Friday 2 July 2010

இன்பவடு...

இன்பவடு இதயத்தில் நினைவுகள்
இரத்தத்தில் சிவப்பணு;

இதயத் துடிப்பலைகள்
இமயத்தையும் கடந்திடும்;

இதய இன்ப வடுவோ
துடிப் படங்கும் வரை;
உடற் கூறு ஓடி யாட
இதயம் வலி தாங்கும்;

எங்கோ ஒரு மூலையில்
ஏதோ ஒன்று நெருடும்;

காலக் கோலங்களில்
அடிபட்டுப் போகும்
அகல விரியும்
ஆழ்கடல் பிரிக்கும்
ஆனாலும்
இன்ப வடு
வருட வருட
தரும் சுகமே
ஆயுள் வரைக்கும்...

No comments:

Post a Comment

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...