... எழும்புவம்..." என்றான்.

"ஆ... ஹ... நீ பிறகு ஏதாவது குசும்பு செய்வாய்... நான் விட்டுத் தந்துடுவன்... முடியாது... என்ர செல்லமெல்லே... இரவுக்கு..." என அவனது உதடுகளில் இன்னொரு முத்தமிட்டுவிட்டு, அருளானந்தனின் கைகளை விலக்கி விட்டு எழுந்தாள் சொல்வி.

அருளானந்தன் போர்த்திருந்த போர்வையைப் பார்த்து விட்டு சிரித்தாள் சொல்வி.

"ஹேய்... இவ்வளவு அழகான தேவதை போல ஒரு பெண் பக்கத்தில படுத்திருந்தா, முனிவனா இருந்தாலுங்கூட, உடம்பெல்லாம் சூடேறியிடும்..." என்றான் அருளானந்தன் ஏக்கமாக சொல்வியைப் பார்த்தபடி

"சரி, முனிவரே... போய் நல்ல குளிர் தண்ணீல குளியுங்க... சூடு தணியட்டும்..." என்றாள், சொல்வி மிக நளினத்தோடு.

சொன்ன சொல்வி, குளியலறையை நோக்கி நடந்தாள்.

"நானும் வருவன் உன்னோட குளிக்க..." என்றபடி எழுந்து சொல்வியின் பின்னால் நடந்தான் அருளனாந்தன்.

"அங்க வந்து... தப்பு தண்டா... பண்ணூறேல்ல..." என்றபடி சொல்வி குளியலறைக்குள் நுளைய, அருளானந்தனும் அவளைப் பின் தொடர்ந்தான்.

சொல்வி பல் துலக்கியபடியே பின்னால் வந்த அருளானந்தனை முகம் பார்க்கும் கண்ணாடியில்ப் பார்த்து,

"இப்ப எங்கே போவம்...?" என்றாள்.

அவளது இடையை இரு கைகளாலும் கட்டிப்பிடித்து இறுக அணைத்த அருளானந்தன்,

"முதல்ல... போய் எங்கேயாவது... சாப்பிட்டுட்டு அதுக்குப்பிறகு யோசிப்பம்..." எனச் சொல்லி சொல்வியின் கழுத்தில் முத்தமிட்டான் அருளானந்தன்.

கூச்சலும் கும்மாளமுமாக ஒரு முக்கால் மணி நேரம் தண்ணீரில் குழந்தைகள் போல விளையாடிக் குளித்து முடித்த பின் சொல்வி உடலைத் துவட்டும்போது,

"நீ அப்பிடியே marshmallow (சீமைத்துத்தி) மாதிரி இருக்கிறாய்... உன்னை அப்பிடியே கடிச்சுச் சாப்பிட வேணும் போல கிடக்கு" என சொல்வியைப் பார்த்து அருளானந்தன் சொன்னான்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் அப்படி இருவரும் சேர்ந்து குளிப்பதில்லை, அப்படி இருவரும் சேர்ந்து குளித்தால்; ஒவ்வொரு தின் பண்டத்தின் பெயரைச் சொல்லி சொல்வியைக் கடிப்பதுபோல குறும்பு செய்வது அருளானந்தனின் வழமை.

இருந்தாலும், ஒவ்வொரு முறையும் சொல்வி அதை இரசித்து தனது உடலை அவனது பார்வையிலிருந்து மறைப்பாள். அந்தச் சின்னச் சின்ன சிலுமிசங்களை சொல்வி மிக இரசிப்பாள்.

"ஆ... ஹ... இப்ப என்னைச் சாப்பிட்டா... இரவுக்கு ருசிக்கிறதுக்கு என்ன பண்ணுவாய்...?" என தனது உடம்பை அந்தத் துவாயால் சுற்றிக் கொண்டு அறைக்கு வந்தாள்.

தன்பின்னால் தொடர்ந்து அருளானந்தனும் வருவானெனத் தெரியும்; இருந்தும் துவாயை கதிரையில் போட்டுவிட்டு, தனது மார்புக் கச்சையை (BRA) எடுத்து அணிய முற்படுகையில், அருளானந்தன் வந்து அவளை திருப்பி இறுகக் கட்டியணைத்து, அவளது இளஞ்சிவப்பு உதடுகளில் முத்தமிட்டான்.

இப்படியெல்லாம் தினமும் நடப்பதில்லை... ஏனெனில் அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்து, பல்கலைக் கழகம் செல்பவர்கள். இப்படிப் பட்ட சரச விளையாட்டுக்களுக்கெல்லாம் அன்றாடம் நேரம் கிடைப்பதில்லை.

மாலை வேளையென்றால், உடல் களைப்பால் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்திருந்து தொலைக்காட்சியைப் பார்த்து விட்டு அப்படியே நித்திரைக்குச் சென்று விடுவது வழமை.
உடற்கூறுகளின் ஆதிக்கம் மிகும்போது, அருளானந்தனே சரசத்தில் ஆரம்பிப்பான். ஆனால், சொல்வியால் அன்று இயலாதென்றால் விட்டுவிடுவான்.

சுவீடன் வந்த ஆரம்பத்தில் இருவரும் உடலுறவில் முயல்கள் மாதிரித்தான் இருந்தார்கள். ஆனால் நாள்ச் செல்ல, நாள்ச் செல்ல அது குறைந்து விட்டது.

அவர்கள் இருவரும் படிப்பில் முழுக்கவனமும் செலுத்த ஆரம்பித்த போது, உடலுறவு வாரத்தில் இரு முறை அல்லது மூன்று முறை எனக் குறைந்து போனது.

சனி ஞாயிறுகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை... ஒன்றில் அருளானந்தனின் நண்பர்கள் வெள்ளி மாலையிலிருந்து அட்டகாசம் போடுவார்கள் அல்லது சொல்வியின் சிநேகிதிகள் சொல்வியின் அறையில் அட்டகாசம் போடுவார்கள். ஆக, இவர்களுக்கு இப்படி நேரம் கிடைப்பது எப்போதாவதுதான்.

அனேகமாக, அருளனந்தனின் நணபர்கள் என்றால் தமிழர்தான் அவனது அறைக்கு வந்து கும்மாளமடிப்பார்கள், தமிழ்ப் படங்கள் பார்ப்பார்கள். அப்போதெல்லாம் சொல்வி தனித்துப்போவள் .

எப்போதுமே அருளனாந்தனின் தமிழ் நண்பர்கள் கதையில் தகாத வார்த்தைப் பிரயோகம் சரளமாக இருக்கும். முதலில் சொல்வி இருக்கிறாளென பயந்தார்கள். ஏதாவது தகாத வார்த்தை சொன்னால் நாக்கைக் கடித்துக் கொள்வார்கள். ஆனால் போகப் போக அவர்கள் எல்லா வார்த்தைகளையும் ஒரு கூச்சமும் இல்லாமல் அவள் முன்னிலையிலேயே கொட்டி முழக்குவார்கள். அருளானந்தன் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் சுவீடன் மொழியிலோ அல்லது நோர்வே மொழியிலோ கதைக்கமாட்டார்கள்.

சொல்விக்கு தனது அறையில் இருக்கப் பிடிக்காது. காரணம் இவர்களது அட்டகாசமான சிரிப்பொலியும் கதையும்  அவளை அருளானந்தனின் அறைக்கு வரச் செய்துவிடும்.

அருளானந்தன் இயன்றளவு கதைகளை, நகைச்சுவைத் துணுக்குகளை சொல்விக்கு மொழி பெயர்ப்பான். ஆனால் எல்லாவற்றையும் அல்ல. எல்லாவற்றையும் அவளுக்குச் சொல்ல முடியாமலும் இருக்கும்.

இது சொல்விக்கு பெரியதொரு ஏக்கத்தையும் அச்சத்தையும் உண்டாக்கியது. அதாவது அவள் இலங்கை சென்றால், யாழ்ப்பாணம் சென்றால் அங்கே எல்லோரும் ஆங்கிலம் கதைப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. அதை அருளானந்தனே சொல்லியிருக்கிறான். அவள் யாழ்ப்பாணம் சென்றால், அங்கே வருவோர் போவோர், சொந்த பந்தங்களுடன் உரையாட அவளால் முடியாமல்ப் போய்விடும். அருளானந்தனின் தம்பி - தங்கை, பெற்றோர் கூட அவளுடன் உரையாடக் கஷ்டப் படுவார்கள். இதனால் அவனுடைய உறவுகள் அவளை ஒதுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்தப் பயம் சொல்வியைக் குடைய ஆரம்பித்தது. அவள் அதற்கு என்ன வழி என யோசித்தாள். தமிழ் கற்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற முடிவுக்கு வந்தாள் சொல்வி.

அந்த நேரம் அவள் தமிழ் கற்பதற்கு பாடசாலைகளில் தமிழ்ப் பாடம் என்று ஒன்று இல்லை. இன்று தமிழ்க் கல்விக் கூடங்களே ஆங்காங்கு இயங்குகின்றன.
பல அரச பாடசாலைகளில் தமிழ்ப் பாடமும் ஒன்றாக புகுத்தியிருக்கிறார்கள் இன்று.

ஒரு நாள் பல்கலைக் கழகத்திலிருந்து சொல்வி வந்தபோது, எதிரே அருளானந்தனுக்குப் பழக்கமான அந்த இந்தியப் பெண்ணும் அவளுடைய மகளும் வந்தார்கள். இவர்களிடம் கேட்டால், அவர்களது பிள்ளைகள் தமிழ் கற்கச் செல்லுமிடத்திற்கு தானும் செல்லலாம் என நினைத்து சொல்வி அவர்களிடம் கதைத்தாள்.

அந்த இந்தியப் பெண்; தானேதான் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் தமிழ் கற்பிப்பதாகவும், தான் சொல்விக்கு உதவுவதாகவும் சொன்னாள்.
ஆபத்தில் திரெபதைக்கு உதவிய கண்ணன் போல; சொல்வி அந்த இந்தியத் தமிழ் பெண்ணை நினைத்தாள்.

சொல்வி தமிழ் கற்பதோடு மட்டுமல்லாமல், இந்திய உணவுவகைகளையும் சமைக்கக் கற்றுக் கொண்டிருந்தாள். ஆனால் இந்த விடயம் அருளானந்தனுக்குத் தெரியாது.

சொல்வி, அருளானந்தனை அழைத்துக் கொண்டு கலாசாலையின் ஒரு கூடத்திற்கு வந்தாள்.

"என்ன... ஏன்... இங்க போறாய்?" என்றான் மிகுந்த குழப்பத்துடன்.

"மொனிக்காவிட்ட கொஞ்ச றீடிங்ஸ் (Readings - Data - தரவுகள்) எடுக்க வெணும்... எல்லாம் இந்த றூம்ல (room) வைச்சிருக்கிறன் எண்டவள்... சும்மா கத்தாமல் வா..." எனச் சொல்லிக் கொண்டே, சொல்வி அந்தச் சிறிய மாணவர் சேர்ந்திருந்து படிக்கும் அறையைத் திறந்தாள்.

"ஐயோ... இருட்டாயிருக்கு..." என சொல்லிக் கொண்டு சொல்வி பின்னே வர;

"சுவிச் (swich) கதவுக்குப் பக்கத்திலதானே இருக்கு..." எனச் சொல்லியபடி அந்த அறையினுள் நுளைந்து, அந்த மின் விளக்குகள் ஆளியை அமுக்கினான் அருளானந்தன்.

வெளிச்சம் வரும் வரை காத்திருந்த அருளானந்தனதும் சொல்வியினதும் சிநேகித சிநேகிதியர் ஒரு சேர

"SURPISE!!" என கோஷமிட்டனர். பின்னர்...
"HAPPY BIRTH DAY TO YOU!!!" என கோஷித்தனர்.

அருளானந்தன் திகைத்துப் போய் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றாலும், சுதாகரித்துக் கொண்டு;

"THANK YOU... THANK YOU..." எனக் கூறிக் கொண்டு, மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் வலது கையை வைத்து தலை குனிந்து அவர்களது வாழ்த்துக்களை ஏற்றான்.

பின்னர், அவன் பின்னால் புன்னகையோடு நின்ற சொல்வியைத் திரும்பிப் பார்த்து;

"இதெல்லாத்துக்கும் காரணம் நீதானே... வா... உனக்கு இருக்கு... உனக்கு..." என சொல்வியைப் பார்த்து சொல்லும் போதே,

"Happy Birth Day To You Arul..." என்றபடி நண்பர்கள் வந்து பரிசுப் பொருள்களைக் கொடுக்க, பிறந்த நாள் கொண்டாட்டம் ஆரம்பமானது.

விருந்துண்ணும்போதே, ஒவ்வொருவராக நண்பர்கள் அருளானந்தனைப் பற்றியம் சொல்வியைப் பற்றியும் சிலேடையாகவும் நகைச்சுவையாகவும் பேசினர். பின்னர் வாழ்த்தினர்.

இடையில் சொல்வி எழுந்து,

"Happy Birthday to You Arul! (இனிய பிறந்ததின வாழ்த்துக்கள் அருள்!!) எனக்கு அருளானந்தனோடு கடந்த ஐந்து வருடங்களாக பழக்கம் இருந்து வருகிறது..." என சொல்வி தொடருமுன்...
"Come On... We know that... Tell us some juicy stuff... (இங்க... பார்... உதெல்லாம் எங்களுக்குத் தெரிஞ்சது... ஏதாவது கிளுகிளுப்பாய்ச் சொல்லு...)" என்றது ஒரு குரல் அப்போது ஒட்டு மொத்தமாக எல்லோரும்,
"Yeah... tell us something juicy... (ஒ,.. ஏதாவது கிளுகிளுப்பாய்ச்சொல்லு...)" என்றனர்.

சொல்வியின் முகம் நாணத்தால் சிவந்தது. இருந்தும் சளைக்காதவளாய்

"Come On... guys... It is our private... Isn't it... Come On...(இங்க பாருங்க... நண்பர்களே... அது எங்களோட அந்தரங்கம்... இல்லையா... )" என அருளானந்தனையும் பார்த்து ஏனையோரையும் பார்த்து நாணத்தோடும் சிவந்த முகத்துடனும் சொன்னாள் சொல்வி.

"We didn't ask anything on the bed... We ask something other than that... (நாங்கள் கட்டில்ல நடக்கிறதைக் கேட்கேல்ல... அதை விட வேறேதாவது...)" என்றது ஒரு பெண் குரல்.

"Come On... You girls always talk very intimate stuff... Come On... some outlines... Please Sølvi give us some cookies... (இங்க பாருங்க... நீங்க பெண்கள் எப்பவும் மிக அந்தரங்கமானவை கதைப்பீர்கள்... தயவு செய்து சொல்வி கொஞ்சம் கோடிட்டு காட்டு... ஏதாவது... சின்னச் சின்ன இனிப்புத்துண்டுகள்... தயவு காட்டு...)" என்றான் அவர்களில் ஒருவன்.

இப்போதும் சொல்வி ஏதாவது அவர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல வேண்டும் என எதிர்ப்பார்த்தார்கள்.

அருளானந்தன் சிரித்தபடி செந்திராட்சை இரசத்தை உருசித்துக் கொண்டு, 'மாட்டிக்கிட்டியா... நல்லது என்னட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா... இதுக்கெல்லாம் நான் உடன்பட்டிருக்கவே மாட்டன்...' என நினைத்துக் கொண்டான்.
சொல்வியோ விட்டுக் கொடுக்காமல்...
"நண்பர்களே... நீங்கள் எதுவேணும் எண்டாலும் அருளைக் கேளுங்கள்...  " என அருளானந்தனைப் பார்த்து ஒரு சிரிப்புடன் சொன்னாள் சொல்வி.

"No... No... இல்லை... இல்லை... அவன் எதுவும் எதைப் பற்றியும் எங்களுக்குச் சொல்லமாட்டான்... அவன் சொன்னான் "நான் சொல்விக்கு மதிப்பும் மரியாதையும் தருகிறேன். ஆதலால் நான் சொல்வி சம்பந்தப்பட்ட எதுவும் சொல்ல மாட்டேன்" என்று விட்டான்... please Sølvi..."
என்றான் ஒரு நண்பன்.

"Oh... so... sweeeet..." என்ற சொல்வி குனிந்து, அருளானந்தனின் கழுத்தைத் தன் வலது கையால் மிக ஆதரவாக அணைத்து அருளானந்தனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.  பின்னர் நிமிர்ந்து,

"அருளானந்தனிடம் எனக்குப் பிடித்ததது நிறைய இருக்கிறது. அவற்றில் இதுவும் ஒன்று... நான் உண்மையில்க் கொடுத்து வைத்தவள். " எனும் போது, அனைவரும்

"He is a great guy..." என்றார்கள். அருளானந்தன் சிரித்தபடி எழுந்து தலைதாழ்த்தினான்.

"OK... Sølvi... tell us something..." என்றது அதே பழைய குரல்.

"OK... OK... " என்று சொல்வி ஆரம்பித்தபோது, அனைவரும் அமைதியாயினர். சொல்வியின் வாயிலிருந்து முத்துக்கள் உதிரப் போகின்றன என்பது போல அனைவரும் அவளையே பார்த்தார்கள்.

"அருள் ஒரு நல்ல காதலர்...(Arul is a great lover...)" எனும் போது,
"படுக்கையிலா... அல்லது... பொதுவாகவா...?" என்றான் ஒருவன்
"படுக்கையிலும்... பொதுவாகவும்..." என்று சொல்வி சொல்லும் போதே சொல்வியின் முகம் செஞ்சாந்து பூசிக் கொண்டது. சொல்வி முகத்தை மூடிக் கொண்டாள்.
"Oh... Oh... Ha..." என அங்கேயிருந்த பெண் மாணவிகளெல்லாம் ஆச்சர்யப்பட்டு ஏக்கப் பெருமூச்செறிந்தனர்.

"வா...  தனிய... உன்னைக் குடைஞ்சு, எல்லா விஷயங்களையும் எடுக்கிறன்..." என்றாள் சொல்வியின் சிநேகிதி ஒருத்தி.
சொல்வி வெட்கத்தோடு அவளைப் பார்த்தாள். அனைவரும் சொல்வியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தன்னைச் சுதாகரித்தவளாக சொல்வி தொடர்ந்தாள்.


தொடரும்...

Friday 1 May 2015