Tuesday 25 May 2010

துணை...


கண்ணுக்குத் துணையுண்டு;
காதிரண்டு உண்டு;
எண்ணுக்கும் எழுத்துண்டு;
எதிலுமே துணையுண்டு;
விண்ணுக்கு நிலவுண்டு;
நிலவோடு கதிருண்டு;
மண்ணுக்கும் மரமுண்டு; - என்
மனதுக்கு ஏதுண்டு...?

ஆழிக்கு அலை போல,
அலையோடு நுரை போல,
நாலோ டிரண்டு போல,
நாளோ டிரவு போல,
இரவோடு நிலவு போல,
நிலவோடு மேகம் போல,
வாழ்வோட வர வேண்டும்
வகையான துணை யொன்று...!

Saturday 22 May 2010

Help where it needed...


Yesterday 210510, a Somali family and I were at Oslo airport to send off their brother to Finland.
On the way back at this tollbooth it happened.

I always pay in cash at these booths. Once I had a problem with these subscription paid bricks pasted on the car windsheild, so I decided to carry or put enough changes in my car.

When we came into one of these tollbooths, a reasonably new car was parked in front of me. So I waited.
I saw so many drivers do not get ready for the toll pay. They park their car in front of the tollbooth and look for change in their car or wallet...

In this case also, I am very different from others. When I see the tollbooth sign and reduced speed limit sign, I take the correct amout of change and near to the post with a plastic basket, I put my hand out of window and then slowly reach the basket, and I steer my car closed to it. My hand should be over the basket. So I need not to miss any of coins on the road.

I saw so many drivers throw the coins at the basket, some hit the post and fall all over the road. Furthermore, some drivers get out of the car and they search for the missed coins on the road and under the car.

Yesterday also, I took the correct amout of money,  put my hand out of window and waited for the car parked in front of me.
So I waited. But back of me a pile of 10 cars pilled up and were waiting. One of them were very hurry I believe, honked.

So, slowly a woman aged about 75 years, came out of that new car. She walked along side of her car to get help from the personal who was sitting on the otherside booth. Futhermore, she should cross over the other lane also.
If she drive through the red light then she should pay the penalty of Kr. 300.

When she came near to my car to cross the lane, I said "vær så god" in Norwegian, which means in this case " here it is". To get her attension to me.

She also looked at me and I told her, " bruk denne" means, "use this".

She did not expect this and said "Oh thank You so much" in English. And she added, "Jeg glemt vekslene... så takkenemlig..." in Norwegian. - I forgot changes... so greatfull -.

I told her "Ikke tenke på så mye, bare bruk, bilister må hjelpe hverandre" in Norwegian. - Not to think so much, just use it, drivers should help eachother-.

She held my hand with her both hands and took the change of Kr.: 20,-  and said "Oh thank you thank you very much" in English, and she used the change that I gave her.

Our conversation was a few words, but I felt those words she said, came from her heart and I saw the emotion at her face. When she held my hand with her both hands, I felt those hands also thanked me.

I felt my self so wonderful. I helped an old Norwegian lady at the right time and right place. I think that she avoided unnecessory honking from other drivers.

Always, I think why am I here on this planet, what have I done all these years... Just waste of time and so on...
But yesterday, I thought this is why I am here...!

Thursday 20 May 2010

காவிகளும் எண்ணிகளும்...

காவிகள்  Vectors...
பத்து மாதம் அன்னை காவி,
பெற்ற பின்னர் தந்தை காவி - நல்ல
முத்து என்று பெயரும் சூடி,
கற்று வளர்க என்று ஆசி - பல
தந்து விட்ட தந்தை காவி!
பெற்றெடுத்த அன்னை காவி!!
நித்தம் வந்து கவலை மோதி,
சித்தம் கலங்கி சிந்தை யழிய - பாதி
பித்தம் பிடித்துப் புவியி லலையும் - மீதி
கற்று வந்து பட்டம் காவி,
சுற்று கின்ற உலகின் மீது - சூழல்
சுற்ற மென்ப வற்றை ஆதி
தொட்டு அந்தமாக மீதி என்று
விட்டி டாமல் முற்றுமுழுக்கக் கட்டிக் காவி,
சுற்று கின்ற மனிதன் காண்ப - தெல்லாம்
காவிகள்! காவிகள்!! காவிகள்!!!

பௌதிகவியலில் ஒரு பொருள்; திணிவு, திசை, வேகம் என்பவற்றைக் கொண்டிருந்தால் அதை ‘காவி‘ என்பர். அதேபோல, ஒரு போருள் திணிவை மட்டும் கொண்டதாக இருந்தால் அதை எண்ணி என்பர்.
ஆனால், இந்த ‘காவி‘ என்ற சொல்லுக்கு தமிழில் பல அர்த்தங்கள் உள்ளன. அவற்றுள்
சில: காவிவஸ்திரம்
       காவி நிறச்சாந்து
       பொருட்களைச் சுமப்பவர்.
அன்னையும்  பத்துமாதம் சுமந்துதானே பிள்ளையைப் பெற்றெடுக்கிறாள். அன்னை ஆரம்பித்து வைக்கிறாள். பின்னர் எல்லோருமே ஏதோ ஒன்றை வாழ்நாள் முழுவதும் சுமந்தேயாக வேண்டிய நிலையிலிருக்கிறோம்.  நினைவுகளும் ஒரு சுமைதான்.
ஆக அனைவரும் காவிகள்.
இவ்விதம் பொருளுருணர்ந்தே நான் எனது பௌதிகவியல் குறிப்புப் புத்தகத்தில் இதை எழுதி வைத்திருந்தேன்...
இதைப்பார்த்த எனது சக பள்ளித் தோழி ஒருத்தி - அவளும் கவிதை எழுதுவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவள் - காவி என்று வருமிடமெல்லாம் 'எண்ணி' என எழுதிவிட்டுத் தந்தாள்...

எண்ணிகள் Counters...

பத்து மாதம் அன்னை எண்ணி,
                    (மாதங்களை அன்னை எண்ணி)
பெற்ற பின்னர் தந்கை எண்ணி - நல்ல
                    (பெற்ற பிள்ளைகளை தந்தை எண்ணி)
முத்து என்று பெயரும் சூடி -
கற்று வணர்க என்று ஆசி - பல
தந்து விட்ட தந்தை எண்ணி!
பெற்றெடுத்த அன்னை எண்ணி! - (பெற்றெடுத்த குழந்தைகளைப் பற்றியே நிதமும் யோசிப்பவர்கள்) இங்கு
கற்று வந்து பட்டம் எண்ணி
                    (கற்றதனால் வந்த பட்டங்களை எண்ணி)
சுற்று கின்ற உலகின் மீது - சூழல்
சுற்ற மென்ப வற்றை ஆதி
தொட்டு அந்த மாக மீதி என்று
விட்டிடாமல் முழுக்க எண்ணி -
                    (சூழலிலுள்ளவற்றைப் பற்றி எண்ணிப்பார்த்து)
சுற்று கின்ற மனிதன் காண்ப தெல்லாம்
எண்ணிகள்! எண்ணிகள்!! எண்ணிகள்!!
                    (எண்ணிகள்: சிந்தனையில் ஆழ்ந்திருப்போர்)

ஒரு சொல்லை மட்டும் மாற்றி என்னை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டாள் அந்தக் கவிஞை...

எனது நினைவுகளில் மிகவும் சுவையானவை அந்தப் பள்ளி நாட்கள்...

Wednesday 12 May 2010

மலர்...

மலருக்கு மலர் தாவும்
வண்டுதான்
மனதுக்கு மனது இதுவும்
பொருந்தும்தான்...

மலருக்கும் பறக்க
இறக்கை தரின்
மலரது மனதை
அறிவது சுலபம்...

மலரும் தன்
அழகை, மணத்தை
கொண்டே மயக்கும்
வண்டை...

மலரும் அலையும்
மனத்தை
மாறா தடக்கும்
குணத்தை
கொண்டதில்லை

மலரது குணமும்
வண்டினைப்போல
மாறும் தன்மை
கொண்டதே...!

கனவும் காணும்
கலகம் செய்யும்
மலரின் மனமும்...!

Saturday 8 May 2010

தங்கமீன்கள்...


இந்தத் தங்க மீன்களுக்கு இன்று வயது நான்கு மாதங்கள் ஆகின்றன...

2009ம் ஆண்டு மார்கழி மாதம் 31ம் திகதி இரவு ஏறத் தாழ எட்டு மணிக்கு, இந்தத் தங்க மீன்களின் தாய் முட்டைகளை இடத்தொடங்கியது...
அந்த நேரம் வாணவேடிக்கைகளை பார்ப்பதற்காக வெளியே செல்ல ஆயத்தமான நான்...
உடனேயே அந்த முட்டைகளை அப்புறப்படுத்தத் தொடங்கினேன்.
நான்கு முதல் ஐந்து மணிநேரம் தொடர்ச்சியாக முட்டைகளை வேறொரு தொட்டியில்ச் சேர்த்து பெற்றோரும் மற்றோரும் முடிந்தளவு முட்டைகளை உண்ணாதவாறு செய்து கொண்டிருந்தேன்.
இருந்தாலும் முடிந்தவரை அந்தத் தொட்டியில் இருந்த அனைத்து மீன்களும் அந்தத் தங்க மீன் முட்டைகளை உண்டு இறுதியில்க் களைத்திருந்தன...

புது வருடம் பிறந்து கொண்டிருக்கும் வேளை, இவை முட்டை இடாதா என மூன்று வருடங்களாக அங்கலாய்த்த எனக்கு, எண்ணிலடங்காத அளவுக்கு முட்டைகளைத் தந்து என்னை சந்தோஷத்திலாழ்த்தின அந்தத் தங்க மீன்கள்.

மூன்று வருடங்களாக அமைதியாக என்னுடன் வாழ்ந்து வந்த அந்தத் தங்க மீன்களுக்குள் ஏதோ ஒன்று உந்த அவை காதல் வசப்பட்டு, என்னையும் பரவசத்திலாழ்த்தின...

ஆனால் அந்தச் சந்தோஷம், அந்தப் பரவசம் நிலைக்கக் கூடாதென விதி நினைத்தது.

முட்டை உண்ட களைப்பில் மீன்கள் ஒதுங்கி இருக்கின்றன என்றே நினைத்துப் படுக்கைக்குச் சென்றேன்... ”உண்ட களை தொண்டர்க்கும் உண்டு” என்பார்களே அதுபோல...

ஆனால் அடுத்த நாளும் தங்க மீன் முட்டை உண்ட அத்தனை மீன்களும் மந்த நிலையிலேயே இருந்தன...
நானும் பார்த்துக் கொண்டே இருந்தேன்... ஓராம் திகதி இரவு அந்த அகோரம் நிகழ்ந்தது...
தங்க மீன் முட்டைகளை அளவுக்கதிகமாக உண்ட அனைத்து மீன்களும் - இன்று நான்கு மாத நிறைவைக் கொண்டாடும் இந்த தங்கமீன்களின் பெற்றோரும் உட்பட- மெல்ல அசைவின்றி மிதக்கத் தொடங்கின...
சில மணித் துளிகளில் அனைத்து மீன்களும் இயக்கமில்லாத சடமாக மிதந்து நீரினசைவுடன் அசைந்து கொண்டிருந்தன...
மீன் முட்டைகளை உண்டால் (அளவுக்கதிகமாக) மீன்கள் சாகுமா என்ற கேள்வி மனதைக் குடைந்தெடுத்தது.

இந்த மீன்களின் பெற்றோர் மிகவும் வளர்ந்த மீன்கள், வழமையான இறுதி யாத்திரைக்கு அவை பொருத்தமில்லை. அதாவது கழிவறையில் கழிவாசன (commode) வழியாக அப்புறப்படுத்துவது... 

அதில் சங்கடமென்ன வெனில் கழிவாசனத்தில் உள்ள துளையிலும் பார்க்க பெரியவை எனது தங்கமீன்கள். அதைவிட கழிவாசன இறுதியில் இரண்டு வளைவுகள் உள்ளன. அந்த வளைவுகளிலும் பார்க்க நீளமானவை எனது தங்கமீன்கள். ஆக, கழிவறை இறுதி யாத்திரைக்கு நான் அவற்றைத் தயார் படுத்த வேண்டும், அதாவது துண்டங்களாக வெட்ட வேண்டும்.

நான் கொடுத்த எதையும் ஆகாரமென உண்டு, நான் உறங்கும் போது உறங்கி, நான் கண் விழிக்கும் வேளை அவையும் கண் விழித்து, நான் வேலையிலிருந்து வீடு திரும்பும் போது ஆவலோடு தொட்டிக் கண்ணாடி அருகே வந்து என்னைப் பார்த்து கண் சிமிட்டி என்னைப் பரவசப்படுத்திய அந்தத் தங்கமீன்களை நானே கூறு போடுவதா.... நினைக்கவே மனம் தாங்கமுடியவில்லை.

ஆகவே உரிய முறையில் அவற்றுக்கு எனது வீட்டின் பின்புறமுள்ள புற்றரையில் ஒரு கிடங்கு வெட்டி அந்த மூன்று தங்கமீன்களையும் அவற்றோடு போட்டி போட்டுக் கொண்டு தங்கமீன் முட்டைகளை உண்டு உயிர் நீத்த எனைய மீன்களையும் (ஐந்து வாள் வால்மீன்கள் (sword tail fish)) சேர்த்து அடக்கம் செய்து விட்டு தங்கமீன் முட்டைகளை நோட்டம் விட ஆரம்பித்தேன்.

நான்கு ஐந்து நாட்களாக எந்தவொரு அசைவுமிருக்கவில்லை. ஆனால் ஆறாவது நாள் ஒரு சிறு அசைவைப் பார்த்தேன். இதோ இவைதான் நான் பார்த்த முதல் மூன்று தங்கமீன் குஞ்சுகள்...
அடுத்தநாள் எண்ணுக்கடங்காத அளவு தங்கமீன் குஞ்சுகளின் அசைவு, என்னை விட்டுப் போன சந்தோஷத்தை மீளக் கொணர்ந்தன...



இவைதான் மூன்று வருடங்களாக என்னுடன் வாழ்ந்த நான்கு தங்கமீன்களும்...
இவற்றில் ஒரு பெண் தங்கமீன் இன்றும் என்னுடன் வாழ்ந்து வருகிறது...

கறுப்பும் மஞ்சளுமாக கர்வமாக நீந்திச் செல்கிறதே... அந்த மீன்தான் தாய்... 
எமது தமிழ்ப் பெண்களுக்கு இருக்குமே ஒரு கர்வம், அது போல எப்போதும் அந்தத் தங்கமீனிடம் ஒரு கர்வத்தை பார்க்கலாம்...
இதற்கு மேலே உள்ள படத்தில் சிவந்த நிறத்தில் உடலும் அகங்காரமான வெண்ணிறவாலும கொண்டிருக்கிறதே... அதுதான் தந்தை...

மேலே உள்ள படத்தை (auch missed என எழுதியிருக்கும் படம்) எடுப்பதற்கு முன் அவையிரண்டும் ஓடிப்பிடித்து... இல்லை இல்லை நீந்தித் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தன. சிறிது நேரம் நான் தூர இருந்து பார்த்து இரசித்துக் கொண்டிருந்தேன். பின்னர் சில படங்களை எடுக்கும் போது, அவை ஒன்றுக்கொன்று முத்தங் கொடுப்பது போல இருந்தது. அந்த முத்தக் காட்சி படமாகப் பதிவு செய்ய நானும் இயன்றளவு முயற்சி செய்தேன். ஆனால் கிடைத்தது இந்தப் படம்தான். அதனால்த்தான் படத்திலேயே (Auch missed) என எழுதி வைத்தேன்.

கல்லுக்குள்ளும் ஈரம் என்பது போல துக்கத்திலும் ஒரு சந்தோஷம் என அவைகளின் வாரிசுகளை அந்தத் தங்கமீன்களின் நினைவுகளோடு பார்த்துப் பராமரித்து வருகிறேன்.

Sunday 2 May 2010

உயிர்க் காதலுக்காக...

உயிர் இருந்த போது
உணர்வே இல்லை.
உணர்வு வந்த போது
உயிரான உன்னைக்
காணவில்லை...

உயிரே இல்லாத போது
உணர்வதால் யாதுமில்லை
உணர்வே இல்லாத போது
உயிராய் நீயிருந்திருந்தால்
உள்ளத்தில் நிறைந்திருப்பேன்...

கண்களே இல்லாதவனுக்கு
கண்ணீர் சுவை, சுமை இவை
தெரியுமா??
கண்களாய் நீ இருந்தபோது
காதலின் சுமை தெரியவில்லை...
கனவாய் நீ மறைந்த போது
கண்ணீர் கூட சுடுவதைப்-
புரிந்து கொண்டேன்...

கருணையே இல்லாமல்
என்னை நீ எடுத்துக் கொண்டாய்...
காரணமே சொல்லாமல
உன்னை நீ மறைத்துக் கொண்டாய்...
உருவமே தெரியாமல்
கண்ணை நீ மறைத்துக் கொண்டாய்...
கருணையே இல்லாமல்
என்னை நீ திட்டுவதையும்
உயிரில்லாமல் உணர்வில்லாமல்
ஒளியில்லாமல்ப் போனாலும்
மன்னிப்பேன்!
மறப்பேன்!!
நம் உயிர்க்காதலுக்காக...



இந்தக் கவிதை 'இசைத்தென்றல்' என்ற இணையத்தளத்தில் 05.07.2005 ல் எழுதியிருந்தேன்.

இன்றைய 'இசைத்தென்றல்' இணையத்தளத்தில் அன்று பதிவான கவிதைகள் எல்லாவற்றையுமே நீக்கி விட்டார்கள்.

எனது கவிதைகளுக்கு மீண்டும் இங்கே உயிர் கொடுக்கிறேன்...

நினைவு பிறந்தது

அன்பு பிறந்தது
அன்னை மடியில்,
பண்பு பிறந்தது
தந்தை அணைப்பில்...


அறிவு பிறந்தது
ஆசா னிடத்தில்,
உறவு பிறந்தது
உன் னிடத்தில்...


கனவு பிறந்தது
கண் மூடுகையில்,
நினைவு பிறந்து
நிகழ் விடத்தில்...