Tuesday 25 May 2010

துணை...


கண்ணுக்குத் துணையுண்டு;
காதிரண்டு உண்டு;
எண்ணுக்கும் எழுத்துண்டு;
எதிலுமே துணையுண்டு;
விண்ணுக்கு நிலவுண்டு;
நிலவோடு கதிருண்டு;
மண்ணுக்கும் மரமுண்டு; - என்
மனதுக்கு ஏதுண்டு...?

ஆழிக்கு அலை போல,
அலையோடு நுரை போல,
நாலோ டிரண்டு போல,
நாளோ டிரவு போல,
இரவோடு நிலவு போல,
நிலவோடு மேகம் போல,
வாழ்வோட வர வேண்டும்
வகையான துணை யொன்று...!

No comments:

Post a Comment

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...