Thursday 20 May 2010

காவிகளும் எண்ணிகளும்...

காவிகள்  Vectors...
பத்து மாதம் அன்னை காவி,
பெற்ற பின்னர் தந்தை காவி - நல்ல
முத்து என்று பெயரும் சூடி,
கற்று வளர்க என்று ஆசி - பல
தந்து விட்ட தந்தை காவி!
பெற்றெடுத்த அன்னை காவி!!
நித்தம் வந்து கவலை மோதி,
சித்தம் கலங்கி சிந்தை யழிய - பாதி
பித்தம் பிடித்துப் புவியி லலையும் - மீதி
கற்று வந்து பட்டம் காவி,
சுற்று கின்ற உலகின் மீது - சூழல்
சுற்ற மென்ப வற்றை ஆதி
தொட்டு அந்தமாக மீதி என்று
விட்டி டாமல் முற்றுமுழுக்கக் கட்டிக் காவி,
சுற்று கின்ற மனிதன் காண்ப - தெல்லாம்
காவிகள்! காவிகள்!! காவிகள்!!!

பௌதிகவியலில் ஒரு பொருள்; திணிவு, திசை, வேகம் என்பவற்றைக் கொண்டிருந்தால் அதை ‘காவி‘ என்பர். அதேபோல, ஒரு போருள் திணிவை மட்டும் கொண்டதாக இருந்தால் அதை எண்ணி என்பர்.
ஆனால், இந்த ‘காவி‘ என்ற சொல்லுக்கு தமிழில் பல அர்த்தங்கள் உள்ளன. அவற்றுள்
சில: காவிவஸ்திரம்
       காவி நிறச்சாந்து
       பொருட்களைச் சுமப்பவர்.
அன்னையும்  பத்துமாதம் சுமந்துதானே பிள்ளையைப் பெற்றெடுக்கிறாள். அன்னை ஆரம்பித்து வைக்கிறாள். பின்னர் எல்லோருமே ஏதோ ஒன்றை வாழ்நாள் முழுவதும் சுமந்தேயாக வேண்டிய நிலையிலிருக்கிறோம்.  நினைவுகளும் ஒரு சுமைதான்.
ஆக அனைவரும் காவிகள்.
இவ்விதம் பொருளுருணர்ந்தே நான் எனது பௌதிகவியல் குறிப்புப் புத்தகத்தில் இதை எழுதி வைத்திருந்தேன்...
இதைப்பார்த்த எனது சக பள்ளித் தோழி ஒருத்தி - அவளும் கவிதை எழுதுவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவள் - காவி என்று வருமிடமெல்லாம் 'எண்ணி' என எழுதிவிட்டுத் தந்தாள்...

எண்ணிகள் Counters...

பத்து மாதம் அன்னை எண்ணி,
                    (மாதங்களை அன்னை எண்ணி)
பெற்ற பின்னர் தந்கை எண்ணி - நல்ல
                    (பெற்ற பிள்ளைகளை தந்தை எண்ணி)
முத்து என்று பெயரும் சூடி -
கற்று வணர்க என்று ஆசி - பல
தந்து விட்ட தந்தை எண்ணி!
பெற்றெடுத்த அன்னை எண்ணி! - (பெற்றெடுத்த குழந்தைகளைப் பற்றியே நிதமும் யோசிப்பவர்கள்) இங்கு
கற்று வந்து பட்டம் எண்ணி
                    (கற்றதனால் வந்த பட்டங்களை எண்ணி)
சுற்று கின்ற உலகின் மீது - சூழல்
சுற்ற மென்ப வற்றை ஆதி
தொட்டு அந்த மாக மீதி என்று
விட்டிடாமல் முழுக்க எண்ணி -
                    (சூழலிலுள்ளவற்றைப் பற்றி எண்ணிப்பார்த்து)
சுற்று கின்ற மனிதன் காண்ப தெல்லாம்
எண்ணிகள்! எண்ணிகள்!! எண்ணிகள்!!
                    (எண்ணிகள்: சிந்தனையில் ஆழ்ந்திருப்போர்)

ஒரு சொல்லை மட்டும் மாற்றி என்னை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டாள் அந்தக் கவிஞை...

எனது நினைவுகளில் மிகவும் சுவையானவை அந்தப் பள்ளி நாட்கள்...

No comments:

Post a Comment

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...