Wednesday 12 May 2010

மலர்...

மலருக்கு மலர் தாவும்
வண்டுதான்
மனதுக்கு மனது இதுவும்
பொருந்தும்தான்...

மலருக்கும் பறக்க
இறக்கை தரின்
மலரது மனதை
அறிவது சுலபம்...

மலரும் தன்
அழகை, மணத்தை
கொண்டே மயக்கும்
வண்டை...

மலரும் அலையும்
மனத்தை
மாறா தடக்கும்
குணத்தை
கொண்டதில்லை

மலரது குணமும்
வண்டினைப்போல
மாறும் தன்மை
கொண்டதே...!

கனவும் காணும்
கலகம் செய்யும்
மலரின் மனமும்...!

No comments:

Post a Comment

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...