Sunday 2 May 2010

உயிர்க் காதலுக்காக...

உயிர் இருந்த போது
உணர்வே இல்லை.
உணர்வு வந்த போது
உயிரான உன்னைக்
காணவில்லை...

உயிரே இல்லாத போது
உணர்வதால் யாதுமில்லை
உணர்வே இல்லாத போது
உயிராய் நீயிருந்திருந்தால்
உள்ளத்தில் நிறைந்திருப்பேன்...

கண்களே இல்லாதவனுக்கு
கண்ணீர் சுவை, சுமை இவை
தெரியுமா??
கண்களாய் நீ இருந்தபோது
காதலின் சுமை தெரியவில்லை...
கனவாய் நீ மறைந்த போது
கண்ணீர் கூட சுடுவதைப்-
புரிந்து கொண்டேன்...

கருணையே இல்லாமல்
என்னை நீ எடுத்துக் கொண்டாய்...
காரணமே சொல்லாமல
உன்னை நீ மறைத்துக் கொண்டாய்...
உருவமே தெரியாமல்
கண்ணை நீ மறைத்துக் கொண்டாய்...
கருணையே இல்லாமல்
என்னை நீ திட்டுவதையும்
உயிரில்லாமல் உணர்வில்லாமல்
ஒளியில்லாமல்ப் போனாலும்
மன்னிப்பேன்!
மறப்பேன்!!
நம் உயிர்க்காதலுக்காக...



இந்தக் கவிதை 'இசைத்தென்றல்' என்ற இணையத்தளத்தில் 05.07.2005 ல் எழுதியிருந்தேன்.

இன்றைய 'இசைத்தென்றல்' இணையத்தளத்தில் அன்று பதிவான கவிதைகள் எல்லாவற்றையுமே நீக்கி விட்டார்கள்.

எனது கவிதைகளுக்கு மீண்டும் இங்கே உயிர் கொடுக்கிறேன்...

No comments:

Post a Comment

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...